in ,

‘சஹானா’ இணைய இதழ் & ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ இணைந்து வழங்கும் – தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் 2021

வணக்கம்,

அனைவருக்கும் சற்று தாமதமான தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி சிறப்பு பட்டிமன்ற காணொளியுடன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல எண்ணியிருந்தோம். சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாய் அது தாமதமானதால், இந்த தாமதமான வாழ்த்து

“இணையம் வரமா? சாபமா?” என்ற தலைப்பில் பள்ளி மாணவி முதல் பணி ஓய்வு பெற்றவர் வரை, அனைவரும் அலசி ஆராய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்தது இந்த பட்டிமன்றம்

வெறும் பேச்சு நிகழ்வு என்றில்லாமல், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாய், இதை நாங்கள் முன்னெடுத்தோம். இணையத்தை பயன்படுத்தும் எல்லோரும், சுயபரிசீலனை செய்து கொள்ள இந்த பேச்சுக்கள் உதவும் என நினைக்கிறோம்

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நடுவர் தமிழ்ச் செம்மல். முனைவர். ஓசூர் மணிமேகலை அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்

பேச்சாளர்கள் அனைவருமே தங்கள் தரப்பு வாதத்தை சிறப்பாக பதிவு செய்து, பட்டிமன்றத்தை சுவாரஷ்யமாக்கியது சிறப்பு. அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

சிறந்த பேச்சாளருக்கான பரிசு யாருக்கு என்பது விரைவில் அறிவிக்கப்படும். பேச்சாளர்கள் அனைவருக்கும், eCertificate விரைவில் அனுப்பி வைக்கப்படும்

பட்டிமன்றம் சற்று நீளம் கூடத் தான் என்றாலும், சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. நீளம் காரணமாய், பட்டிமன்ற நிகழ்வு நம் Youtube சேனலில் நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது

‘சஹானா’ இணைய இதழ் மற்றும் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ இணைந்து வழங்கும், ‘தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம், இதோ உங்கள் பார்வைக்கு

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Best Deals in Amazon 👇


 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் contest@sahanamag.com

நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்  srirenugapathippagam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கனவு மெய்ப்பட வேண்டும் (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை 

    மந்திரக் கோல் (சிறுகதை) – ✍ அனந்த் ரவி, சென்னை