in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 16) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15

பழைய நினைவுகளெல்லாம் மனதில் அலைமோத ,காவ்யா கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வருகை தின செலிப்ரேஷனை வேடிக்கை பார்த்தபடி ஜெய்யை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள் …

“காவ்யா நீ இங்க இருக்கியா…ராதிகா, சுஜா எல்லாரும் முன்னால நின்னுகிட்டிருந்தாங்க. அவங்க தான் சொன்னாங்க நீ இங்க தனியா இருக்கேன்னு. உன் பிரெண்ட்ஸ் எல்லாம் முன்னால நிக்கிறாங்களே… நீ அங்க போகலையா இங்கே தனியா உட்கார்ந்துகிட்டிருக்கே” என்றபடி அவள் அருகில் அமர்ந்தான் ஜெய்.

அன்று பீச்சில் பார்த்து பேசிய பிறகு, இன்றுதான் அவனைப் பார்க்கிறாள். நிமிர்ந்து அவன் கண்ணை பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். 

“ஹாய் பேபி.. ஏன் இவ்வளவு டல்லா இருக்க? இப்ப என்ன ஆயிடுச்சு..இவ்வளவு சோகம் ..உங்கப்பா என்ன பொண்ணு பாக்க தானே வருவாங்கன்னு சொல்லியிருக்காரு. இப்பவே மாப்பிள்ளை தாலி எடுத்துட்டு வந்து உன் கழுத்துல கட்டவா போறான்? எதுக்கு இவ்வளவு டென்ஷன்?”

“இல்ல பேபி… எங்கப்பா எவ்வளவு சொன்னாலும், முரட்டுப் பிடிவாதத்த விட மாட்டேங்கறாரு..அவர் சொன்னதையே தான் சொல்றாரு ..அவருடைய பிசினஸ் பார்ட்னர் பையன் ஆதர்ஷைத் தான் நான் கல்யாணம் பண்ணனுமாம்..அவன் பிஸினஸ நல்ல கவனிச்சுகிறானாம்…ரொம்ப கெட்டிக்காரப் பையனாம். பின்னாடி எங்க கம்பெனியும் அவன் நல்லா கவனிச்சுக்குவானாம். இவரு கம்பெனியை கவனிக்க ஆள் எடுக்குறாரா? பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரா? ஒன்னும் புரியல.

இதுல நம்ம விஷயத்தை நான் அவர்கிட்ட இன்னும் ஓபன் பண்ணல.. பொதுவாக கல்யாணம் வேண்டாம்னு மட்டும் தான் சொன்னேன். அவங்க ஸ்டேட்டஸ், அவங்க பிரெண்ட்ஸ், அவங்க அந்தப் பணக்கார கும்பல பத்தித் தான் அவங்களுக்கு கவலை. அவருடைய பொண்ணு மனசப் பத்தி கவலைப்பட்டதா தெரியவில்லை.

எங்கம்மாவுக்கும் லேடிஸ் கிளப் பிரண்ட்ஸ் முன்னாடி தன்னுடைய பெருமையும், அந்தஸ்தையும் நிலைநாட்டனும். அதுக்கு ஒரு பெரிய இடத்தை பிடிச்சு என்னை தள்ளி விட்டாத்தான் அவங்க நிம்மதியா இருப்பாங்க..அவங்களுக்கு கல்யாணம் படு கிராண்டா நடக்கனும்… எல்லா மினிஸ்டர்ஸ்… சி.எம் எல்லோரும் வரும்போது பெரிய அந்தஸ்துள்ள சம்பந்தி ஸ்டேஜ்ல நிக்கனும். ஆனா அவங்க மகள் சந்தோஷமா இருப்பாளா? அவ மனசுல என்ன இருக்கு? அவளுக்கு இந்த கல்யாணம் சந்தோஷத்தைத் தருமா? அப்படிங்கறதப் பத்தி அவங்க ரெண்டு பேருக்குமே கவலை இல்லை.

இப்படிப்பட்டவர்களைப் பத்தி நாம ஏன் கவலைப் கவலைப்படனும்? நாம எங்கேயாவது போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம லைஃப்ப ஸ்டார்ட் பண்ணுவோம். அவங்க பணத்தை கட்டிகிட்டு அழட்டும். அன்பு, பாசம், காதல், இதெல்லாம் அவங்க அகராதியிலேயே கிடையாது .அதனால அதெல்லாம் என்னன்னு சொல்லி அவங்களுக்குப் புரிய வைக்க முடியாது ..” ஏக்கத்துடன் விரக்தியாய் பேசும் காவ்யாவின் கையைப் பிடித்தான் ஜெய் ஆறுதலாய்.

“காவ்யா! உங்க அப்பாவ நான் அன்னைக்கு அவர் பேசியதிலிருந்தே எப்படிப்பட்டவர்ன்னு நல்ல புரிஞ்சுகிட்டேன். அவரை எதிர்த்துப் போராடுவதை விட நாம சாமர்த்தியமாக ஏதாவது யோசிக்கனும். நான் அன்னைக்கு அவர் பேசினப்ப ஒரு குற்ற உணர்ச்சியில் தவிச்சுப் போனேன்.

இவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பொண்ண என்னுடைய அன்பு தான் கட்டிப்போட்டு விட்டதோன்னு யோசிச்சேன். உனக்கு நல்ல ஒரு பெரிய இடத்து வாழ்க்கை என்னால் கெட்டுப் போச்சுன்னு கவலைப்பட்டேன். ஆனால் உன்னுடைய மனசு தெரிஞ்ச பிறகு.. நீ அன்புக்காக ஏங்குற குழந்தை… அந்த அன்பு எந்த பணக்கார வீட்டிலேயும் கிடைக்காது.

உன்னுடைய காதல்ல நீ உறுதியாக இருக்கறதப் பார்க்கும்போது, நான் உன்ன எதற்காகவும், யாருக்காகவும், விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு. நீ இவ்வளவு அப்செட்டா இருக்கிற… நான் சொல்ல வந்த விஷயத்தை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்குது காவ்யா “

“என்ன ஜெய்…இதைவிட அதிர்ச்சியான விஷயத்தை என்ன சொல்ல போற.. சொல்லு ..இதையேல்லாமே கேட்டுட்டு பேசாமல் தானே இருக்கறேன். எங்கம்மா இன்னிக்கு சாயங்காலம் பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லி இப்பதான் போன் பண்ணுனாங்க …சொல்லு ஜெய் என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு நீயும் ஒரு அதிர்ச்சியான விஷயம் என்று சொன்னியே ..”

“காவ்யா நான் கடைசியா அட்டென்ட் பண்ணுன அந்த கம்பெனியில எனக்கு செலக்ஷன் ஆயிடுச்சு! ஒன் மன்த் ட்ரெய்னிங் சிங்கப்பூர்ல போட்டிருக்காங்க ..அது முடிஞ்சதும் அங்கேயே போஸ்டிங் இருக்கலாம். இல்லைன்னா இந்தியா கேட்டுட்டு வரலாம்”

உண்மையாகவே அதிர்ந்து போனாள் காவ்யா.

“ஜெய் இந்த நிலைமையில நீயும் என்ன விட்டுட்டு சிங்கப்பூர் போறியா? இது உண்மையிலேயே எனக்கு ஷாக்கிங்கா இருக்கு .. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்திருந்தால் தான் ஏதாவது பண்ண முடியும். நீ அங்கே இருந்து நான் இங்கே இருந்தா.. எப்படி நான் இவங்கள சமாளிப்பேன்?” என்றவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க ..

“ப்ளீஸ் ப்ளீஸ் காவ்யா.. தயவுசெய்து அழாத எதுவுமே நம்ம கை மீறிப் போகல. அதுவரைக்கும் நாம பயப்பட வேண்டாம். நிச்சயம் ஏதாவது ஒரு வழி கிடைக்கும். யோசிச்சுப் பார்ப்போம். நான் இப்ப இந்த கம்பெனியோட சேர்ந்து போட்டிருந்த மத்த ரெண்டு கம்பெனியும் எனக்கு செலக்ட் ஆகல. இப்ப இந்த கம்பெனிலல நான் ஜாயின் பண்ணலைன்னு சொன்னா குடும்பத்துக்கு அது பெரிய லாஸ். பினான்ஷியலா அவங்க என் சப்போர்ட்ட எதிர்பார்த்து கிட்டிருக்காங்க.

இப்ப சின்ன சின்னதா கிடைக்கிற வேலைகளை பார்த்துகிட்டிருக்கேன்..அதுல பெருசா வருமானம் ஒன்னும் இல்ல.. ஏதோ முடியற பணத்தைக் கொடுக்கறேன் வீட்டுக்கு ஆனால் இந்த சிங்கப்பூர் வேலை கிடைச்சா நல்ல சம்பளம். குடும்பத்தை கவனிக்க உதவியா இருக்கும். நம்முடைய பியூச்சருக்கும் நல்ல வேலை அவசியம் காவ்யா.

இரண்டு தங்கைகள்.. தம்பி ,அப்பா, அம்மா எல்லாரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. அப்பாவுக்கு முடியல…தங்கைதான் ஓரளவு குடும்பத்தை சப்போர்ட் பண்றா. தம்பி,தங்கை படிச்சுக்கிட்டிருக்காங்க. அவங்களை படிக்க வைக்கனும்.தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணனும்”

“எனக்கு நல்லா புரியுது ஜெய்! என்னுடைய சுயநலத்துக்காக உன்னுடைய குடும்பத்தை தவிக்க விட்டுட்டு வான்னு ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ கண்டிப்பா அவங்களுக்கு உன்னுடைய கடமையை செய்யனும். எங்க அப்பா, அம்மா பணம் இருக்கிறதுனால எந்த பொறுப்பும் இல்லாம இருக்கிறாங்க.. ஆனால் நீ வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே எவ்வளவு பொறுப்பா யோசிக்கிற உன் குடும்பத்தைப் பத்தி .அது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு பொறுப்பானவனத் தான் நான் காதலிக்கிறேன்… கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன் .. நினைக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜெய்”

உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் அவள் கையைப் பிடித்துக் கொண்டான் ஜெய்..” தேங்க்ஸ் காவ்யா.. இதை எப்படி எடுத்துக்குவியோ.. நீ இதற்கு அனுமதி கொடுக்க மாட்டயோன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு தூரத்துக்கு பாசிட்டிவா எடுத்துக்கிட்டு போயிட்டுவான்னு சொல்றது பெரிய காரியம்.

ஆனா கண்டிப்பாக கவலைப்படாத.. நமக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்கும். இன்னைக்கு மாப்பிள்ளை பார்க்க வந்தா ஒண்ணுமே பேசாத.. அவங்க வந்து பார்த்துட்டு போகட்டும். அப்புறம் அந்த மாப்பிள்ளை யாருன்னு விசாரிச்சு நாம போய் நேர்ல பேசி அவர்கிட்டயே நம்முடைய நிலைமையை சொல்லுவோம். வயசானவங்களுக்கு தான் புரியாது ஆனா நம்மள போல யங்ஸ்டர்க்கு காதல் வலி தெரியும் ..ஆழம் . தெரியும் 

இப்போதைக்கு இந்தப் இடம் உனக்கு அமையலைன்னா அடுத்தது அவங்க மாப்பிள்ளை பார்க்கிறதுக்குள்ள நமக்கு கொஞ்சம் டைம் கிடைக்கும். நீயும் இந்த ஒரு வருஷத்தை எப்படியாவது படிச்சு முடிச்சுட்டேன்னா.. நம்ம ரெண்டு பேரும் எங்க செட்டில் ஆனாலும் வேலை பார்த்துக்கலாம்.

எங்க வீட்ல பிரச்சனை இல்ல.. உன்ன தங்கமா தாங்குவாங்க. உன்ன உயிருக்கு உயிராக நேசிப்பாங்க. என் தங்கை தம்பி எல்லாருமே உன் பேர்ல அன்பை பொழிவாங்க.. ஆனா உங்க வீட்ல நிச்சயம் இதை ஏத்துக்க மாட்டாங்க

பாப்போம் இன்னைக்கு முதல்ல பங்க்ஷன் முடியட்டும். உனக்கு அல்ரெடி லேட் ஆயிடுச்சுல்ல ..நீ கிளம்பு …சீக்கிரம் வரலைன்னா அப்பா, அம்மா கேக்கப் போறாங்க.. இன்னைக்கு பார்மாலிட்டி முடிஞ்சதும், நாளைக்கு நம்ம என்ன செய்றதுன்னு பேசுவோம். இப்ப கிளம்பு காவ்யா” என்றான் ஜெய்.

கனத்த மனதுடன் இருவரும் கிளம்பி வெளியே வந்தனர். வெளியே காலேஜ் பிரண்ட்ஸ் கூடி ஆட்டம்..பாட்டம்

ஜாலியான பேச்சு.. கலகலன்னு எல்லோரும் ஒரு புதிய உலகத்தில் இருந்தார்கள். 

அவர்களிடையே இவர்கள் இருவர் மட்டும் மனதில் கனத்தை சுமக்க.. போலியாக அவர்களிடம் சிரித்து பேசி விடை பெற்றுக் கொண்டு வெளியே நடந்தனர் .

(அலை வீசும்  🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்பாவின் தவிப்பு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    அங்கையில் அருமருந்து (மரபுக்கவிதை) – பாவலர்  கருமலைத்தமிழாழன்