in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 13) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12

வசாய் ரோடு பங்களாவில் ஜே.கே மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து கோட்டைக் கழற்றிய போது அழுகை சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

ராணி மூக்கைச் சீந்தி அழுது கொண்டிருந்தாள். ஜே.கே.வுக்கு கோபமும் எரிச்சலும் வந்தது. மெதுவாக படுக்கை அருகே வந்து அவளை ஆதரவாகத் தொட்டார்.

ராணி கோபத்தில் எழும்பிவிட “கொஞ்சம் உன் அழுகையை நிறுத்துகிறாயா? எதற்காக இந்தச் சொத்து.. எதற்காக இந்த அலைச்சல் எல்லாவற்றையும் உதறி விட்டு நேரே இமயமலை அடிவாரத்திற்கு போய் சாமியாரிடம் சரணடைந்து விடவா… இல்லை… எல்லாவற்றையும் இல்லாதவர்களுக்கு அள்ளி வீசி விட்டு காலையிலே இருந்து ‘அம்மா… தாயி..சோறு போடுங்கள்’ என்று பிச்சை எடுக்கவா…?”

“அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து ஏன் இப்படி என்னை அலைக்கழிக்கிறீர்கள்?”

”உனக்குக் கூடத் தெரியும் ராணி. ஒரே நேரம் சாப்பிட்டு விட்டு மற்ற இரண்டுவேளை பட்டினி கிடந்தது. இதே அரசு பிறப்பதற்கு ஆஸ்பத்திரிக்குப் போக பணமில்லாமல் யார் காலையெல்லாமோ பிடித்துக் கெஞ்சியது மறந்து போனதா?”

“அவன் என்னடாவென்றால் தன் காலிலேயே நிற்கப் போகிறேன் என்று வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான். நீ அவனை நினைத்து அழுது கொண்டிருக்கிறாய். நான் எதை நினைத்து அழ… எதை எடுத்தெறிந்து கோபப்பட..”

“ராணி நாம்பட்ட கஷடம் நம் ஒரே மகனும் படக்கூடாது என்பதற்காகத்தானே இந்த வேகமான ஓட்டமும் சம்பாத்தியமும். நான் நிறுத்தி விடத் தயார். அவனைப் போய் கூட்டிக்கொண்டு வருகிறாயா?”

“நீயாவது என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைத்தால்.. நான் களைப்படைந்து வரும்போது நீ அழுது கொண்டிருந்தால் எனக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.”

“நேற்றுத்தானே சொன்னேன். அதற்குள்ளே திரும்பவும் உன்னிடம் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டதே.”

”அவன் நேற்று முழுவதும் தாராவி, சுன்னப்பட்டி, சயான், நெரூல், பகுதியெல்லாம் சுற்றி விட்டு காந்திவிலி, பொய்சருக்குப் போயிருக்கிறான்.”

“அவனைப் பற்றி ஒவ்வொரு நிமிடமும் செய்தி சொல்ல ஆள் இருக்கிறதென்று சொன்ன பிறகும், சின்னப்பிள்ளை மாதிரி இருந்து அழுது கொண்டியுக்கிறாய்.”

“அவன் அலையட்டும்…  கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அவனுக்குப் பணம் தர மறுத்து வீட்டிற்குத் திரும்பச்சொல்லி அறிவுரை சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?”

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தித்தித்த காதல் (சிறுகதை) – ராஜேஸ்வரி

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 14) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்