in

மரம் எங்கே..? (கவிதை) – குமரி உத்ரா, கன்னியாகுமரி

மரம் தான்… எங்கும் மரங்கள் தான் சில காலம்.
நற்காலை  என்றாலே காகம் கரையும்
குயிலோசை கேட்கும் மரங்களின் மறைவில்
குஞ்சுகள் குறை சொல்லும்
தாய்ப்பறவை தத்தி வந்து உணவூட்டும்..
இலைகளின்  மறைவில்..
கனிகள் சுவையூட்டும்
காய்கள். பசியாற்றும் சமையல் அறையில்..
மருந்து கள் குணமாக்கும்
களிம்புகள் காயமாற்றும்
மரங்களின் தோல் ஆடையில்..
பூக்களுமே சிரிக்கும்
புதிய நறுமணங்களை தரும்
வாசனை திரவியமாய்..
வெயிலுக்கு நிழல் தரும்
வேர்வைக்கு விசிறி தரும்
காற்றின் தயவாய்..
இருக்க நாற்காலி தரும்
படுக்க பட்டு கட்டில் தரும்
உனக்கு இசைவாய்…
காகிதம் தந்து எழுத்தை பதியம் செய்யும் நிரைவாய்..
மானிடா…….
என்ன தந்தும் நிழல் தருக்கள்
நிமிர்ந்து நிற்க குனிந்த மனங்கள்
நாம் விட்டோமா……..???

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழிநீர் (கவிதை) – வள்ளி, திருநெல்வேலி

    காது குத்து கல்யாணம் ❤ (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்