in

பனீர் பட்டர் மசாலா – ✍ ராஜதிலகம் பாலாஜி

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்

பனீர் – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கை அளவு
கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
முந்திரி பருப்பு – 50 கிராம்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தேன் – 1 ஸ்பூன்

செய்முறை

  1. தக்காளியை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சூடு ஆறியவுடன் தக்காளி தோலை நீக்கி, தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறம் வரும் வரை வதக்கவும்
  3. அதனுடன் 50 கிராம் முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  4. சூடு ஆறியவுடன் மிக்ஸியில் மை போல அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து, அதோடு அரைத்த தக்காளிச்சாறு சேர்த்து வதக்கவும்
  6. பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. அதோடு, அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்
  8. அதன் பின்னர் கரம் மசாலா தூள், காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதோடு, வெண்ணெய் தேன் சேர்க்கவும்.
  9. பனீரை சதுர வடிவில் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கடாயில்  1 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு பொன் நிறம் வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  10. பொறித்த பனீரை கொதித்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  11. பின், கொதி்த்து கொண்டு இருக்கும் கிரேவியில் கொத்தமல்லி இலை, கஸ்தூரி மேத்தி கையால் கசக்கி போடவும். 5 நிமிடம் கழித்து கிரேவியை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கனவிலும் உன் நினைவே….! (சிறுகதை) – ✍ ரா. பரத்குமார், தமிழ்த்துறை விரிவுரையாளர், ஒட்டன்சத்திரம்

    இருக்கும் இடத்தை விட்டு (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி