in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 28) – இரஜகை நிலவன்

Images converted to PDF format.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19   பகுதி 20   பகுதி 21   பகுதி 22   பகுதி 23    பகுதி 24   பகுதி 25   பகுதி 26   பகுதி 27

சிங்கப்பூரிலிருந்து இறங்கிய விமானப்பறவையிலிருந்து இறங்கிய அரசு “வெளியே வருகிறேன். ஏர்ப்போர்ட் வாசலுக்கு வா.” என்று ஓட்டுநருக்கு ஆணை கொடுத்து விட்டு வாசலுக்கு வந்ததும் ஏறிக்கொண்டான்.

ஓட்டுநர் திரும்பிப் பார்த்த போது “ஆங்… முல்லுண்ட் மகாகவி காளிதாஸ் அரங்கத்துக்கு போப்பா” என்றான்.

விமானநிலையத்தின் வெளியே உலோக விளக்குகள் இரவை விரட்ட முயன்று கொண்டிருந்தன.

எதிர்பாராத விதமாக அங்கே பெரிய போகுவரத்து தடையாகி நின்று கொண்டிருந்ததால் அலைபேசியை எடுத்து “மிஸ்டர் ஜேம்ஸ், தின விடியல் ஆசிரியர்தானே பேசுகிறீர்கள்?” என்று கேட்டான்.

“ஆம் சார். சொல்லுங்கள்.”

“இங்கே கொஞ்சம் டிராஃபிக் ஜாமாகி விட்டது. நீங்கள் நிகழ்வை ஆரம்பியுங்கள். வந்து விடுகிறேன்.”

“ஆங்… சரி சார்.”

“நாம் ஏற்கெனவே பேசிக்கொண்ட படி என் வீட்டிற்கு…என் அப்பா அம்மாவிற்கு செய்தி போயிருக்காது என நினைக்கிறேன்.”

“வாய்ப்பில்லை சார். உங்கள் பெயர் போடாமல் செய்திகளும் விளம்பரங்களும் போட்டிருந்தால் அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

“சரி, நான் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன். முதல் அமைச்சர் வந்தாச்சா?”

“இன்னும் இல்லை சார். அவரும் சரியாக அரைமணி நேரத்தில் வருவதாக அவர் உதவியாளர் தொலைபேசியில் செய்தி சொன்னார்.”

“சரி. “ என்று கூறி விட்டு, குறிப்பெடுத்துக்கொண்ட பேப்பரை எடுத்து என்ன பேச வேண்டும் என ஒரு முறை ஒத்திகை செய்து கொண்டான்.

‘தின விடியல்’ மற்றும் மராத்திய மாநில எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் ‘தமிழ் இளம் வியாபாரக் காந்தம்’ விருது வழங்கும் விழா என பெரிய பதாகை அரங்கின் முன்னும் மேடையிலும் மின்னியது.

நிறைய தமிழ் அன்பர்களும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று “இதென்னப்பா ஆள் பேர் கூட போடாமல் இவ்வளவு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் கார் வந்து விட, முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் புடை சூழ முதல்வர் அரங்கத்திற்குள் நுழைய பின்னால் காரில் வந்து இறங்கிய தமிழரசைப் பார்த்த ஜேம்ஸ் , “சார் வாங்க. முதல்வர் வந்தாச்சு. மேடைக்கு போயிடலாம்.” என்றார்.

“கொஞ்சம் நெர்வஸாக இருக்கிறது. நான் வேண்டுமென்றால் முன் வரிசையில் அமர்ந்து கொள்ளட்டுமா?” என்றான் அரசு.

“அது நன்றாக இருக்காது. முதல்வருக்கு அடுத்து உங்களுக்கு இருக்கை அமைத்திருக்கிறோம். வாருங்கள்” என அழைத்துக் கொண்டு சென்றார்.

உள்ளே வந்து மேடையில் அமர்ந்து முதல்வருக்கு அறிமுகமாகி கை குலுக்கிக் கொண்டு சிரித்தவாறு திரும்பிய போது கடைசி வரிசையில் அப்பாவின் நண்பர் பாபு தென்பட்டார். நிகழ்வு முடிவதற்கு முன்  சொல்லாமல் கிளம்பிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டான் அரசு.

மேடையில் பலர் பேசிக்கொண்டிருக்க அடுத்ததாக “நமது இளந்தலைமுறை புதிய தமிழ் இளம் பிஸினஸ் மேன் திரு. தமிழரசு ஜே.கே. அவர்களுக்கு அவருடைய தந்தையும் தாயும் விருது வழங்குவார்கள்” என்று மேடையில் அறிவிப்பு வர கொஞ்சம் குழம்பிப் போன அரசு திரும்பிப்பார்த்தான்.

மேடையின் பின்னால், உள்ளேயிருந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் வந்து கொண்டிருக்க” மும்பையின் மிகப்பெரிய பிஸினஸ் மேன் திரு.ஜே.கே., மற்றும் அவரது மனைவியார் திருமதி.ராணி ஜே.கே. இருவரும் இணைந்து முதல்வரும் கலந்து கொள்ள இப்போது திரு.தமிழரசு அவர்களுக்கு இந்தச் சிறந்த விருதை வழங்குகிறார்கள்.” என திரும்பவும் அறிவிப்பு வர உள்ளே அமர்ந்த கூட்டம் மொத்தமாக எழுந்து கை தட்டி அமர்க்களப் படுத்த, மெதுவாக நழுவி விடலாம் என்று வேகமாக மேடையிலிருந்து இறங்கினான் அரசு.

“எங்கேடா போறே. வா. “ என எதிரே வந்த அப்பா ஜே.கே. அவனை மேடைக்கு இட்டுச் சென்றார்.

விருதை எடுத்து ஜேம்ஸ் முதல்வரின் கையில் தர அவருடன் ஜே.கே. மற்றும் ராணியும் விருதைப் பிடித்துக்கொள்ள கண்ணீருடன் வேறு வழியில்லாமல் ‘தான் மாட்டிக் கொண்டோம்’ என்று உணர்ந்தவாறு அம்மா அப்பாவை பார்த்துக் கொண்டே விருதை வாங்கினான்.

புகைப்படக் காரர்களும் வீடியோ காரர்களும் போட்டிப் போட்டு வித விதமாகப் போட்டோ எடுத்துத் தள்ள, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்த வேளையில் திருமதி. ராணி ஜே.கே. எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தாள்.

அதைக் கவனித்த தமிழரசு “அம்மா” என்ற அலறலோடு, கீழே விழுந்த அவளைத் தூக்கி “தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, வாங்கி அவள் முகத்தில் தெளித்து அவள் மயக்கம் தெளியாததால் “விலகுங்கள்” என்று சொல்லி அன்னையைத் தூக்கிக்கொண்டு காருக்கு ஓடினான். பின்னாலே ஜே.கே.யும் பாபுவும் கை கொடுத்துக்கொண்டே அவனோடு ஓடினர்.

(தொடரும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 2) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 22) – தி.வள்ளி, திருநெல்வேலி