in

நரபலி (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்- மார்ச் 2021 போட்டிக்கான பதிவு 

நரபலி (சிறுகதை)

“கிட்டத்தட்ட அஸ்திவாரத்துக்குத் தேவையான எல்லாப் பொருளும் வந்திருச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு கடைக்கால் மட்டும் தான ஊனனும். அப்பறம் என்ன பிரச்சினை ஆகும்னு சொல்றீங்க?” என இன்ஜினீயர் சுரேஷ் கேட்க

“அதெல்லாம் இருக்கட்டும் இன்ஜினியர் சார். இந்த மாதிரி பெரிய வேலையெல்லாம் செய்யும் போது பலி கொடுப்பது வழக்கம். அதுவும் உயிர்பலி கொடுத்தால் தான் பாலம் எல்லாம் உறுதியாக இருக்கும்னு நாங்க நம்புறோம்” என்றார் காண்ட்ராக்டர் கணேஷ்

“அதுக்கு நீங்க தரமான பொருட்களை வச்சு கட்டணும்” என நக்கலாக கூறினார் இன்ஜினியர்

“அட, இந்த மாதிரி பொருட்களை வச்சு தான் நிறைய மேம்பாலங்கள் கட்டிருக்கோம். ஆனா இதுவரைக்கும் நாங்க கட்டின எல்லா பாலமும், ஒரு சின்ன கீறல் கூட விழாமல் ஸ்ட்ராங்கா இருக்குதுன்னா, அதற்கு காரணம் கட்டுமான நுணுக்கங்கள் மட்டுமில்ல. உயிர் பலியும் தான்” எனகோபப்படாமல் பதில் கொடுத்தார்காண்ட்ராக்டர் கணேஷ்.

“அட உயிர்பலி கொடுக்கணும்னா, சந்தையில ரெண்டு ஆடு வாங்கிட்டு வா. உயிர் பலி குடுத்துடலாம்”

“அட எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. உயிர்பலினு நாங்க சொன்னது ஆட்டையோ, மாட்டையோ இல்லை. நரபலி”

“நரபலியா! அநியாயமா இருக்கேப்பா!” என என பதட்டத்துடன் கேட்டார் இன்ஜினியர்

“ஒரு உயிரைக் கொடுத்தா தான் பின்னாடி பல உசுரு போகாமல் காப்பாற்ற முடியும். யோசிச்சு பாருங்க! புராணத்திலே வருமே.!”

“என்ன வரும்?”

“குருஷேத்திர போர்ல தர்மம் ஜெயிக்கணும்னு அரவானை நரபலி குடுப்பாங்க. அப்படி செய்யவும் தான் பாண்டவர்கள் போர்ல வெற்றி பெற்றாங்க. அது மாதிரி தான் நாமளும் நரபலி குடுத்தா பாலம் உறுதியா இருக்கும்”

“இதெல்லாம் நடைமுறைக்கு சரிபட்டு வருமா?”

“சார் நீங்க எங்க வேணாலும் போய் பாருங்க. அதுல யாராவது ஒருத்தரை பலி குடுத்திருப்பாங்க. இல்ல ‘இறந்து போயிட்டாங்கன்னு’ நன்றி சொல்லி கல்வெட்டு இருக்கும். அவங்க விபத்துல செத்துருப்பாங்க. இல்லை வேணும்னே சாகடிக்கப்பட்டுருப்பாங்க. ‘கலவை சரியா இருக்கான்னு’ போய் பாருங்க. ‘சிமெண்ட் சரியா பூசியிருக்கான்னு’ போய் பாருங்க அப்படினு சொல்லி தெரியாம தள்ளிவிட்டுருவாங்க.இப்படியும் பலி குடுக்கலாம்”

சற்று நேரம் யோசித்த இன்ஜினியர், “அது சரி இப்ப இங்கே யாரப்பா பலி செய்யப் போறீங்க? நரபலி கொடுக்கறதுக்கு வெளியூரிலிருந்து ஆளைக் கூட்டிட்டு வரணுமா? தன் உயிரை கொடுப்பதற்கு இங்க யார் இருக்கா? அப்படி தெரியாம தள்ளிவிட்டாலும், நாளைக்கு அதுவே பெரிய பிரச்சனையாகிடப் போகுது”

“அதப் பத்தி கவலப்படாதீங்க! நரபலி கொடுக்க நீங்க உறுதி மட்டும் கொடுங்க. அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்”

“சரி, எனக்கு பிரச்சினை வராம முடிங்க” என்று கூறிவிட்டு கிளம்பினார் என்று கூறிவிட்டு கிளம்பினார் என்று கூறிவிட்டு கிளம்பினார் என்ஜினீயர்

“நான் பாத்துக்கிறேன் சார்” என சந்தோஷமாக கூறிய காண்ட்ராக்டர், சாலைக்கு அருகில் இருந்த கிராமத்தை பார்த்துக் கொண்டிருந்தார்

றுநாள், ரயில்வே மேம்பால பணிக்காக முதல்வர் வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். பிறகு மேம்பால பணிகள் மும்மரமாக தொடங்கின. நகரின் முக்கிய வழிதடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் என்பதால் ‘பால வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என அரசு உத்தரவிட்டிருந்தது

ரண்டு நாட்களாக வேலைக்கு வராத இளவரசியை திட்டியவாறு, கணவர் சுரேஷுக்கு காபி போட்டுக் கொடுத்தார் மனைவி வேணி

“இந்த இளவரசி வேலைக்கு வரவே இல்ல. அழுக்குத் துணி நிறைய சேந்துருச்சு. சம்பளத்தையும் வாங்கிட்டு இப்புடி வேலைக்கு வராம இருக்காளே!”

“ஏன்டீ! நீயே வீட்ல துவைக்க, சமைக்க வேண்டியது தான”

“நான் ஏன் வேல பாக்கணும்? அதுக்குத்தான சம்பளத்துக்கு வேலையாள் வச்சிருக்கேன். நீங்க லட்சக் கணக்குல சம்பாதிக்கிறீங்க. பெரிய இன்ஜினியர் வேற. வீட்டு வேலை செய்றதுக்கு ஒரு நல்ல வேலக்காரிய வக்ககூடாதா?” என வேணி கூறிக் கொண்டிருக்கும் போதே, அழுகையுடன் உள்ளே நுழைந்தாள், அந்த வீட்டின் மேல் வேலைக்கென அமர்த்தப்பட்டிருந்த இளவரசி

அவளைப் பார்த்தவுடன், “ரொம்ப கொழுப்பு தான் உனக்கு. வேலக்கி வரலன்னா ‘வரலனு’ சொல்லு. வேற ஆள வச்சுக்குவேன்” என கோபமாய் பேசினாள் வேணி

“அம்மா எம் புள்ளய ரெண்டு நாளா காணோம். எங்க போனான்னு தெரியலை. அதான் தேடிட்டு இருந்தேன் அதனால தான் வர முடியல” என அழுதுகொண்டே கூறினாள் இளவரசி.

இளவரசியை கவனித்த சுரேஷ்,”அந்த மெண்டல் பயலா?” என வினவ

கண்ணீர் வடித்தபடியே,” ஆமாங்கய்யா” என தலையாட்டினாள்

“சரி இப்ப எதுக்கு வந்த?” என வேணி கேட்க

“இன்ஜினியர் ஐய்யாவ பார்த்து உதவி கேட்கலானு வந்தேன்” என்றாள் இளவரசி.

“என்ன உதவி?”

“போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க அய்யா” எனவும்

“மூள வளர்ச்சி இல்லாத பய, எங்கயோ போயிட்டான். தொலஞ்சான்னு விடு, அவன எங்கன்னு போய் தே” என சுரேஷ் கூற

அவரின் வார்த்தையால் கோபமுற்ற இளவரசி, “என் மகன் எனக்கு விலைமதிப்பில்லாத பொக்கிஷம் தான். பண மமதையில, அதிகார போதையில இருக்குற உனக்கெல்லாம் எப்படி என் வேதனை புரியும்” என்று மனதிற்குள் பெருமினாள்

ஆனாலும் என்ன செய்ய முடியும்? உதவி கேட்டு வந்திருப்பதால் எந்த உணர்வையும் வெளியே காட்டாமல் இருந்தாள்

“சரி நான் உதவி செய்றேன். போன் பண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்கிட்ட சொல்றேன், நீ போய் கம்ப்ளெய்ண்ட் லெட்டர் எழுதி குடு, மத்தத அவங்க பாத்துப்பாங்க ” என்றார்.

“சரிங்கய்யா”என கண்ணீரை துடைத்துக் கொண்டாள் இளவரசி

“அப்படியே இந்த அழுக்கு துணிகள எல்லாம் துவைச்சிட்டு போயிரு” என்றாள் வேணி

மௌனமாக இருவரையும் பார்த்த இளவரசி, சரியென தலையாட்டிவிட்டு அழுக்குத் ஆடைகளை எடுக்க வீட்டினுள் சென்றாள்

தன் பின், சுரேஷ் சொன்னது போல், இன்ஸ்பெக்டர் கண்ணனை பார்க்க போலீஸ் ஸ்டேஷன் சென்றாள்

“இன்ஜினியர் சார் சொன்னாரு. நீ அவர் வீட்டுல வேல பாக்குறியா?” என கண்ணன். கேட்க

“ஆமாங்க” என்றாள் இளவரசி.

“சரி, உன் புள்ள பேரு, அவன் அடையாளம் சொல்லு. அப்படியே, போட்டோ எல்லாம் குடு” என்றார்.

கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடியே,” அவன் பேரு கோபாலகிருஷ்ணன்” என்றாள்.

“ம்… வயசு?”

“14”

“எப்ப காணம போனான்?”

“ரெண்டு நாள் முன்னாடிங்க”

“என்ன படிக்கிறான்?”

“படிக்கலங்க, அவன் புத்தி சுவாதினம் இல்லாதவன்”

ஏறெடுத்து பார்த்த கண்ணன், “மெண்டல் பயல எங்கனு போய் தேடுறது? யாராவது புடிச்சிட்டு போய் உறுப்புகள திருடிட்டு கொன்னு போட்டுருபானுங்க. இல்லனா, கண்ணை நோண்டிவிட்டு மும்பை பக்கம் ரோட்டுல பிச்சை எடுக்க விட்ருப்பானுங்க” என்றார்.

அதைக் கேட்டதும் இளவரசியின் பெற்ற மனம் பதற, “அய்யோ அய்யோ” என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“இந்தாம்மா…. அழுகைய நிப்பாட்டு, பய போட்டா இருக்கா?” எனவும்

“இருக்கு” என்றவள், பாஸ்போட் அளவு போட்டோவை எடுத்து நீட்டினாள்

“ம் சரி, தகவல் கிடைச்சா சொல்றேன் போ” என அலட்சியமாக கூறினார் இன்ஸ்பெக்டர்

“சார், இந்த ஒரு போட்டா தான் இருக்கு”

“அதுக்கு என்ன இப்ப?”

அவரின் மிரட்டலான பேச்சு, மேற்கொண்டு அவரிடம் பேசும் தைரியத்தை முடக்க, மௌனமாய் அங்கிருந்து வெளியேறினாள் இளவரசி

கனின் புகைப்படமாக ஒரு சின்ன போட்டோ மட்டுமே அவளிடம் இருந்தது. காட்டி விசாரிக்க கூட, வேறு இல்லை

தனக்கான ஓரே ஆறுதல் தன் மகன் தான் என்ற நினைவில், உணவு கூட உண்ணாமல், “புள்ள சாப்டானோ! இல்லையோ” என தவித்தபடி தேடி அலைந்தாள்

அக்கம்பக்கத்தில் சிறுவர்களிடம் விசாரித்தாள்

கடைசியா, ரெண்டு நாள் முன்னாடி, அந்த புதுப் பாலம் கட்டுற இடத்துல கிருஷ்ணாவ பார்த்தேன்” என்றான் ஒரு சிறுவன்

அதைக் கேட்டதும், பாலம் வேலை நடக்கும் இடத்தை நோக்கி ஓடினாள்.

“என் குழந்தைய பாத்தீங்களா? என் பிள்ளைய பாத்தீங்களா? இந்த பக்கம் வந்தானா?” என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தாள்

“இல்லம்மா நாங்க யாரும் பாக்கல” என கை விரித்தனர்

“ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த பக்கம் தான் விளையாண்டான்னு பசங்க எல்லாம் சொன்னாங்க. பாத்தீங்களா?, ஏங்க நீங்க பாத்தீங்களா?” என பித்துபிடித்தவள் போல் கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள்

“இந்தாம்மா… வேலை நடந்துட்டுருக்கு, அந்தப் பக்கமா போ. கல்லு உன் தலைல விழுகப் போகுது , போ அந்த பக்கம்” என விரட்டினார் அங்கு வந்த காண்ட்ராக்டர் கணேஷ்

“இங்க வரலையா? எனஅழுதபடியே சென்றாள்.

“எங்கயாவது பயல விடுறது. அப்பறம் இங்க வந்து கத்துறது” என முணுமுணுத்தபடி சென்றார் கணேஷ்.

மேற்பார்வையிட வந்த இன்ஜினியர் சுரேஷ், வேலைகளை எல்லாம் கவனித்துவிட்டு, கணேஷை அழைத்து பேசினார்.

“மாற்று வழி ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” எனவும்

“அதெல்லாம் பண்ணியாச்சு” என்றார் கணேஷ்.

“அது சரி, பலிகொடுக்க நல்ல நாள் பார்த்துட்டு இருந்தீங்களே. முடிஞ்சுதா?” எனவும்

“அதெல்லாம் சிறப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நெறஞ்ச அமாவாசையில முடிஞ்சது”

“யார் கிடைச்சா பலிக்கு?”

“ஒரு கிறுக்கு பய சுத்திகிட்டு இருந்தான். அவன புடிச்சு நைட்டு பன்னெண்டு மணிக்கு பூஜை போட்டு, பலி கொடுத்தாச்சு. அதுல தான் அந்த கான்கிரீட் ரெடி ஆயிட்டு இருக்கு” என்றார்.

“கிறுக்கனா? பாக்க எப்படி இருந்தான்” என சந்தேகமாக கேட்டார் சுரேஷ்.

“சின்ன பையங்க. ஒரு 13, 14 வயசு தான் இருக்கும்” என்றார் கணேஷ்.

உடனே தன் மகனைக் காணமென்று அழுத இளவரசி ஞாபகம் வந்தது சுரேஷிற்கு

“அடப்பாவிங்களா” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான் பாலம் உருவானது. அதில் போக்குவரத்தும் ஓடத் தொடங்கியது

அந்தப் பாலத்தில் பயணிப்பவர்களை நிறுத்தி, ‘என் புள்ளய பாத்தீங்களா?’ என கேட்டுக் கொண்டிருந்தாள் இளவரசி.

(முற்றும்)

புத்தக விமர்சன போட்டிகள்

விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை பாருங்கள். விமர்சனம் அளித்து, Rs.1000 Amazon Gift Card / Special Gift, மெடல் மற்றும் சான்றிதழ் வெல்லுங்கள்.

விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அதிர்ச்சி, வருத்தம், வேதனை. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மூட நம்பிக்கையா? பாவம் அந்தப் பெண்! 🙁 கதையை நல்ல கட்டுக்கோப்பாக எழுதி இருக்கார். வாழ்த்துகள். இயல்பான நடை.

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 10) -✍ விபா விஷா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு                                

காலத்துக்கும் அழியா காதல் (சிறுகதை) – ✍ Deepa PK – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு