in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 28) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16      பகுதி 17     பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22    பகுதி 23     பகுதி 24     பகுதி 25     பகுதி 26    பகுதி 27

காவ்யா கொஞ்சம் கொஞ்சமாக ஓரிரு நாட்களிலேயே சகஜ நிலைக்கு வந்தாள். இயல்பிலேயே ருக்மணி தேவியும், ஆதர்ஷும் அன்பாக இருந்தது அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது ..அத்துடன் மாயாவின் தோழமை அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது .ரெண்டு பேரும் ஒத்த உணர்வும்.. ஒத்த குணமுமாக .. இருந்ததால், விரைவில் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகி ப்ரெண்ட்ஸ் ஆகி விட்டார்கள் .

பரமேஸ்வரன் கீழே இருக்கும் நேரங்களில் காவ்யா கீழே இறங்கி வருவதை தவிர்த்து விடுவாள்.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்வாள்.

ஆனால் பரமேஸ்வரன் அவளிடம் அன்பொழுகப் பேசுவார். என்ன தான் இருந்தாலும் தன் அந்தஸ்தை நிலை நிறுத்திய அன்பு மருமகள் அல்லவா ..

மாயாவுக்கு அவருடைய பேச்சு சிலசமயம் மனதை நெருடும்.. தன்னிடம் தங்கச்சி மகள் என்ற அன்பு கூட இல்லாமல் பேசுபவர்…பணக்கார மருமகளிடம் எவ்வளவு பிரியமாக, பாசமாக பேசுகிறார். அப்போ அவருக்கு அப்படி பேசத் தெரியாது என்று நினைத்தது தவறு… பிடித்தவர்களிடம் மட்டுமே தன் பாசத்தை காண்பிப்பார் என்பதே உண்மை என்று தோன்றியது.

காவ்யா பேரில் சின்ன பொறாமை கூட வந்தது. அடுத்து அவள் “மாயாக்கா..மாயாக்கா” என்று சுற்றி வரும்போது அவள் மனம் இளகிவிடும்.. பாவம் இந்த அப்பாவி பெண். இவளும் தன்னைப்போல தான். அன்புக்கு ஏங்கும் பணக்கார குழந்தை. காவ்யா பேரில் அவள் கொண்ட அன்பு பல மடங்காய் பெருகியது.

ஒரு வாரம் ஓடி விட ,காலேஜ்கு போட்டிருந்த லீவு முடிந்தது. அன்று காலேஜ் கிளம்பவேண்டும். தான் கம்பெனி போகும் போது அவளைக் கொண்டு போய் காலேஜில் விட்டு விடுவதாக ஆதர்ஷ் சொல்லியிருந்தான். அவளுக்கென்று அவள் அப்பா கொடுத்திருந்த பி.எம்.டபிள்யூ காரே வாசலில் தான் நின்றிருந்தது.

ஆதர்ஷ் மனதை புண்படுத்த வேண்டாம் என்ற காரணத்தினால்.. ” இந்த வாரம் நீங்க கொண்டு விடுங்க.. அடுத்த வாரத்திலிருந்து நானே போய்க் கொள்கிறேன்” என்றாள்.

பத்து நாளைக்குப் பிறகு காலேஜ்… பிரண்ட்ஸ்ஸைப் பார்த்ததும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது ..ஓடி வந்து அவளுடைய பிரண்ட்ஸ் அவளை சூழ்ந்து கொண்டு பேசினார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு தயக்கம் …

“காவ்யா உன் கல்யாணம் செம கிராண்ட்ப்பா.. வேளா வேளைக்கு சாப்பிட்டு வயிறு வெடிச்சிடும் போல இருந்துச்சு அவ்வளவு ஐட்டம்” என்றாள் சாப்பாட்டு ராமியான சுஜிதா.

“டெக்கரேஷன் எல்லாம் பிரமாதம் .உங்க அம்மா தான் யாருன்னு நிருபிச்சிட்டாங்க. சி.எம்.. மினிஸ்டர்ஸ்.. என ஒரே தடபுடல் தான் போ ..நாங்க நிறைய போட்டோஸ் அங்கங்கே எடுத்தோம். உன் கிட்ட தான் நெருங்கவே முடியலடி. ஒரே கூட்டம். அதிலும் நிறைய பெரிய பெரிய ஆட்கள்..வி.ஐ.பி.ஸ். “

“காவ்யா நீ இன்னும் கல்யாணத்துக்கு ட்ரீட் கொடுக்கல. எப்படீ ட்ரீட் ..பெரிய ஸ்டார் ஹோட்டல்ல ரிச்சா டின்னர் கொடு..”

காவ்யா பதில் பேசாமல் தன் உணர்வுகளை வெளிக் காட்டாமல் ..சிரித்துக் கொண்டிருக்க ..

ராதிகா மட்டும் மனசு ஆற்ற மாட்டாமல்… ” காவ்யா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. நீ எப்படி இதுக்கு சம்மதிச்சே? ..உங்க அப்பா அம்மா உன்னை மிரட்டி அந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருப்பாங்க.பாவம் ஜெய் ப்ரோ.. ஏழ்மையில பிறந்தாலே காதலிக்கிறது பாவம். அதுவும் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிக்கிறது ரொம்பவே பாவம். “

“என்னடி இது இப்படி இருக்க ..நாங்க இதை எதிர்பார்க்கல ஜெய் பாவம்.. உன்னையே சுத்தி சுத்தி வந்தாரு ..உனக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் சிங்கப்பூர் கிளம்பிப் போயிட்டாரு. அவர் மனசு எவ்வளவு பாடு பட்டிருக்கும் ” என்றாள் தீபிகாவும்.

“ஜெய்ய மட்டும் சொல்றே.. காவ்யா மட்டும் என்ன நிம்மதியா சந்தோஷமா கல்யாணம் பண்ணியிருப்பான்னா நினைக்கிறீங்க? அன்னைக்கு காவ்யாவும் சுரத்தாகவே இல்ல. கல்யாணத்தன்னைக்கு ரொம்ப வாடிப்போயிருந்தா. “

ஆளாளுக்கு அவர்களுடைய கருத்தைச் சொல்ல, அன்று முழுக்க வகுப்பில் அவளுக்கு கவனமே இல்லை. எப்படி படிப்பில் திரும்ப கவனத்தை கொண்டு வருவது என்ற கவலை கூட வந்தது. நேற்று முன் தினம் நடந்தது அவள் நினைவுக்கு வந்தது ..அந்த நினைவு இன்னும் அவளை தொந்தரவு பண்ணியது.

காவ்யா அவளுடைய ரூமில் தன் துணிகளை அங்கிருந்த கப்போர்டில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஆதர்ஷ் கதவை தட்டி..”.உள்ளே வரலாமா காவ்யா” என்றான்

“வாங்க ஆதர்ஷ் ..சும்மா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுகிட்டு இருக்கேன்”

“நாளைக்கு நாம கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கு. நீ ஃப்ரீயான்னு கேக்கத்தான் வந்தேன் “

“போகலாம் அதர்ஷ்.. எனக்கு நாளைக்கு பெருசா ஒன்னும் வேலையில்ல..இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் போகனும். “

“அதான் அதுக்கு முன்னாடி இந்த வேலைய முடிச்சுடலாம்”

“என்ன வேலை ஆதர்ஷ்! எங்க போறோம்னு தெரிஞ்சுக்க லாமா? ஆட்சேபனை இல்லைன்னா சொல்லுங்க” என்று தயங்கியவாறே கேட்டாள் காவ்யா.

“நோ.. நோ..சொல்வதில ஒன்னும் பிரச்சனையில்ல. முன்னாடியே பேசி வைச்சது தானே. நாம நாளைக்கு போய் டைவர்ஸ் அப்ளை பண்ணிடலாம் ..இப்ப அப்ளை பண்ணினா தான் ஒன் இயர்ல நம்மளுக்கு டைவர்ஸ் கிடைக்கச் வசதியா இருக்கும் ..”

ஒருகணம் ஸ்தம்பித்துப் போனாள் காவ்யா .ஏற்கனவே மூவரும் பேசியது தான் என்றாலும்.. என்ன மனிதன் இவர் எவ்வளவு நேர்மையாக யோசிக்கிறாரு ..

மறுநாள் போய் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்துக்கு அப்ளை பண்ணி விட்டு வந்தார்கள்.

அவர்கள் கோர்ட்டுக்கு போய் விட்டு வந்த போது ஹாலில் உட்கார்ந்திருந்த ருக்மணி அவர்களைக் கண்டதும் ..

“ஒரு நிமிஷம் ஆதர்ஷ் ..காவ்யா ரெண்டு பேரும் கொஞ்சம் இருங்க” என்று எழுந்து உள்ளே சென்றாள். இருவரும் ..அவர் என்ன செய்யப் போகிறாரோ.. கேட்கப் போகிறாரோ ..என்ற எண்ணத்தில் யோசித்துக் கொண்டிருக்க.. வரும்போது,

கட்டிச் சூடனை எடுத்து வந்தவள்,” ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அம்சமா இருக்கு ..நீங்க வெளியில போனா எவ்வளவு பேர் கண் படும் தெரியுமா ..ஒருத்தர் கண்ணப் போல ஒருத்தர் கண்ணு இருக்காது” என்று நிற்க வைத்து இருவரையும் மூன்று தடவை இப்படியும் அப்படியுமாக சூடன் சுற்றினார்.

” பாரு.. இந்த சூடனை கொண்டு போய் தலை வாசலில் வச்சு பொறுத்திட்டு வா ” என்று தீப்பெட்டியும் கொடுத்தாள் .

சலனமற்று ..ஆதர்ஷ் மாடிப்படி ஏறினான்.

ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த காவ்யாவின் மனசு இன்னும் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்தது. பாவம் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இந்த பெரிய மனுஷியை ஏமாற்றுகிறோம் என்று குற்ற உணர்வு அவளை சங்கடத்தில் ஆழ்த்தியது…

விஷயம் தெரிய வரும்போது அத்தை என்னை பத்தி என்ன நினைப்பாங்க. ..மனம் கூசியது ..

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யானையாய் அவர் இருந்தார் (சிறுகதை) – சுஶ்ரீ

    யார் அந்த அவன்? (சிறுகதை) – வைஷ்ணவி