எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
புதிய ஊருக்கு பணி மாற்றலான பிறகு கோபி, மகள் திவ்யாவை புதிய ஸ்கூலில் சேர்த்தான்.
ஒரு வாரம் கழிந்த பின், “புது ஸ்கூல் எப்படி இருக்கு? புது ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாச்சா..?” என்றான் கோபி.
“போங்கப்பா.. இங்கே யாரும் நல்லவங்களே இல்லை.. ஒருத்தி முசுடா இருக்கா.. ஒருத்தி கோள்மூட்டியா இருக்கா.. ஒருத்தன் பொய்சொல்லி..னா இன்னொருத்தன் மண்டைக் கனம் பிடிச்சவனா இருக்கான்..”
கோபி சிரித்துக்கொண்டே.. “ஹ ஹா.. கோளாறு உன்கிட்ட தான்.. நீ தான் தப்பா எடை போடுற..” என்றான்.
“எப்படி..?” என்றாள் மகள்.
“பழைய ஸ்கூல்ல நீ விபரம் தெரியாத வயசில ஃப்ரெண்ட்ஸ் சேர்த்ததால யாரையும் எடை போடல.. அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டதால அவங்க தப்பு அதுக்கப்புறம் உனக்குத் தெரியல..vகுற்றமில்லாத மனிதனை உலகத்தில கண்டுபிடிக்கவே முடியாது.. இருக்கிற மனுசங்கள்ல கெட்ட பழக்கம் இல்லாதவங்களோட நட்பு பாராட்டி வாழ்றது தான் வாழ்க்கை..”
“ஓ..”
“இதைத்தான் குரங்கினுள் நன்முகத்த இல்.. அதாவது நல்ல மூஞ்சி உள்ள குரங்குனு ஒன்னு கிடையாதுன்னு பழமொழி இருக்கு.. தெரியுமா..?” என்றான்.
“அட..” என சிரித்தாள் திவ்யா.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings