in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 5) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4

“இவ்வளவு நாளும் நல்லப் பையனாகத் தானிருந்தீர்கள். இப்பொழுதுதான் ரொம்ப மோசமாகத் தெரிகிறீர்கள்.”

“அப்படியென்றால் என்னிடம் பணமில்லை என்றால்… நான் எதுவும் வேண்டாம் என்று என் தந்தையின் வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்த தமிழரசை நீ விரும்பப் போவதில்லையா நீலாம்பரி.”

“அது… அப்படியில்லை அரசு.” இழுத்தாள் நீலாம்பரி.

“நேரடியாகக் கேட்கிறேன், இனி நான் என் தந்தையின் வீட்டிற்கோ அல்லது அவருடைய பணத்திற்கோ பாத்தியதை ஆகப்போவதில்லை. அப்படியிருக்கும் தருணத்தில் இந்த அரசை நீ விரும்புகிறாயா? ஏற்றுக்கொள்வயா என்பதுதான் என் கேள்வி?”

“ஏன் இப்படி விதண்டாவாதமாகப் பேசுகிறீர்கள். ஒழுங்காக வீட்டிற்குப் போங்கள். அப்புறம் பேசிக்கொள்ளலாம்.”

“இல்லை நீலாம்பரி. உன் மனதில் தடுமாற்றம் தெரிகிறது.  தெளிவாகச் சொல்கிறேன் நான் இந்த நிமிடத்திலிருந்து ஒரு பைசாக கூட இல்லாத வெறும் வெற்றுப்பயல் தமிழரசு. இந்த நிலையில் என்னை உன்னால் திருமணம் செய்து கொள்ள முடியுமா?”

அவனை ஏறெடுத்து நோக்கிய நீலாம்பரி, “பணம் இல்லாதவன் எப்படி என்பது எனக்கு தெரியும் அரசு. அந்தக் கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை எனினும் கண்ணால் பார்த்தவள். ஒன்று தெரியுமா? இல்லாதவனை இல்லாளும் வேண்டாள்” என்றாள்.

“என்னதான் சொல்கிறாய்?” கோபத்தில் எழும்பினான் தமிழரசு.

“யாரையாவது ஒரு நல்லவனை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.” என்றாள் நீலாம்பரி எங்கேயோ பார்த்துகொண்டு.

“சே”! என்று கத்திவிட்டு எரிச்சலுடன் கிளம்பினான் அரசு.

தமிழரசு  தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். பின்னாலே சப்தம் எழுப்பிய ஆட்டோக்காரன் அவனைத் தாண்டிப் போகுபோது “துஜா…” மராத்தியில் திட்டி விட்டுப் போனான்.

கொஞ்ச நேரம் நடந்ததும் கால் வலித்தது. வசாய் ரோடு ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கக் கூட பையில் பணமில்லை என்று உணர்ந்த போது “ஆவ் சாப் கிதர் ஜாரஹாஹை?” என்றான் டீக்கடை பையாக்காரன்.

“சாரி பாய் சாப். பணமில்லை” என்றான் தமிழரசு.

“உன்னிடம் யார் பணம் கேட்டார்கள். டீ குடி”  என்று கட்டிங் சாய் கொடுத்தார். சூடாக வாங்கிக் குடித்து விட்டு டிக்கெட் எடுக்காமல் சி.எஸ்.டி. ரயிலில் ஏறி காந்திவிலியில் இறங்கினான்.

சார்க்கோப் இண்டஸ்டிரியல் ஏரியாவில் சுந்தரின் தொழிற்சாலை இருந்தது. பஸ்ஸுக்கோ ஆட்டாவிற்கோ பணமில்லை. நடந்து போவதென்றால் அரைமணி நேரமாகும். பல்லைக் கடித்துக் கொண்டு வேகமாக சார்க்கோப்பிற்கு நடந்தான் தமிழரசு.

வழியிலே இரண்டு மூன்றுபேர் காரிலேயிருந்து “ஹாய் அரசு…” என்று கை காட்டிவிட்டுப் போனார்கள்.

அவன் காந்திவிலி இரயிவே ஸ்டேஷனில் இருந்து சுந்தரின் கம்பெனிக்கு நடந்து வர அரைமணி நேரத்திற்கு மேலாகி விட்டது.

‘சுந்தர் இண்டஸ்டிரீஸ்’ என்ற பெரிய நுழைவயிலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி  பெரிதாக வணக்கம் போட்டான்.

சிரித்துகொண்டு ’சுந்தர் எம்.டி.’ என்று சிவப்பு எழுத்துகளால் எழுதியிருந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான் சுந்தர்.

பி.ஏ.விடம் ஏதோ லட்டர் டிக்டேட் பண்ணிக் கொண்டிருந்த சுந்தர் “வா தமிழரசு. என்ன ரொம்ப டயர்டாக இருக்கிறாய்“ என்றவன் தன் பெர்சனல் செக்ரட்டரி கீதாவைப் பார்த்து, “அலுவலகப் பையனிடம் ஸ்ராங்கா ரெண்டு கப் சாயா கொண்டுவரச் சொல்லு” என்றான்.

“என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய்? என்னையும் ஒரு மாதிரி பார்க்கிறாய்?“ சிரித்தான் களைப்பாக இருந்த தமிழரசனைப் பார்த்து.

தனக்குள்ளே சிரித்துக் கொண்ட தமிழரசு, புன்னகைத்து கொண்டே ”இது எல்லாமே உங்க அப்பாவினுடைய வியாபாரம்தானே” என்று கேட்டான்.

“ஆமா… நான் படித்து முடித்தவுடனே அப்பாவின் பிஸினஸில் சேர்ந்து விட்டேன். இப்போது சாப்பிட நேரமில்லை. பிஸி, சாயங்காலம் ஒரு வியாபார விஷயமாக ஜெர்மனி போகிறேன் வருகிறாயா?” என்று கேட்டான்.

“நீ கூட்டிக் கொண்டு போனால் தாராளமாக வருகிறேன்.” என்ற தமிழரசை ஏற இறங்கப் பார்த்தான் சுந்தர்.

“என்னடா என்னிடமே கேலி பண்ண ஆரம்பிது விட்டாயா?”

“இதிலே என்னடா கேலி… நீ ஜெர்மனி போகிறேன் என்றாய். என்னையும் அழைத்தாய். என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக இருந்தால் வருகிறேன். இதை நீ ஏன் கேலி அல்லது கிண்டலாக நினைக்கிறாய்?”

”அரசு எப்போதும் எங்கே போனாலும்… ஏன் மூன்றுமுறை நம் நண்பர்களோடு நாம் யு.எஸ். போய் வந்த போது கூட நீதான் எல்லாப் பணமும் செலவழித்திருக்கிறாய்.”

”சுந்தர்,  பழைய தமிழரசு பணக்காரன். ஆனால், இப்போது உன்னை நாடி வந்திருக்கும் இந்த அரசு ஒரு பைசா கூட இல்லாதவன். நான் ஏற்கெனவே உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் காலில் நிற்பதற்காக வெளியே வந்து விட்டேன். எப்படியாவது செய்வதற்கு உதவி செய்ய முடியுமா?”

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 3) – தி.வள்ளி, திருநெல்வேலி

    நிழலும் நிஜமும் (சிறுகதை) – ராஜேஸ்வரி