in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 15) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14

திலக்கும், அரசும் தன் உடைமையோடு காந்திவிலி ரயில் நிலையம் வந்த போது, சர்ச்கேட் போகும் ரயில் வந்து சேர, இருவரும் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டனர்..

உள்ளே வந்த போது “ஒழுங்காக என் காரிலேயே போயிருக்கலாம்” என்றான் திலக்.

“பரவாயில்லை. ரயிலில் சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம். இப்போது… என்ன தாதர் மாறி  கப்போலி ரயில் பிடித்தால் இரண்டு மணி நேரத்திற்குள் கப்போலி போய் விடலாம். அங்கிருந்து உங்கள் தங்கை பூனம் நடத்தும் தொழிற்சாலைக்கு எவ்வளவு தூரம்?” மற்ற பயணிகளுக்கு வழி விட்டவாறு கேட்டான் அரசு.

“ஒரு மணி நேர பயணம். பூனம் கார் அனுப்புவாள். இல்லை என்றால் போன் பண்ணிக் கேட்டு விட்டு நாம் ஒரு டாக்சி வைத்துப் போய் விடலாம்.”

“வீணாக எதற்கு? பஸ் கிடையாதா?” என்று கேட்ட அரசுவிடம் “என்ன காரிலே போய் சலித்து விட்டதா?” என்று கேட்டான்.

“அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு மட்டுமல்லாமல் இனி கார், டாக்சி என்று எடுத்தவுடனே செலவுகள் முடியாதோ?”

“அது நீங்கள் நினைக்கிற அவசர உலகத்தில் ஒத்து வராது என்று நினைக்கிறேன். வாருங்கள். கார் வந்து நிற்கிறது. “ என்றவாறு கப்பொலி இரயில் நிலையத்திற்கு வெளியே நின்ற காரில் ஏறினார்கள்

அலுவலகம் வந்த பிறகு உள்ளே வந்தனர்.

எல்லோரும் அந்தச் சிறிய அலுவலக அறையில் வேகமாக பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். மூலையில் ‘லேப் டாப்’ கம்ப்யூட்டரோடு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளைக் காட்டிய திலக், “இதுதான் பூனம். என் தங்கை. ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே… அமெரிக்க மாப்பிள்ளையோடு மூன்று மாத திருமண வாழ்க்கை நடத்தி விட்டு… அவனை விபத்தில் பறி கொடுத்து விட்டு வந்தவள்.” என்றவன் “ஹாய் பூனம். மீட் மிஸ்டர் அரசு” என்றான் திலக்.

அரசு அவளைப் பார்த்துக் கும்பிட, “கமான் யார்” என்று கை நீட்டினாள் பூனம்.

அவன் வேறு வழியில்லாமல் அவளுடைய கையைப் பற்றிக் குலுக்கிக் கொள்ள “ஹாய் ஹேண்ட் சம். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?” என்று சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் பூனம்.

“அரசு ஏதோ வேற்றுக் கிரகத்துக்கு வந்து விட்டதைப் போல உணர்வு வந்ததா? கவலைப் படாதீர்கள். அவள் அவ்வளவு ஜாலியாகப் பழகக் கூடியவள். தப்பா அவளிடம் வாலாட்டினால்….”

“அய்யோ இன்னும் பக்கத்து வீட்டுக் காரன் விந்தி விந்திதான் நடக்கிறான். எவ்வளவு அழகாக இருக்கிறாளோ… அவ்வளவு வலிமையானவள்” என்றான் திலக்.

“பொய்… சும்மா புகழாதே. அரசு. நீங்கள் சொல்லுங்கள் நான் எப்படி இருக்கிறேன்.”

“தவறாக எடுத்துக் கொள்ள் மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு சினிமா ஹீரோயின் பூனம் தில்லான் இருந்தாளே… அவள் மாதிரியே இருக்கிறீர்கள். ஒரு கணம் எனக்கு அந்தக் கதாநாயகிதானோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது.”

காதைப் பொத்திக் கொண்டவள் “புளித்துப் போய்விட்டது. பார்க்கிறவர்கள் எல்லோரும் பூனம் தில்லான் மாதிரி இருக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள்.”

“வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமானால்…. ம்…. முழு நிலா… மழையில் நனைந்தது போல…..”

“ஓ… பெரிய கவிஞர் போல இருக்கிறது.”

“ஏய் இதென்ன வந்த விசயத்தை விட்டு ஏதோதோ பேசிக்கொண்டு …. பூனம் இவரு உன்னுடைய பார்ட்னர். இனி இந்த பூனம், திலக் அனிமல் பீட் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு ஒரு டைரக்டர்.”

“உனக்கு ஆட்சேபனை இல்லையே.”

“என் அண்ணாவே… நீதான் இந்தக் கம்பெனிக்கு எல்லாம். இதிலே என்னை ஏன் கேட்கிறாய்.? அதோடு ஒரு அழகிய இளைஞன் பார்த்தாலே கொஞ்சம் விசயம் தெரிந்த ஆள்மாதிரி இருக்கிறார். கண்டிப்பாக கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வேண்டுமானால் நான் மற்ற வேலையாட்களோடு இருந்து கொள்கிறேன். அவர் இந்தக் கேபினுள்ளே அமரட்டும்.” என்றாள் பூனம்.

“அதெல்லாம் வேண்டாம்.” என்ற திலக் அரசு உங்களைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டாம். அனுபவத்திற்கு முயற்சி செய்யுங்கள். கொஞ்ச நாள் கம்பெனியைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் வரும் அனுபவத்தில் கூடிய விரைவில் நீங்களே என்ன செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வரலாம்” என்றான்.

”என்னிடம் என்ன மறைக்கப் பார்க்கிறீர்கள்? என்னைப் பற்றி தெரியுமில்லை. எந்த அளவிற்கும் இறங்கக் கூடியவள். நான்… நீ எதையாவது மறைத்தால் அதைத் தெரிந்து கொள்ள உன்னை விழத்தட்டக் கூட தயாராக இருப்பவள் நான்.” என்று பூனம் சொல்ல, “ஆம்… அரசு. இவளிடம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள். ஒரு மாதிரி டைப்” என்ற திலக்கிடம் “என்ன அண்ணன் தங்கை மாதிரியா பேசிக்கொள் கிறீர்கள்?” என்று கேட்ட போது, “என்ன செய்வது அப்படியே பழகி விட்டோம். ஆமாம் இவருக்கு தங்க இடம் …உணவு எல்லாம்… “என்று பூனம் கேட்டபோது “நீயிருக்கும் வரை நம் வீடு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்” என்று சிரித்தான் திலக்.

“போடா தடியா! எல்லாவற்றிற்கும் சிரிப்புதான். சீரியஸாக இரேன்” என்று கத்தினாள் பூனம்.

“சரி..சரி… நம்முடைய ஆச்சி… மெட்ராஸ் காரங்க பக்கத்திலே இருக்காங்களே…அங்கே தங்க வச்சிடலாமுன்னு முடிவு செய்திருக்கிறேன்” திலக் சொன்னான்.

“ஒன்று மட்டும் மனதில் வைத்துக் கொள். தவறு நடக்க வேண்டுமென்றால்…” என்று பூனம் சொல்வதற்குள் அரசு இடை மறித்து “ஒருசில சொந்த காரணங் களுக்காக தான் அந்த காஞ்சனா ஆச்சி வீடு. நீங்கள் வேறு விதமாக நினைக்க வேண்டாம்.” என்று சொன்னான் அரசு.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கூர் வாள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    புது வசந்தம் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி, சென்னை