in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 20) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19

திலக் உணவை முடித்துக் கொண்டு  ஆபீஸ் பையனிடம் வாங்கிவரச் சொன்ன பான் (வெற்றிலை) எடுத்து போட்டுக் கொண்டபோது, மொபையில் குயிலாகியது.

எடுத்து அரசுவிடமுள்ள மொபைல் எண் என்பதை தெரிந்து கொண்டு “அரசு, சிங்கப்பூர் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“சிங்கப்பூர் வேலை முடிந்து ஒஸாகா வந்தாச்சு. உன்னுடய சிங்கப்பூர் கஸ்டமர் உனக்கு பணம் அனுப்பி விட்டான். புதிய ஆர்டரும் அனுப்பி இருக்கிறான். இ..மெயில் பார்த்தாயா?”

“இல்லை. பணம் வந்து விட்டால் ஒரு புது மெஷின் டோக்கியோவிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றிருந்தேன்.”

“உடனே இ..மெயில் பார்த்து வங்கியைத் தொடர்பு கொண்டு பணம் வந்தது தெரிந்ததும் எனக்கு போன் பண்ணு. நான் ஊர் திரும்புவதற்கு முன்னால் டோக்கியோ போய் உன் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வருகிறேன்.”

“ஏய் நீ ஏன் வீணாக அலைகிறாய்?”

“நான் வேறு யாருக்காகச் செய்யப் போகிறேன். உடனே போன் பண்ணு.”

“சரிப்பா நீ போன காரியம் என்னாயிற்று.”

“சிங்கப்பூர் மற்றும் ஒஸாகாவில் என் ஷிப்பிங் பார்ட்னர்களோடு ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஐப்பதுக்கு ஐம்பது லாப சதவிகிதம் பிரித்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். இந்த அளவிற்கு எளிதாக முடிந்து விடும் என்று நம்பவே இல்லை. எவ்வளவு பெரிய நெட் ஒர்க் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அமெரிக்கா, ஆப்பிரிக்கா எல்லாம் கூட இவர்கள் மூலமாக நான் புதிய கப்பல் வர்த்தக (ஷிப்பிங்) தொடர்பு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.”

“வெரிகுட். அப்புறம்?”

“ம்.. ஒரு பெரிய விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இங்கே ஒஸாகா பிராஞ்ச் ஷிப்பிங் பார்ட்னர் அண்ணனுக்கு எப்படியாவது இந்தியாவிலே ஒரு கால் நடைத் தீவனம் கம்பெனி ஆரம்பிக்க ஆசை. இவர்கள் இன்னும் பழைய இந்தியாவை நினைத்துக் கொண்டு வேலையாட்களிடம் சம்பளம் குறைவு, அதனால் தயாரிப்பு (புரொடக்சன்) செலவு குறைவு என்று கணக்கிட்டுக் காட்டினான்.ரொம்பத் துல்லியமாக கணக்குப் போட்டு வைத்திருக்கிறான். பாராட்ட வேண்டும். அப்புறம் நாசிக்கில் ஏற்கெனவே ஒரு பழைய நிலம் விலைக்கு வந்த ஞாபகம் வர, அதையே வாங்கி வாங்கி விடச் சொல்லி இருக்கிறேன். அதைப் பற்றித் தெரியுமா? அங்கே தொழிற்சாலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து விஷயத்தை விவரமாகச் சொன்னேன்.அவன் சொன்னது தான் எனக்கே ஆகாயத்திற்கு தூக்கிக் கொண்டு போன ஆச்சரியமாகி விட்டது.”

“சஸ்பென்ஸ் வைக்காதே சொல்லு.”

“ஆரம்பிக்கிறதிலிருந்து மெஷினரி கொண்டு வந்து நிறுவி தயாரிப்பு ஆரம்பிக்கும் வரை அவர்கள் செலவு, இயந்திரங்கள் இறக்குமதி செய்து சுங்கவரி கட்டாமல் இருக்க நூறு சதவீதம் ஏற்றுமதி கம்பெனியாக சுங்க இலாக்காவிற்கு தெரிய படுத்தி சுங்க இலாகாவில் (கஸ்டம்ஸ்) பதிவு (ரெஜிஸ்டிரேஷன்) செய்து செலவுகளை குறைத்து செலவில் ஏற்றுமதி ஆரம்பித்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.”

“சரி மேலே சொல்லுப்பா. உன் போன் பில் எகிறிக் கொண்டே போகிறது.” என்றான் திலக்.

“பில்லைப் பற்றிக் கவலைப்பட்டால் காரியம் நடக்காது திலக். அந்த கம்பெனி நிர்வாகம் முழுவதும் என் தலைமையில் என் அம்மா பெயர் தாங்கி ‘ராணி அனிமல் பீட்ஸ்’ என்ற அளவில் உருவாகப் போகிறது.”

“ஜப்பானில் இருந்து அவர்கள் நிர்வாகம் செய்வார்கள். அடிக்கடி இந்தியா வந்து போவார்கள். சரியாக இலாபத்தைக் கணக்கிட்டு (நெட் டு நெட் ஷேர்) நாற்பது அறுபது சவீதம் என்று பேசியுள்ளார்கள். நாளை ஒப்பந்தம் கையெழுத்துப் போடுகிறேன். ஒரு உதவி செய். நான் இ..மெயில் தந்த நாசிக்காரன் போன் முகவரி எல்லாம் அனுப்புகிறேன். நாளைக்கே, (அவனைப்பார்த்து பன்னிரெண்டு ஏக்கர் நிலம் என்று சொன்னான்) அந்த இடத்தை பேசி முடித்து எப்படி பணம் தர வேண்டும், எப்படி கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற விஷயங்களை கொஞ்சம் தொடர்பு கொண்டு சொல்கிறாயா?”

“அரசு சூப்பர்டா. எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாய். நானே உனக்கு அசிஸ்டெண்டாக சேர்ந்து விடலாம் போல இருக்கிறது.”

“சும்மா கிண்டல் பண்ணாதே திலக். நீ தானே எனக்கு குருவாக இருந்தவன். அந்த இடத்திலேயே இரு. இன்னும் உன் வியாபாரத்தை பெருக்குவதில் உதவி செய்யப் பார்க்கிறேன். அப்புறம்… எங்கள் அப்பா ஆபீஸிலிருந்து யாராவது உன்னைத் தேடி வந்தார்களா?”

“இல்லையே ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“இல்லை. கொஞ்சம் சந்தேகம். என் அப்பாவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் உன்னிடம் வந்தது, கம்பெனி போன செய்தி எல்லாம் அவருக்குப் போயிருக்கும்.”

“இல்லை, உனக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா?”

“இல்லை திலக். ஆனால் ஏனோ என்னால் உனக்கு இடைஞ்சல் நேரப்போகிறது என்று உள் மனம் சொல்கிறது.”

“அட போப்பா, ஜப்பானிலே போயிருந்து கொண்டு என்னைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். போன வேலையை ஒழுங்காக செய்து முடித்து விட்டுத் திரும்பு.”

“சரி.சரி.. உன்னைக் கொஞ்சம் கவனித்துக்கொள். ஏதாவது பிரச்சினை என்றால் சொல். உடனடியாக போன் பண்ண மறக்காதே. ம்… அப்புறம் மறந்து விட்டேன். உன் தந்கை பூனம் உன் கல்யாண விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். என்னாயிற்று?”

“முதலிலே பூனத்திற்கு ஒரு வழி பண்ண வேண்டும். இரண்டு மூன்று இடங்களிலே அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று தெரிந்தவுடன் தட்டி விட்டு விட்டார்கள். அவளுக்கு எங்கேயாவது அமைந்து விட்டால் அப்புறம் பார்க்கலாம்.”

“யேய்.. நீ சொல்றதைப் பார்த்தால்… யாரையாவது லவ் பண்றியா?”

“அது நீ… வந்த பிறகு பேசிக்கொள்ளலாம்.”

“படவா சொல்லு ஆமாவா இல்லாயா?”

“ஆமா.”

“யாருடா?”

“எல்லாம் மும்பைத் திரும்பு நேரிலே பேசிக்கலாம்.” என தொடர்பைத் துண்டித்தான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொலைஞ்சது யார் (சிறுகதை) – சுஶ்ரீ

    இணையற்ற இந்திய இளைஞர்களே (புத்தக விமர்சனம்) – ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்