in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 17) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15  பகுதி 16

ஈ.சி.ஆர் பங்களாவில் ராம்குமாரை எதிர்பார்த்து வந்தனா காத்துக் கொண்டிருந்தாள்

“பாப்பா ராம்குமாருக்காக காத்திருந்திருக்கியா?  நாளைக்கு ஊருக்கு கிளம்பனும்.. இன்னைக்கு அவரு  வந்தா ரெண்டுல ஒன்னு கேளு” என்றாள் சந்தியா.

” அம்மா நீ எப்ப பார்த்தாலும் இப்படித் தான்.. அதை கேளு இதைக் கேளுன்னுகிட்டு… அவர் வந்துட்டுப் போறதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு ..அவரும் என் கூட இருக்கிற நேரம் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறாரு தெரியுமா?”

“அட முட்டாள்! இப்படி அப்பப்ப பார்ட் டைம்மா சந்தோஷத்தை அனுபவிக்கிறது சரினு நினைக்கிறியா? அவரு  இன்னும் முழுசா உன்கிட்ட அடிமையா கிடக்க வேண்டாமா? ரெண்டுல ஒன்னு கேளு”

“என்னம்மா கேட்க..  இந்த ஈ.சி.ஆர் பங்களாவே அவருடைய மாமனார் இடம். இந்த இடத்தில  இவ்வளவு பெரிய பங்களா கட்டி என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு. போன தடவை வந்திருக்கும் போது நாம ரிஜிஸ்டர் ஆபீஸ் போயி ரிஜிஸ்டர் பண்ணினோம் இல்லையா? இப்ப இந்த பங்களா என்னுடையது. வேற என்ன வேணும்? இங்கே நானும் அவரும் சந்தோஷமா குடும்பம் நடத்துவோம். “

“கைல இருக்கற படம் எல்லாம் முடிச்சிடு.. இனிமேல் நடிக்க வேண்டாம்னு சொல்றாரு. அப்படியே நடிச்சாலும் தமிழ் படமா நடிச்சா இங்கிருந்து போறதுக்கு வசதி. கன்னட, தெலுங்கு படங்கள் எல்லாம் விட்டுடலாம்னு வச்சிருக்கேன். தமிழ் படம் மட்டும் ஒத்துக்கலாம். என்னம்மா சொல்ற? அனேகமா இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கமிட்டாகி இருக்கிற படமெல்லாம் முடிஞ்சிடும். அப்புறம் நிம்மதியா இங்க வந்து செட்டிலாயிடலாம். ராம்குமாரும் நம்மள பாத்துப் பாரு”

“அட முட்டாள் பெண்ணே! அவர் பொண்டாட்டி மகாவை மறந்துட்டியே …இவ்வளவு சொத்திற்கும் சொந்தக்காரி அவள்.  அவ விஷயம் தெரிஞ்சதும்  உங்களை நிம்மதியா இருக்க விடுவாளா? ..இந்த பங்களாவை இவ்வளவு செலவு பண்ணி கட்டியிருக்கிறார், ஆனா இடம் அவருடைய மாமனார் இடம். அப்பா  இடம் மகாவுக்குத் தான் சொந்தம். அவ இருக்கிறவரை நீ நிம்மதியா வாழ முடியாது.  அவளை ஏதாவது ஒரு வழி பண்ணி உங்க பாதையிலிருந்து அகற்றனும்.”

“அதுதான் ராம் போன தடவையே விவரமா சொன்னாரேம்மா .. அவளுக்கும் அவ குழந்தை உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுச்சுன்னா  சொத்து முழுக்க ஈஸ்வர் ட்ரஸ்டுக்கு போயிடும்னு. அதுனால  மகாவும், அவளுக்கு பிறக்கும்  குழந்தையும்,  நல்லபடியா இருக்க வேண்டியது அவசியம்மா ..அப்பதான் இந்த சொத்துக்களை நாங்க அனுபவிக்கலாம் ..”

“இந்த தடவை ராம்குமார் வரும்போது ..நீ இங்கே வந்து செட்டில் ஆகனும்… படங்களையெல்லாம் குறைச்சுட்டு அவர் கூட வாழனும்னு சொன்னா.. நீ அவர்கிட்ட ஒரு கோரிக்கை வையி ..”

“சொல்லும்மா என்ன கேட்கனும் சொல்லு… எது கேட்டாலும் அவர் எனக்காக செய்வாரு. ..தங்கமா, வைரமா இல்ல வேற எந்த நகை கேட்டாலும் எனக்கு வாங்கிக் கொடுத்தாரே.. இதே மாதிரி இன்னொரு வீடு வேணும் பங்களா வேணும்னு  கேட்டாலும் செய்வார். அவர் அந்த அளவுக்கு என் மேல அன்பா இருக்காரு. என் மேல உயிரையே வச்சிருக்காரு ..”

“நீ எப்படி டி என் வயித்துல வந்து பொறந்த? கொஞ்சம் கூட உன் மூளைக்கு அதைத் தாண்டி யோசிக்கத் தெரியாதா.. இந்த நகைநட்டு நம்மகிட்ட இல்லாததா..அதான் அந்த நடிகர் உன்கூட இருந்தானே விஷ்ணுவர்தன் அவன் கொடுக்காத நகையும், பணமுமா இவர் கொடுடப்  போறாரு.  இதெல்லாம் வேண்டிய அளவு நம்மகிட்ட நிறையவே இருக்கு”

“இப்ப என்னம்மா சொல்ற எனக்கு புரியலையே ..”

“உனக்கு எது தான் பாப்பா புரிஞ்சிருக்கு.. நீ அவர்கிட்ட கேட்க வேண்டியது ….’மகா மார்பிள்ஸ்’ “

அதிர்ந்து போனாள் வந்தனா! “என்னம்மா சொல்ற ..மகா மார்பிள்ஸ்ஸை கேட்கச் சொல்றியா? இது கொஞ்சம் உனக்கே ஓவரா தெரியலையா? “

“மகா மார்பிள்ஸ் வந்தனா மார்பிள்ஸ்ஸா மாறனும்…பாப்பா…”

“ஆனா அதை எப்படிமா அவர் செய்ய முடியும்? முக்கால்வாசி ஷேர் இருக்கிறது மகா கிட்ட ..”

“அதாண்டி நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன் .அதை நிறைவேற்றினா நமக்கு மகா மார்பிள்ஸ் வந்துரும்.. ராம்குமாரும் நம்மளோட  இருப்பாரு.உன் ஆசைப்படி நீயும் அவர் கூட வாழலாம் .”

அப்படி என்ன  திட்டம் அம்மா வச்சிருப்பா ?  யோசிக்கத் தொடங்கினாள் வந்தனா…

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 6 – முகாரி) – சாய்ரேணு சங்கர்

    மயக்கமா? கலக்கமா? (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன் மும்பை