in ,

ஊமச்சி குலதெய்வம் (சிறுகதை) – பூங்குழலி.S, வடசேரி, தஞ்சாவூர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பசுமையும் அழகும்   நிறைந்த  சீமை   என்ற கிராமத்தைச் சேர்ந்தவள் வசந்தா. வசந்தாவின் கணவன் ரவி கூலி தொழிலாளி,. இவர்களுக்கு எட்டு வயதில்  வாய் பேச முடியாத கயல்விழி என்ற பெண் குழந்தையும்  மூன்று வயதில் சீமதுரை என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

வசந்தாவிற்கு  பெண் குழந்தை கயல்விழியை கொஞ்சமும் பிடிக்காது, அதிலும் அவள் ஊமையாக பிறந்ததால் அவளை ஊமச்சி உனக்கெல்லாம் எதுக்கு படிப்பு நீ வீட்டு வேலையை செய் என்று எட்டு வயது ஆகியும் பள்ளிக்கு அனுப்பவில்லை..

வசந்தாவிற்கு எதிலுமே பாரபட்சம் தான். தன் மகன் சீமதுரையை இடுப்பிலிருந்து கூட இறக்க மாட்டாள். என் குழந்தை காக்க வந்த சாமி அப்படின்னு ஆண் குழந்தை மட்டும் கொஞ்சம் வசந்தா. தன் மகன் சீமதுரையை தன் எதிர்காலத்தை காக்கும் குலதெய்வமாக நினைத்தாள்.

சாப்பாட்டு, படிப்பு என பாரபட்சம் வசந்தாவை கயல்விழி தன் பார்வையாலே ஏதோ கூறுவாள். ஆனால் வசந்தாவிற்கு அது ஒன்றும் புரிவதில்லை. வசந்தா அதைக் கண்டு கொள்வதும் இல்லை. ஏதோ போனா போகுதுன்னு சோறு போட்டு ஒரு விலங்க வளக்குற மாதிரி வளர்த்தாள்.

வசந்தாவின் வாழ்க்கை வசந்தமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதது போல் வீசிய அந்த கஜா புயல்  வசந்தாவின் வாழ்க்கையின் வசந்தத்தையும்  கணவனின் உயிரையும் எடுத்துக் கொண்டது.

கஜா புயலால் சீமை கிராமத்தின் செடிகளும் மரங்களும் சாய்ந்து பல் போன பாட்டியாய் மாறி சிறிது காலத்தில் அவை செழித்து வளர்ந்து மீண்டும் பியூட்டியாய் மாறின.

வசந்தாவின் வாழ்க்கை சீமை கிராமம் போல் செழித்து பியூட்டியாய் மாற அவள் இயற்கை அன்னையா என்ன?.

வசந்தாவின் வாழ்க்கை நிலை குலைந்து போய் கூலி தொழிலுக்கு அவள் சென்று தன் இரு  குழந்தைகளையும் காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

வசந்தா கூலி வேலைக்கு செல்வதால் வீட்டு வேலை அனைத்தும் கயல்விழி செய்ய வேண்டியதாயிற்று. வசந்தா கூலி வேலைக்கு சென்றாலும் தன் மகனை மட்டும் மடியில் இருந்து இறக்குவதே இல்லை

பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு தன் குடும்பத்தோடு வசந்தா சென்றாள். அங்கே கயல்விழி பஞ்சு மிட்டாய் கேட்டு கை நீட்ட வசந்தா அவள் கைகளை தட்டி விட்டு பொட்டச்சிக்கு என்ன கேக்குது என்று கூறிவிட்டு தன் மகனுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி தந்தாள்.

திருவிழா முடிந்து வீடு திரும்பும் நிலையில் பேருந்துக்காக காத்திருந்த சமயத்தில் தன் மகன் சோடா கேட்க தன் மகனை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு சோடா வாங்கும் கவனத்தில் இருந்தபோது திடீரென சாலையில் அலறும் சத்தம் கேட்டு பதறி போய் திரும்பினாள்  வசந்தா..

பேருந்தில் யாரோ அடிபட்டதன் காரணமாக கூட்டம் கூடி இருந்தது. வசந்தா தன் தலைகளில் அடித்துக் கொண்டு சீமதுரை என் குல தெய்வமே கண்ணே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினாள். ஆனால் கயல்விழியை பற்றி சற்றும் கவலை கொள்ளவில்லை.,கவனத்திலும் கொள்ளவில்லை.

சீமதுரை சாலையோரமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தான். ஐயோ என் ராசா என்று சீமதுரையை கட்டி அணைத்துக் கொண்டவள். இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

கூட்டத்தில் யாரோ ஒருவர் பேசுவது தன் காதில் விழுந்தது அந்தப் பையன்தான் அடிபட்டு இருக்க வேண்டியது இந்த குழந்தை அவனை தள்ளிவிட்டு தான் அடிபட்டு  இப்படி கிடக்கிறத பார்த்தா பாவமா இருக்கே என்று கூறியதை கேட்டு வசந்தாவிற்கு ஏதோ தோன்ற  அடிபட்ட குழந்தையை திரும்பிப் பார்த்தாள்.

அடிபட்ட கிடந்தது வேறு யாரும் அல்ல, ஊமச்சி கயல்விழியேதான். அவள் விழிகள் மட்டும் ஏதோ கூறிக் கொண்டே செல்ல உயிர் அவளை விட்டு பிரிந்தது.

இப்போது கயல்விழியின் விழிகள் பேசியது வசந்தாவிற்கு மிகவும் நன்றாக புரிந்தது. அம்மா உன் குல தெய்வத்தை நான் காப்பாத்தி கொடுத்துட்டேன். பெண்களால் முடியாது எதுவும் இல்லமா. அப்பா இறந்த உடனே நீதானம்மா கூலி தொழில் பார்த்து எங்கள காப்பாத்துற நீயும் பெண்தானம்மா. என்ன படிக்க கூட வைக்கல உன் கடைசி காலத்துல கஞ்சு ஊத்த போற உன் மகனை காப்பாத்தி கொடுத்துட்டேன் என்று கூறுவது போல் தோன்ற.

வசந்தா இப்பொழுது கதறி அழுதாள். என் குலதெய்வம் நீ தாண்டி  ஊமச்சி……

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாய்மை (அனுபவ பகிர்வு) – வைஷ்ணவி

    உனை காணவில்லையே (கவிதை) – ராஜேஸ்வரி