in ,

முருகா உன் திருவருள் வேண்டும் 🙏(கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

முருகா உன் திருவருள் வேண்டும் 🙏(கவிதை)

முருகா   உன்   திருவருள் வேண்டும்

ஒருகாலும்  உனை மறவாதிருக்கவும் ,

கலங்காமல் யான் எப்போதிருக்கவும் ,

சலங்கை கிண்கிணி ஒலி  கேட்கவும் ,

பன்னிரு கருணை விழிகள் பார்க்கவும் ,

முன் எட்டு எடுத்து விரைந்து வருவாய் !

முருகா நிறைவாய் திருவருள் புரிவாய் !

முருகா உன் திருவருள் வேண்டும் .

குற்றம் கண்டெனை ஒதுக்கி விடாமல் ,

சற்றே  மனம்  இறங்கி அருள்புரிவாய் .

பெற்ற தாய் புறந்தள்ளினாள்  எனில் ,

உற்ற பிள்ளைக்கும்  செய்வழி யாது ?

தந்தையும் தாயுமானவனே நீ எனக்கு ,

சிந்தையில் உறை  உயர் சிகாமணியே !

முருகா,  உகந்துன் திருவருள் புரிவாய் !

முருகா,  உன் திருவருள் வேண்டும்.

பிறிதொன்றும் வேண்டேன் முருகா ! உன்

சிறியேனுக்கும்  விரும்பி அருள் தருவாய் !

பசியாற, உனைக் கண்டென் கண் பசியாற

பிசிறின்றி நீயுமுன்  மயில் மீதேறி வருவாய் !

உனை வணங்குவோர்க்கு ஓர் குறையுமில்லை

நினைத்தாலே வினை வெயில் கண்ட பனியாகும்

முருகா, உந்தனருள் எப்போதும் வேண்டும்

முருகா உன் திருவருள் வேண்டும் வேண்டுமே !

#ad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிற்பம் (கவிதை) – கவிஞர் அராதா – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு

    நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 2) – விபா விஷா