in

mukil-dinakaranmukil-dinakaran Deivanayaki AyyasamyDeivanayaki Ayyasamy

உலகளாவிய சிறுகதை / குறுநாவல் / நாவல் போட்டி 2023-24 (பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாக புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு)

சஹானா இணைய இதழ்

உலகளாவிய சிறுகதை / குறுநாவல் / நாவல் போட்டி 2023-24

மொத்த பரிசுத்தொகை ரூபாய் 10,000

பரிசு பெறும் படைப்புகள் எங்கள் ஸ்ரீ ரேணுகா பதிப்பக செலவில் ISBN எண்ணுடன் அச்சுப் புத்தகமாக வெளியிடப்படும். பின்னர், Amazon மின் புத்தகமாகவும் வெளியிடப்படும். 

விரிவான விதிமுறைகள்

பொதுவான விதிமுறைகள் / விளக்கங்கள்

  • நமது 2021ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டிக்கு, இந்திய எழுத்தாளர்கள் மட்டுமின்றி… அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த முறையும் அதேப் போல், சிறுகதை,  குறுநாவல் மற்றும் நாவல் போட்டிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த நாட்டிலும் உள்ள தமிழர்கள் கலந்து கொள்ளலாம்.
  • எழுத்தாளரே நேரடியாய் கதையை “சஹானா” தளத்தில் வெளியிட வேண்டும், உங்கள் சார்பாக நாங்கள் வெளியிட இயலாது.
  • Spam பதிவுகளை தவிர்ப்பதற்காக, நீங்கள் submit செய்யும் கதைகள் நாங்கள் ஒருமுறை review செய்தபின் approve செய்யப்படுகிறது. பெரும்பாலும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் பதிவை நீங்கள் தளத்தில் காணலாம். அதிக படைப்புகள் வரும் போது, தவிர்க்க முடியாத காரணங்களால், சிலசமயம் approval process சற்று தாமதமாகலாம். பொறுத்தருள்க. நன்றி
  • User ID இல்லாதவர்கள் contest@sahanamag.com என்ற முகவரிக்கு Login Link கேட்டு செய்தி அனுப்பவும். நேரடியாய் நீங்கள் பதிவிடுவது மிகவும் சுலபம் தான். USER ID Create செய்த பின், எப்படி நேரடியாய் படைப்புகளை வெளியிடுவது என்ற DEMO Video Link உங்களுக்கு அனுப்பப்படும்.
  • அதிக எண்ணிக்கையிலான சிறந்த படைப்புகள் வெளியிடும் எழுத்தாளர் வெற்றியாளராய் தேர்ந்தெடுக்கப்படுவார்.  சிறுகதைகள் / குறுநாவல்கள் / நாவல்கள் மூன்றில் எதுவாக வேண்டுமானாலும் உங்கள் படைப்புகள் இருக்கலாம்.
  • சிறந்த படைப்பு என்பது, வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி, எத்தனை பேர் வாசித்தார்கள் ஆகிய 5 அளவீடுகளில் தேர்ந்தெடுக்கப்படும்.
  • ஜூன் 30, 2024 வரை “சஹானா” தளத்தில் பதிப்பிக்கப்படும் படைப்புகள் போட்டியில் சேர்க்கப்படும். தொடர்ந்து படைப்புகள் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பதை கவனத்தில் கொள்க.

சிறுகதைப் போட்டிக்கான விதிமுறைகள்

  • குறைந்தது 300 வார்த்தைகள் அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்கலாம். 300 கீழ் இருந்தால், அதற்கான பாயிண்ட்ஸ் உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் சேராது.
  • வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி ஆகிய நான்கு அளவீடுகளுக்கு தலா 10 பாயிண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 40ற்கு 20 பாயிண்ட்ஸ்’க்கு கீழ் உங்கள் கதை பெற்றால், அந்தக் கதைக்கான பாயிண்ட்ஸ் உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் சேராது. தரமான எழுத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில்  இப்படி செய்யப்படுகிறது.
  • எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதற்கான பாயிண்ட்ஸ், போட்டி முடிவில்… அதாவது ஜூலை 30, 2024 அன்று கணக்கெடுக்கப்பட்டு, வாசிப்புக்கான மதிப்பெண் வழங்கப்படும்.
  • அது தவிர, 25 சிறுகதைகள் பதிவிட்டு முடித்தால், 100 போனஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும்.  அதாவது முதல் 25 கதைகள் பதிவிட்ட பின் முதல் போனஸ் பாயிண்ட்ஸ், பிறகு 50 கதைகள் பதிவிட்ட பின் அடுத்த நிலை போனஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும். 20 மதிப்பெண்ணிற்கு கீழ் பெற்ற சிறுகதைகள் இதில் சேர்க்கப்படாது.
  • அதோடு, 25 சிறுகதைகள் எழுதி முடித்ததும்… எழுத்தாளருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும். அடுத்த 25 கதைகள் முடித்ததும் அதேப் போல் போனஸ் பாயிண்ட்ஸ் மற்றும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
  • முன்பே போட்டிக்கு அனுப்பிய கதைகளை மீண்டும் பதிவிட்டால், அது போட்டியில் இருந்து நீக்கப்படும்.

குறுநாவல் போட்டிக்கான விதிமுறைகள்

  • அத்தியாயங்களாக பிரித்து வெளியிட வேண்டும்.
  • ஒரு அத்தியாயம் 500 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம். 500 வார்த்தைகளுக்கு கீழ் ஒரு அத்தியாயம் இருந்தால், அதற்கான பாயிண்ட்ஸ் உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் சேராது.
  • குறுநாவல் எனில், குறைந்தபட்சம் 5000 வார்த்தைகள் அதிகபட்சம் 10000 வார்த்தைகள் வரை இருக்கலாம். முதல் அத்தியாயம் சப்மிட் செய்யும் போதே, அது நாவலா / குறுநாவலா என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். 5000ற்கு குறைவாக குறுநாவலின் வார்த்தை அளவு இருந்தால், போனஸ் பாயிண்ட்ஸ் சேர்க்கப்படாது.
  • வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி ஆகிய நான்கு அளவீடுகளுக்கு தலா 10 பாயிண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 40ற்கு 20 பாயிண்ட்ஸ்’க்கு கீழ் பெற்றால், அந்த அத்தியாயதிற்கான பாயிண்ட்ஸ் உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் சேராது. தரமான எழுத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்  இப்படி செய்யப்படுகிறது.
  • எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதற்கான பாயிண்ட்ஸ் போட்டி முடிவில், அதாவது ஜூலை 30, 2024 அன்று கணக்கெடுக்கப்பட்டு, வாசிப்புக்கான மதிப்பெண் வழங்கப்படும்.
  • ஒரு குறுநாவல் எழுதி முடித்தால், தனித்தனி அத்தியாயத்திற்கு வாங்கிய மதிப்பெண் தவிர, 50 போனஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும். ஒவ்வொரு குறுநாவல் முடிக்கும் போதும், இதுபோல் வழங்கப்படும்.
  • அதோடு,  ஒவ்வொரு குறுநாவல் எழுதி முடித்ததும்… எழுத்தாளருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

நாவல் போட்டிக்கான விதிமுறைகள்

  • அத்தியாயங்களாக பிரித்து வெளியிட வேண்டும்.
  • ஒரு அத்தியாயம் 500 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம். 500 வார்த்தைகளுக்கு கீழ் ஒரு அத்தியாயம் இருந்தால், அதற்கான பாயிண்ட்ஸ் உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் சேராது.
  • நாவல் எனில்… குறைந்தது 20000 வார்த்தைகள் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வார்த்தை வரம்பு இல்லை. 20000ற்கு குறைவாக நாவலின் வார்த்தை அளவு இருந்தால், போனஸ் பாயிண்ட்ஸ் சேர்க்கப்படாது.
  • வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி ஆகிய நான்கு அளவீடுகளுக்கு தலா 10 பாயிண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 40ற்கு 20 பாயிண்ட்ஸ்’க்கு கீழ் பெற்றால், அந்த அத்தியாயதிற்கான பாயிண்ட்ஸ் போட்டியில் சேர்க்கப்படாது. தரமான எழுத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்  இப்படி செய்யப்படுகிறது.
  • எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதற்கான பாயிண்ட்ஸ், போட்டி முடிவில்… அதாவது ஜூலை 30, 2024 அன்று கணக்கெடுக்கப்பட்டு, வாசிப்புக்கான மதிப்பெண் வழங்கப்படும்.
  • ஒரு நாவல் எழுதி முடித்தால், தனித்தனி அத்தியாயத்திற்கு வாங்கிய மதிப்பெண் தவிர, 100 போனஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும். ஒவ்வொரு நாவல் முடிக்கும் போதும் இதுபோல் வழங்கப்படும்
  • அதோடு,  ஒவ்வொரு நாவல் எழுதி முடித்ததும்… எழுத்தாளருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

உங்கள் பாயிண்ட்ஸ் வங்கி பற்றி அறிய 

உங்கள் பாயிண்ட்ஸ் வங்கியில் எத்தனை பாயிண்ட்ஸ் சேர்ந்துள்ளது என்ற விவரம் அவ்வப்போது சஹானா இணைய தளத்தில் அறிவிக்கப்படும். முதல் அறிவிப்பு 2023 டிசம்பர் இறுதி வாரம் வெளியிடப்படும்

போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, அதாவது ஆகஸ்ட் 2, 2024 வரை, இங்கு போட்டிக்காக பதியும் கதைகளை வேறு போட்டிக்கு அனுப்புவதோ, கதையை அப்படியே வேறு தளங்களில் பதிவதோ ஏற்புடையதல்ல. இங்குள்ள கதையின் இணைப்பை (Link) எடுத்து தாராளமாக பகிரலாம், கதையை அப்படியே பகிர வேண்டாம்.

போட்டிக்கான உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க இறுதிநாள் – ஜூன் 30, 2024

ஏதேனும் கேள்விகள் இருப்பின், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கேட்கலாம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

 

என்றும்  நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்

contest@sahanamag.com | editor@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

8 Comments

கடல் கடந்த காதல் ❤ (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி

மன்னிப்பாயா பெண்ணே (சிறுகதை) – Susri, Chennai