in ,

மனிதகுல மாணிக்கம் (சிறுவர் பாடல்) – ✍ வளர்கவி, கோவை

மனிதகுல மாணிக்கம் (சிறுவர் பாடல்)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு


பள்ளி செல்லுங் குழந்தைகள்மேல்

பாசம் வைத்தவர்!

பாரதத்தில்  பண்டிதராய்

அழைக்கப்பட்டவர்!

மாமா நேரு என்று  சொல்ல

பெருமைப் பட்டவர்!

மனித குல மாணிக்கமாய்

மதிக்கப்பட்டவர்!

அலகாபாத் என்னும் ஊரில்

அவதரித்தவர்!

அன்புகாட்டும் மனிதராக

அலங்கரித்தவர்!

நெஞ்சில் ரோஜா பூவைச் சூடி

வலம் வந்தவர்!

நிமிர்ந்த நெஞ்சு கொண்டு தூய

வழி நடந்தவர்!

யமுனை ஆற்றங்கரையின் ஓரம்

வீடிருக்குமாம்!

எல்லோர்க்கும்  அவர்மீது

அன்பு இருக்குமாம்!

பஞ்ச சீலக் கொள்கை தந்து

பாரை வென்றவர்!

பாரத்தார் ஓர்குலமே

என்று சொன்னவர்!

நவம்பர் மாதம் வந்துவிட்டால்

என்றும் பிள்ளைகள்!

நம்ம மாமா நேரு வாழ்க

என்று வாழ்த்துவர்!

கண்ணியமாய் வாழவழி

கற்றுத் தந்தவர்!

காந்தீய வழியில் வெற்றி

பெற்றுத் தந்தவர்!

ஆசியாவின் ஜோதியான

அவரை வாழ்த்துவோம்!

அன்பு பாசம் நேசம் கொண்டு

ஒன்றாய் வாழுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. மிகவும் அருமையாக இருந்தது உங்களது பாடல் வாழ்த்துக்கள் வளர்கவி💐👌👏👏👏

புஜ்ஜியின் புத்திசாலித்தனம் (சிறுவர் சிறுகதை) – ✍ மாலா ரமேஷ், சென்னை

மாணவி சௌந்தர்ய லக்ஷ்மி வரைந்த ஓவியம்