எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பாவுக்காக சரின்னு சொன்னாலும் ரம்யாவின் மனது கொதித்தது.. யாரோ ஒருத்தன் கேட்ட அர்த்தமில்லாத கேள்விக்காக அப்பா என் கனவுகளை பொசுக்குவது சரியா? மனம் குமறியது.
“நாளைக்கு பொண்ணு பாக்கறதுக்கு கும்பகோணத்தில் இருந்து வக்கீல் குடும்பத்தார் வராங்க, ரெடியா இருக்க சொல்லு” என்று வழக்கம் போல ரம்யா அறையை பார்த்து அம்மாவிடம் கத்தினார் அப்பா.
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்… ரம்யாவிற்கு மனம் கசந்தது. இவரோடு போராட முடியாது. நம்ம தலையெழுத்து எவ்வளவு தான் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.
மறுநாள் பெண் பார்க்கும்போது படலம் கனச்ஜோராக நடந்தது .மாப்பிள்ளை மகேஷ் ரம்யாவுடன் தனியா பேசணும் ..என்றான்
ஒரு கணம் ரம்யாவிற்கு தன்னுடைய ஆசையை அவனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது அவனிடம் சொல்லி அது அப்பா காதுக்கு போக ரணகளமாகிவிடும் எதுக்கு. சம்பிரதாயத்திற்கு வார்த்தைகள் பரிமாறி கொள்ள.. கல்யாணம் முடிவானதும் தான் ரம்யாவின் அப்பாவிற்கு சந்தோஷம் வந்தது ..
கல்யாணத்தில் ரம்யாவின் முகம் வாடிப் போய் கிடந்தது.. கமலாவுக்கு மகள் மனம் நிறைவேறாத அவள் ஆசை எண்ணி தவிப்பது புரிந்தது.
திருமணம் முடிந்தது.. அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட அந்த அறையின் பூக்களின் வாசமும்.. பத்தியின் சுகந்தமான மணமும்.. மற்ற நேரம் என்றால் ரம்யாவின் மனதை கிறங்கடிக்கும். ஆயிரம் கனவுகள் கல்யாண வாழ்க்கையில் இருந்தாலும் நிறைவேறாத கனவு ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்க மெல்ல பால் செம்புடன் உள்ளே நுழைந்தாள்.
“வா ரம்யா” என்று வரவேற்ற மகேஷ் அருகில் அமர சொன்னான். அந்த ஏசியின் குளிரிலும் ரம்யாவுக்கு வேர்த்தது.. அப்பாவுக்காக சரியென்றாலும் இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் மனதை கவ்வியது.
“ரம்யா நிறைய கனவுகள் உனக்கும் இருக்கும். இன்று ஆசையோடு நம் வாழ்க்கையில் முதல் நாளை ஆரம்பிக்கிறோம்.. எனக்கு ஒரு ஆசை அதை நிறைவேற்றிய பிறகு நாம இந்த முதலிரவை கொண்டாடலாம்னு நினைக்கிறேன்”
மௌனமாக அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.
“நீ ஐ.ஏ.எஸ். படிக்கனும்.. நல்லா படிச்சு, ரேங்க் ஹோல்டரா வரனும். அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு உனக்கு இருக்கும்.. என்ன சரிதானே ” என்றான் புன்னகையுடன்.
ஒரு கூடை பூவை தலையில் கொட்டியது போல இருந்தது ரம்யாவுக்கு. “அது என்னுடைய ஆசை.. கனவு அது எப்படி உங்களுக்கும் அதே போல தோன்றியது ”
“எனக்கு எனக்கு மனைவியாக வரப்போறவள் ஒரு கலெக்டராக இருக்கணும்னு ரொம்ப நாள் ஆசை ..அதை நிறைவேற்றி வைப்பியா?” என்றான்.
வேகமாய் தலையசைத்த ரம்யா ஆசையோடு அவனை கட்டிக் கொண்டாள். தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தவாறு.
பாவம் அவளுக்கு தெரியாது அவள் அம்மா தான் மாப்பிள்ளையை தனியாக சந்தித்து தன் மகளின் கனவை கூறி மகேஷிடம் அனுமதி வாங்கி அந்த திருமணத்தை நடத்தி வைத்தாள் என்று.. எப்படியோ அவள் கனவு நிறைவேறட்டும் நாமும் அட்சதையை தூவி தம்பதியை வாழ்த்தி விடைபெறுவோம்.
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings