in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 6) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5

“என்ன அரசு உனக்கு உதவி செய்வதற்கு மும்பையே முன்னாலே வந்து நிற்கும். ம்…ம்… என்று சொல்… எத்தனையோ பாங்கிலிருந்து கியாரெண்டி கூட இல்லாமல் எத்தனைக் கோடி பணம் வேண்டுமென்றாலும் வாங்கித் தருகிறேன். ஆமாம் என்ன வியாபாரம் செய்வதாக உத்தேசம்?”

“இந்த மாதிரி பாங்க்… அது இதுவெல்லாம் என் அப்பா ஜே.கே. பெயருக்காக பணம் கொடுப்பார்கள். அதெல்லாம் வேண்டாமென்று தானே வெளியே வந்திருக்கிறேன். நீ உதவி செய்ய முடியுமா?” டீ வர, எடுத்து சுடச் சுட அருந்தியவாறு கேட்டான் தமிழரசு.

“ம்… கண்டிப்பாக… உன் கம்பெனிக்கு  ஒரு போன் போட்டு பேசிக் கொள்ளட்டுமா?”

“என் கம்பெனியா?” வாய் விட்டுச் சிரித்தான் அரசு. “டேய்.. எதுவும் வேண்டாம். சொந்தக் காலில் நின்று ஜெயித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன். என் கம்பெனி என்கிறாய். அது எல்லாம் என் தந்தையின் ஜே.கே க்ரூப் ஆஃப் கம்பெனி. அதற்கும் இந்த அரசுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. ஏதோ உன் நண்பன் என்கிற முறையிலே வந்து கேட்க வந்தேன். உன்னால் முடியுமா? முடியாதா?”

“என்ன மாதிரி உதவ வேண்டும்?”

“எனக்கு சின்ன வயதிலிருந்தே கப்பல் போக்குவரத்தில் மிகவும் விருப்பமுண்டு. கப்பல் கம்பெனி… அல்லது அதைச் சார்ந்த பிரைட் ஃபார்வார்டிங் கம்பெனி ஏதாவது ஒன்று ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“என்ன செலவாகும் அரசு?”

“ஐம்பதிலிருந்து எழுபது லட்சமாகும்.”

“இவ்வளவு பெரிய பணம் வேண்டுமெனில் என் அப்பாவிடம் கேட்கவேண்டும். அவர் உடனே உன் அப்பாவிற்கு போன் பண்ணிக் கேட்பார்.”

“ஆமாம்…சுந்தர்”

“நீ ஒரு சரியான மரமண்டை. நானே என் தந்தையின் தயவிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவருடைய பணத்தில் ஒரு காசு கூட இல்லாமல் பெரிய மனிதனாக மாறிக் காட்டத் துடித்துக் கொண்டிருக்கிறேன்… நீ என்னடாவென்றால்….”

“இதோ பார் சுந்தர். ஒரு சல்லிக் காசு கூட வேண்டாமென்று உதறிவிட்டு ரயிலுக்கு டிக்கெட் எடுக்க பணமில்லாமல், டிக்கெட்டில்லாமல் வசாயிலிருந்து காந்தவிலிக்கு வந்து அங்கிருந்து நடந்து வந்து உன்னைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறேன். அதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள். இப்போது அடுத்த வேளைக்கென்ன செய்யப்போகிறேன் என்று தெரியாது. வெளியே போனால் நான் ஒன்றுமில்லாத இந்தியப் பிச்சைக்காரர்களில் ஒருவன். இப்போது சொல்லு, எனக்கு உதவமுடியுமா? முடியாதா?” என்றான் தமிழரசு.

“ஏண்டா போக்கிரி மாதிரி பேசுகிறாய்?. உன் அப்பா சம்பாதித்து வைத்திருக்கின்ற சொத்து உனக்குப் பின்னால் பத்திருபது வாரிசுகள் இருந்து சாப்பிட்டாலும் ஒரு பகுதி கூட குறையாது. அதை விட்டு விட்டு என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே? இது உனக்கே நன்றாக இருக்கிறதா? போய் அப்பாவிடம் நல்ல பிள்ளயாக சேர்ந்து இன்னும் பணத்தைப் பெருக்க வழி செய். ஏன் இப்படி கெட்ட பையானாக என் காலில்… உன் காலில் என வீண் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறாய்.”

“சுந்தர் உன்னிடம் நான் வந்தது அறிவுரை கேட்க அல்ல. உரிமையோடு நண்பன் என்ற முறையில் உதவி கேட்க வந்தேன். நீ எனக்கு பணம் சும்மா தர வேண்டாம். வெளியே எத்தனை பைசா வட்டியோ அத்தோடு மொத்தமாக என் வியாபாரத்தில் நான் கொடிகட்டிப் பறக்கும் போது திருப்பி தந்து விடுகிறேன்” என்றான் தமிழரசு.

மெதுவாக சிரித்துக் கொண்ட சுந்தர் “நீ நினைக்கிற மாதிரி பிஸினஸ் ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமில்லை. திமிங்கிலங்களும், யானைகளும் நிறைந்த உலகம். கொஞ்சம் அசந்தாய் என்றால் உன்னையும் சேர்த்து ஏப்பமிட்டு விட்டுப் போய் விடுவார்கள்.” என்றான்.

“இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்?”

“ஒழுங்காக உன் தந்தையின் வியாபாரத்திற்கு உதவியாக இரு.”

‘உன்னால் உதவி செய்ய முடியுமா? முடியாதா?”

எதுவும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கினான் சுந்தர். உடனடியாக எழுந்து நடந்தான் அரசு.

******************************************************************

வாசுதேவன், தமிழரசு ரோட்டோரத்தில் தளர்வாக நடந்து போவதைப் பார்த்து விட்டுக் காரிலிருந்து இறங்கி “எங்கே போகிறாய் அரசு? ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறாய்? கார் ரிப்பேராகி விட்டதா? எங்கேயாவது இறக்கி விடட்டுமா?” என்று கேட்டான்.

ரொம்பவும் களைப்பாக உணர்ந்த தமிழரசு “ஒன்றுமில்லை. என்னைக் காந்தவிலி ரெயில்வே ஸ்டேசனில் இறக்கி விட்டு விடு.” என்றான்.

“ஏன்… கார் கொண்டு வரவில்லையா? வசாய்தானே போக வேண்டும். நானும் அங்கேதான் போகிறேன். உன்னையும் வீட்டிலே இறக்கி விட்டு விடுகிறேன்.” என்றான் வாசு.

”சரி” என்றவன், வசாய் ரோட்டிற்கு திரும்பவும் எங்கே போவது? வீட்டிற்கு போக வேண்டு… அது இனி முடியாத விஷயம் என்பது தீர்மானமாகி விட்டது’

‘அத்தை பத்மினி வீட்டிற்கும் போனால் அங்கே கண்டிப்பாக என்னை அழைத்துச் செல்ல அப்பாவின் நண்பர் பாபு வந்து அமர்ந்திருப்பார்.’

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆற்றங்கரை பிரசங்கம் (சிறுகதை) – அர்ஜுனன்.S

    காவேரி மாமி! (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்