in ,

பிர(ம்)மாண்ட நாயகன் (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பிரசித்தி பெற்ற அந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை சேவிக்க பக்தர்கள் முதல் நாள் இரவே வேறு வேறு ஊரில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கினர்.

இரவு முழுவதும் கண்விழித்து பகவானின் பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர் சிலர். இரவு முழுவதும் கோவிலின் வெளிச்சுற்று பிரகாரத்தில் பஜனைகளும் பாடல்களும் வானைப் பிளந்தன.

நகரத்தின் மையத்தில் இருக்கும் பிரபலமான அந்த தியேட்டருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கினர் அதில் 75% வாலிப வயதின் வாயிலில் கால் எடுத்து வைப்பவர்கள். தன் நாயகனை பெரிய திரையில் காணப் போகும் சந்தோஷத்தில் தாரை ,தப்பட்டை, பேண்ட் என்று வாத்திய கோஷங்கள் முழங்க ஆட்டம் ஆடி கொண்டாடி கொண்டிருந்தனர். அவர்களின் ஆனந்தக் கூப்பாடு வானைப் பிளந்தது.

அதிகாலை நாலு மணி பிரம்மமுகூர்த்த வேளையில் பெருமாளை தரிசிக்கும் பெரும் ஆவலுடன் பக்தர்கள் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் இருகரம் கூப்பி காத்திருந்தனர்.

அதிகாலை நாலு மணி பிரம்மமுகூர்த்த வேளையில் தன் தலைவனின் நடிப்பைக் காண கூட்ட நெரிசலில் நான் முந்தி நீ முந்தி என ஆவலுடன் காத்திருந்தனர்.

சொர்க்கவாசல் திறந்தது பகவான் சர்வ அலங்காரத்துடன் காட்சி கொடுக்க பக்தர்களை நோக்கி வந்தார். பெருமாளை கண்ணார காணும் பெரும் பரவசத்துடன் அவன் நாமங்களை கோஷமிட்டனர்.

தியேட்டர் வாசல் திறந்தது. ஆண்கள் எல்லோரும் தன் நாயகனை முதல் காட்சியின் முதலாவதாக பார்க்கும் ஆர்வத்துடன் நாயகனின் பெயரை கத்தியபடி முந்தியடித்துக் கொண்டு சென்றனர்.

குடும்பத்தில் ஒரே வாரிசான ஒருவன் முன்னால் செல்லும் நோக்குடன் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி, கால் தவறி கீழே விழுந்தான். பின் மண்டையில் அடிபட்டு கூட்ட நெரிசலில் மிதிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனான்.

பிரம்மாண்ட நாயகன் – புன்னகை மாறாத முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

(முற்றும்)  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 18) – முகில் தினகரன்

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 5) – தி.வள்ளி, திருநெல்வேலி