in

உயிர்கொல்லி (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத்தமிழாழன்

உள்ளத்துள்   நாம்கொள்ளும்  பொறாமை  நம்மின்

          உள்ளிருந்தே  நம்முயிரைக்  கொல்லும்  கொல்லி

உள்ளத்துள்  நாம்கொள்ளும்  கயமை  நம்மின்

          உறவுகளின்  உயிர்களினைத்  கொல்லும்  கொல்லி

உள்ளத்துள்  பகைமையினை  வளர்த்துக்  கொண்டால்

          உள்பகைக்கு  மட்டுமன்றி  நமக்கும்  கொல்லி

உள்ளிருக்கும்  மாசுகளைத்  தூக்கெ  றிந்தால்

          உலகமெல்லாம்  வந்தணைக்கும்  செழிக்கும்  அன்பு !

 

காற்றுதனைச்   சுத்தமாக்கும்  மரத்தைச்  சாய்த்தால்

          கரிமலமே  விஞ்சிநம்மின்  உயிரைக்  கொல்லும்

காற்றினிலே  நச்சுபுகை  மாசைச்  சேர்த்தால்

          கண்முன்னே  பலநோயால்  இறத்தல்  காண்போம்

ஊற்றுகளை  நெகிழியாலே  அடைத்து  வைத்தும்

          ஊர்கழிவை  ஆறுகளில்  கலக்க  வைத்தும்

சேற்றுடனே  மணலெடுத்தால்  இயற்கை  கெட்டுச்

          செப்பாமல்  கூற்றுவனே  வருவான்  நேரில் !

 

தொழிற்சாலைக்   கழிவுகளை  ஓட  விட்டுத்

          தொப்பென்று  குப்பைகளை  தெருவில்  வீசி

அழிவுதரும்  செயற்கையுரம்  வயலில்  போட்டே

          அருந்துகின்ற  நீரையுமே  நஞ்சாய்  மாற்றிப்

பழிபாவச்  செயல்களுக்கே  அஞ்சி  டாமல்

          பார்தன்னில்  நமக்குநாமே  எமனாய்  ஆனோம்

வழிமாற்றி  இயற்கையோடும்  தூய்மை  யோடும்

          வாழ்ந்திடுவோம்  நோய்களற்ற  வாழ்வாய்  நன்றே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அகங்காரம் இல்லா அலங்காரம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    வினை விதைத்தவன் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி