in , ,

பூங்குழலி (அத்தியாயம் 6) – பாலாஜி ராம்

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“சரிங்க பூங்குழலி நான் கிளம்புகிறேன்” என்றாள் செண்பகம்.

“எங்க போறீங்க?” என்று கேட்டாள் பூங்குழலி. 

“எங்கேயாவது போக வேண்டியது தான், புருஷன் வீட்டுக்கு போனா நான் உயிரோட வர மாட்டேன். அம்மா வீட்டிக்கு போனாள் வாழாவெட்டி என்ற பேரு, இருக்கிறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு உலகமெல்லாம் வீடு, வாழ இடம் இருந்தால் பார்ப்பேன். இல்லனா எங்கேயாவது போயி சாக வேண்டியது தான்”

“ஏன் அப்படி சொல்லுறீங்க, இதுவும் உங்க வீடு போல நெனச்சிக்கங்க எவ்வளவு நாள் இருக்கணுமோ இங்கேயே இருங்க, என் அண்ணன் வேலைக்கு போயிட்டா நானும் தனியா தானே இங்க இருக்க நீங்க இங்கே இருந்தா எனக்கும் ஒரு நல்ல துணையாய் இருக்கும்” என்று பூங்குழலி சொன்னதும், எங்க போவது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த செண்பகத்தின் முகத்தில் புன்னகை பூத்தது. 

பேசிக் கொண்டே இருந்த பூங்குழலி திடீரென எழுந்து சமையலறைக்குள் சென்ற ஒரு தட்டில் சோறு, குழம்பு பொரியல் வைத்து செண்பகத்திடம் எடுத்து வந்து கொடுத்தாள். பசியால் இருந்தவள் அல்லவா, வேண்டாம் என்று சொல்லாமல் உடனே வாங்கி சாப்பிட்டாள் செண்பகம்.

சாப்பிட்டு முடித்ததும் தன் வீடு போல எல்லா வேலைகளையும் செய்ய தொடங்கினாள் செண்பகம்.  சமையல் செய்த பாத்திரங்களை கழுவுவது, வீடு வாசல் பெருக்குவது, என எல்லா வேலைகளையும் செய்வதை பார்த்த பூங்குழலிக்கு செண்பகத்தின் மீது இன்னும் அன்பு அதிகரித்தது. 

மாலைப் பொழுது ஆனதும் பூங்குழலி சமையலறையில் எதையோ உருட்டி கொண்டு இருப்பதை கவனித்த செண்பகம் சமையலறைக்குள் சென்றாள். 

“என்ன சமைக்கிறமா?” என்று பூங்குழலியை பார்த்து செண்பகம் கேட்டாள். 

“அண்ணா வரும் நேரமாச்சு அதான் காபி போடுறேன்” என்றாள் பூங்குழலி.

“ஆமா உன் அண்ணன் பேரு என்ன? அவரு என்ன வேலை செய்றாரு? என்று சொல்லலையே”

“என் அண்ணன் பேரு வசந்தகுமார். துணை காவல் ஆய்வாளரா வேலை செய்றாரு” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொதே வீட்டுக்குள் யாரோ வருவது போல சத்தம் கேட்டது.

செண்பகம் சென்று பார்த்தள். காவல் உடை அணிந்தவர் உள்ளே நுழைந்தார். இவர் தான் பூங்குழலின் அண்ணனாக இருக்கக்கூடும் என மனதிற்கு நினைத்தாள். அவரை பார்த்ததும் பயத்தில் சமையலறைக்குள் சென்று விட்டாள்  செண்பகம்.

வசந்தகுமார் ஹாலில் இருந்த சோபாவின் மீது அமர்ந்தான். பூங்குழலி காப்பி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். வசந்தகுமாரும் பூங்குழலியும் அதிக நேரம் எதையோ பேசிக் கொண்டு இருந்தனர்.

சமையல் அறையில் இருந்து இதனை உற்றுக் கவனித்த செண்பகத்தின் செவியில் ஓரிரு வார்த்தைகள் தான் விழுந்தது. இதை வைத்து அவர்கள் தன்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று யூகித்தாள்.

தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் அதிகரித்தது. பூங்குழலியும் வசந்தகுமாரும் இருக்கும் அறைக்குள் வந்தாள் செண்பகம். தன்னை பற்றி தான் பூங்குழலி வசந்த குமாரிடம் சொல்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். 

“என்னம்மா இப்போ உடம்பு எப்படி இருக்கு சௌக்கியமா” என்று கேட்டான் வசந்தகுமார். 

“இப்போ நான் நல்லா இருக்கேன்” என்று  செண்பகம் பதிலளித்தாள். 

“நீ ஒன்னும் கவலைப்படாதம்மா, எப்படியாவது உன் புருஷனையும் மாமியாரையும் கம்பி எண்ண வச்சுருவேன்” என்று அவர் சொன்னதும்

“ஐயையோ! அதெல்லாம் வேணாங்க என் கணவர் ரொம்ப நல்லவரு” என்றாள். 

“எனக்கு தெரியும் உன் புருஷனை பற்றி சுரேஷ் தானே உங்க புருஷன் பேரு”

 “ஆமாங்க உங்களுக்கு எப்படி தெரியும்”

“நீ 10 சவரன் நகையை எடுத்துக்கிட்டு  யார் கூடயோ ஓடிப் போயிட்டேன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்” என்று வசந்தகுமார் சொன்னதும் செண்பகத்தின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. தன் சேலை முந்தானையை வாயில் பொத்தி அழுதாள். 

“இவ்வளவு நடந்து கூடவா உனக்கு உன் புருஷன் மேல இவ்வளவு பாசம் இருக்கு கோபம் படாமல் அழுகிறியே” என்று கேட்டான் வசந்தகுமார். அதற்கு எதுவும் பேசாமல் மௌனத்தை பதிலாக தந்தாள் செண்பகம்.

மறுநாள் விடிந்தது. பூங்குழலி எழுவதற்கு முன்பே செண்பகம் எழுந்து  வீட்டு வேலைகள் செய்யவும், சமைக்கவும் தொடங்கி விட்டாள் செண்பகம். இதையெல்லாம் கவனித்த வசந்தகுமாருக்கு செண்பகத்தின் மீது ஒருவித மரியாதை வரத் தொடங்கியது. 

காலை 10 மணி சுரேஷின் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. சுரேஷும் அவனது அம்மா, அப்பா என மூவரும் வீட்டு வாசலுக்கு வெளியே வந்தனர்.  

ஜீப்பிலிருந்து இறங்கிய வசந்தகுமாரை பார்த்தவுடன், “ஐயா என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது தகவல் இருக்கிறதா, அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியல, சீக்கிரம் கண்டுபிடிச்சு தாங்க” என்று ஒரு நடிப்பை போட்டான் சுரேஷ். 

“உன் மனைவியை கண்டுபிடிச்சாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவாங்க” என்று வசந்தகுமார் சொன்னதும் சுரேஷின் முகத்திலும் அவனது அம்மா, அப்பா முகத்திலும் ஈ ஆடல்ல.

இந்த நேரத்தில்  வேறொரு ஜீப்பும் சுரேஷ் வீட்டு வாசல் முன் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மூன்று பெண் காவலர்கள் வந்திறங்கினர். இவர்கள் மூவரும் சுரேஷ் மற்றும் அவனது அப்பா, அம்மாவை கைது செய்தனர். 

“ஐயோ… நாங்க எந்த தப்பும் செய்யலையே” என்று சுரேஷும் அவனது அம்மாவும் கதறினர். 

“எந்த தப்பும் செய்யவில்லையா? நீங்க வீட்டுக்கு வந்த மருமகள்கிட்ட வரதட்சணை தரலன்னு கொடுமைப்படுத்தி இருக்கீங்க என்று எங்களுக்கு புகார் வந்திருக்கு” என சொல்லி இந்த மூவரையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர் பெண் காவலர்கள்.

வசந்தகுமார் சுரேஷின் வீட்டிலிருந்து புறப்படும் போது வேலி ஓரத்தில் ஒரு சிறுவன் மறைந்து நிற்பதை பார்த்து அவனை அருகில் அழைத்தார்.. 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பூங்குழலி (அத்தியாயம் 5) – பாலாஜி ராம்

    எண்ணிப் பார்ப்பீர் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்