in ,

எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 2) – கற்பக அருணா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

தன்னை நோக்கி பிரியா வந்தவுடன் அவளுடைய வருகையின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தாதவனாய் இருந்தான். நவீன், நான் ரிப்போர்ட்டை பார்க்கையில் ஏதோ ஸ்டடஸ்டீக்ஸில்  தான் குறை என்று தோன்றுகிறது. அதனை, சரி செய்தால் ரிப்போர்ட் சரியாகிவிடும் நாம் இதனை இரண்டு மூன்று நாட்களில் முடித்து விடலாம் என்கிறாள்.

“வாவ் யுவர் அமேசிங் பிரியா “,இதனை ஒரு வாரத்திற்குள் முடிக்க எவ்வாறு முடியுமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன். பட், நீங்க எனக்கு ஒரு சுலபமான வழியை காமிச்சுட்டீங்க தேங்க்யூ ,பிரியா என்று புன்னகை பூரிப்பில் நனைந்து நன்றி கூறுகின்றான் நவீன். உடனே, பிரியா பட் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றது நவீன் என்கிறாள் .

அதுவரை நல்ல தீர்வு கிடைத்து விட்டது என்று  இருந்த நவீனுக்கு தூக்கி வாரி போட்டது. என்னது பிரியா என்ற பயம் கலந்த முகத்துடன் கேட்க, பிரியாவுடனே கூல் நவீன் “அவ்வளவு சீரியசான விஷயம் எல்லாம் இல்ல ஃபர்ஸ்ட் நான் சொல்லப் போறத லிசன் பண்ணுங்க இந்த ஸ்டேட் ஸ்டிக்கை சரி செய்தால் ரிப்போர்ட் சேன்ஜ் ஆகும்.” ஆனால் ,அதை முடிக்க நமக்கு ரியலி ஒன் வீக் மேலையாது ஆகும் என்கிறாள்  பிரியா

இவ்வளவுதானா பிரியா என பெருமூச்சு விடுகிறான். நவீன் அதுக்கு என்ன நான் வேணா மேனேஜர் கணேஷ் சார் கிட்ட எக்ஸ்ட்ரா டைம் கேட்கிறேன் என்கிறான் உடனே, பிரியா என்ன நவீன் இது ரொம்ப இம்பார்ட்டனான ரிப்போர்ட் ஒன் வீக்ல சமீட் பண்ணும் இல்லைனா, இந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்காதுன்னு தானே மேனேஜர் கண்ணன் மெயில் பண்ணி இருக்காரு நீங்க அத பாக்கலையா? என வினாவினாள்.

நான் ஏதோ டென்ஷன்ல கவனிக்கல என்ன மடிக்கணியில் வந்திருக்கும் நோட்டிபிகேஷன் ஐ பார்க்கிறான். எஸ், சரி இப்ப நம்ம என்ன பண்றது பிரியா என்கிறான் ஒன்னும் பிரச்சனை இல்ல நாம இந்த ரிப்போர்ட் சரி பண்ணனும்னா எக்ஸ்ட்ரா ஒர்க் டைம் பண்ணுனா மட்டுமே போதும் அதை சொல்ல தான் இப்ப நான் வந்தேன் என்கிறாள் பிரியா

ஓகே ,பிரியா இதுல எந்த பிரச்சினையும் எனக்கு இல்ல ஆனா உங்களுக்கு என கேட்க முற்படுகையில் “இட்ஸ் ஓகே ஃபார் மீ ஆல்சோ” என்ன தானே ,முன்னுரைக்கிறாள்.அதன் பின்பு சரி ஓவர் டைம்ல இதனை பார்க்கலாம் என தன் இருப்பிடத்தை நோக்கி நகர்கிறாள்  பிரியா.

அவள் அங்கிருந்து நகரவே நவீனுக்கு ஒரு வித நம்பிக்கை கிடைத்தது போல் உணர்ந்தான். அன்றைக்குரிய வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான் அவன் . இரவு 7 மணிக்கு மேல் சேர்ந்து வேலையை ஆரம்பிக்கலாம் என பிரியாவிடம் இருந்து மெசேஜ் வரவே அந்த நேரத்திற்காக காத்திருந்தான் நவீன்.

வந்தது அந்நேரமும் பிரியா அவன் அரிசி அமர்ந்து ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிப்போர்ட்டை மடிக்கணினியில் சரி செய்து கொண்டிருந்தாள். இவன், அவற்றில் பிழை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கிடையில் பிரியா நவீனை கேள்வியுடன் அழைக்கிறாள்  இதுதான் உங்கள் சொந்த ஊரா என்று? இவனும் எந்த ஒரு ஆச்சரியமும் எதிர்பார்ப்பும் இல்லாமல், இல்லை; என்கிறான். உங்கள் குடும்பம் எவ்வாறு ஆனது உங்களது இத்தகைய பொறுமைக்கு யார் காரணமானவர்? என கேள்விகளை பிரியா எடுக்கவே சாதாரணமாகவே பதிலை அளித்துக் கொண்டிருக்கிறான்.

“ஒரு நிமிடம் இதெல்லாம் ஃப்ரீயா ஏன் என்னிடம் விசாரிக்க வேண்டும். “என்ற திடீர் எண்ணம் மனதில் நிலவே இதனையே ஏன்? என்று திரும்பிக் கேட்கலாமா, என எண்ணியவனுக்கு வேண்டாம் பிறகு பேசும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விடக்கூடும், “என அமைதி காக்கிறான்.

ஒரு சில மணித்துளி அமைதிக்கு பிறகு நவீன் கேள்வியை பிரியாவை நோக்கி தொடுக்க ஆரம்பித்தான் உங்கள் வீட்டில் ஏதேனும் சொல்ல மாட்டார்களா? ” ஓவர் டைம்ல ஒர்க் பண்றத பத்தி  கேட்கவே எவரேனும் இருந்தால் தானே” கேள்வி,  எனக் கூறியவள் ஒரு நிமிட இடைவெளியில் நவீன் அந்த ஒரு ரியாக்ஷனை கண் பார்வையில் காண நிமிருகிறாள்.

அப்பொழுது, இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று சந்தித்து கொள்கின்றன. நவீனுக்கு அந்த ஒரு வேலையில் சிறந்த அன்புக்காக ஏங்கும் கண்களாகவே பிரியாவின் கண்கள் அகப்பட்டன.ஆனால், அந்த ஏக்கம் ஏன் என்னிடம் உள்ளது? என்று கேள்வியுடன் தனது கண்களை அவளிடத்தில் இருந்து விளக்கி விட்டான்.

மீண்டும் ஒரு மயான அமைதி இருவரிடம் நிகழவே இருவரும் தங்கள் அன்றைய வேலையை  முடித்து விட்டு செல்ல பார்த்தனர். அன்றைக்குரிய வேலையை மட்டும் முடிக்கவே இருவருக்கும் சரியாக இரவு 11:00 மணி ஆகிவிடவே வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் பார்க்கிங் ஏரியாவிற்குள்  நகருகிறார்கள்.

நவீன் தன்னுடைய மோட்டார் வண்டியை பிரியா அருகில் எடுத்து வந்து நீங்கள் எப்படி சொல்வீர்கள் என்றான். அதற்கு அவள் நான் கேப் புக் பண்ணி இருக்கேன் நான் பார்த்துக்கிறேன் என்கிறாள். ஆனால் நவீனுக்கு  தனியாக அவளை விடுவதில் துளியும் மனம் இல்லை.

தன்னால் முடிந்தவற்றை சொல்லி அவளை அவனே அழைத்துச் செல்ல முடிவு செய்தான். வாங்க பிரியா நானே உங்கள டிராப் பண்றேன் என்கிறான்.

ஓகே என்று ஏறி கொள்கிறாள் அவளுடைய மோட்டார் வாகனத்தில் பின்புறத்தில் ஒரு புறமாக ஏறி அமர்வதை பார்க்கிறான் நவீன் அவளுடைய அந்த ஒரு குணத்தை எண்ணி மகிழ்கின்றான் அவனும் அவளை கம்படப்புலாக  அமருமாறு சொல்லிவிட்டு முன் புறமாக நகர்ந்து அமர்வதை கண்டு பிரியா வியப்புடன்; அவன் இவளிடம் காட்டும் மதிப்பை  நினைத்து  புன்னகைக்கிறாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தடுமாறிய எண்ணங்கள் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்

    புடவியின் சதி (சிறுகதை – பாகம் 1) – தோமிச்சன் மதேய்கல் (மொழிபெயர்ப்பாளர் பாண்டியன், புதுக்கோட்டை)