in ,

யார் குழந்தை? (சிறுகதை) – அர்ஜுனன். S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அரை ஆண்டு விடுமுறை தொடங்கியாச்சு. சிவம், பார்வதி தம்பதியருக்கு ஒரே குஷி. பின்னே?.. லீவுக்கு பேத்தி லட்சயா நாளைக்கு வருவாளே..? வாராது வந்த மாமணி அவள்.. இன்னும் ஒரு வாரம் இங்கிருந்து விட்டு செல்லும் வரை பேத்திக்கு மட்டும் இல்லை, தாத்தா, பாட்டிக்கும் கொண்டாட்டம் தான்.

லட்சயா போன தடவை வந்திருந்தப்பவே பாட்டிக்கும் பேத்திக்கும் நடுவே ஒரு ‘செல்லச் சண்டை’ வந்தது..

“குழந்தை…..”எப்போதும் போல் பேத்தியை அழைத்தார் பார்வதி..

“பாட்டி.. என் பெயரை சொல்லி கூப்பிடுங்க.. குழந்தைனு சொல்லி கூப்பிடாதீங்க..”

“ஏன்டா செல்லம்?..”

“நான் ஒன்னும் உங்க குழந்தை இல்லை.. எங்கம்மா தான் உங்க குழந்தை..”

“நீயும் என் குழந்தை தாம்மா..”

“அப்போ சித்தி பாப்பாவை மட்டும் ஏன் பெயர் சொல்லி கூப்பிடுறீங்க? ..”

“சரி.. என் கேள்விக்கு பதில் சொல்லு.. குழந்தை எப்படி பிறக்குது?..”

“அம்மாவோட கர்ப்ப பையில வளர்ந்து பத்து மாசம் கழிச்சு பிறக்குது..”

‘அப்ப சரி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட பார்வதி சிரித்துக் கொண்டார்.. பேச்சை வேறு பக்கம் மாற்றி விட்டார். லட்சயாவுக்கு அப்போது எட்டு வயது தான்.. இன்னும் சிறுமி தான், அவள் வாழ்வில் அடுத்த கட்டம் சுமுகமாக தொடங்கட்டும்.. அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்..

ஃஃஃ

சிவம், பார்வதி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் சுமதி, இளையவள் மஹதி.

சுமதி பள்ளிப் பருவம் முடித்தும் பூப்படையவில்லை. மற்றபடி அவள் அழகுக்கோ, மற்ற பெண் இயல்புகளுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. மஹதிக்கு உரிய பருவத்தில் எல்லாம் இயல்பாகவே நடந்தது.

சுமதி கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாமா, வேண்டாமா என்று அவளது பெற்றோர்களுக்கிடையே பலத்த discussion.. அவளுக்கு திருமணம் முடிக்காமல் மஹதிக்கும்‌ செய்ய முடியாதே? எந்த விஷயத்தை ஊரில் மற்றவர்களிடம்‌ மறைத்து வைத்திருந்தோமோ, அதை வெளியே சொல்ல வேண்டி இருக்குமே?..

சுமதியின் பெற்றோர் சுமதியை அழைத்துக்கொண்டு மருத்துவரை அணுகிய போது தான் தெரிந்தது, அவளுக்கு கருப்பை (uterus) வளர்ச்சியே இல்லையென்றும் எனவே அவளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லையென்றும். பெற்றோர்கள் திகைத்துப்போய் உட்கார்ந்திருக்க, சுமதி தான் அவர்களைத் தேற்றினாள்.

சுமதி படித்து வேலைக்குச் சென்ற இடத்தில் உடன் வேலை பார்த்த ரமேஷ், அவளது அழகையும், குணத்தையும் பார்த்து மனதை பறிகொடுத்து, அவளை மணம் செய்து கொள்ள விரும்பினான். தன் காதலை வெளிப்படையாகச் சொல்லியும் சுமதியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“ஹே சுமி.. நீ இப்படி பேசாம இருந்தா எப்படி?.. மனதைத் திறந்து சொன்னால் தானே என்ன பிரச்சினை என்று புரியும்..”

“ரமேஷ்.. நீங்க என்னோட புற அழகைத் தான் பார்த்திருக்கீங்க.. என்னுடைய உடலுக்குள் உள்ள பிரச்சினையை நான் எப்படி சொல்லுவேன்?..” என ஆரம்பித்தவள், அவன் மீண்டும் மீண்டும் கேட்க, எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

பொறுமையாக கேட்ட ரமேஷ், “நான் உன் மேல் கொண்ட காதல் உண்மையானது.. நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். தாம்பத்யம், குழந்தை பிறப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. நமக்கு குழந்தை வேண்டுமென்றால் தத்து எடுத்துக் கொள்ளலாம், இதற்காக நீ மனம் வருந்த வேண்டாம்..”

“இல்லை ரமேஷ்.. எனக்காக உங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணாதீங்க.. நான் தனிக்கட்டையாகவே இருந்திட்டு போறேன்..”

“அடி அசடு.. இப்போ மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவோ முன்னேறிடுச்சு.. உன் மனத்திருப்திக்கு வேண்டுமானால் நம்ம ரெண்டு பேரும் தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதி தானானு டாக்டர்கிட்ட கன்ஸல்ட் பண்ணிக்கலாம் ..” என்று சொல்லி அவள் மனத்தை தேற்றினான்.

சுமதி, ரமேஷ், பார்வதி மூவரும் சேர்ந்து மருத்துவரைக் காணச் சென்றனர்.

சுமதியை செக் பண்ணிப் பார்த்த டாக்டர், மேலும் சில டெஸ்ட்கள் எடுக்கச் சொன்னார். எல்லா ரிப்போர்ட் களையும் பார்த்தபின்..

“ம்ம்.. முதல் தடவை செக் பண்ணி டாக்டர் சொன்னது சரிதான்.. சுமதிக்கு கர்ப்பபை வளர்ச்சி இல்லை தான்.. மற்றபடி ஷீ இஸ் ஆல்ரைட்.. சொல்லப் போனால் அவளுக்கு ஓவரியிலிருந்து கரு முட்டை கூட வருது… கர்ப்பபை இல்லாததால மென்சஸ் ஸைகிள் வெளியே தெரியல..”

“ஓ.. தேங்க் காட்.. அப்போ எங்க குழந்தையை test tubeல் வளர்த்து வாடகைத் தாய் மூலமா வளர்த்து பெற்றுக் கொள்ளலாமா டாக்டர்..?”. இது ரமேஷ்.

“தாராளமா.. ” என்றார் டாக்டர்.

“வாடகைத் தாயா?.. அப்போ குழந்தை எங்க வீட்டில வளராதா?.. என்‌ பொண்ணுக்கு வளைகாப்பு வைக்க முடியாதா..?” தாயின் மனக் குமுறல்.

டாக்டர் சிரித்தபடியே சொன்னார்..

“நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சா உங்க பொண்ணுக்கு வளைகாப்பு கூட நடத்தலாம்..”

“நானா..? நான் என்ன செய்ய முடியும்?”

“உங்க கர்ப்ப பையை மட்டும் கொடுத்தால் போதும்.. உங்க பொண்ணுக்கு transplant பண்ணிடுவோம்.. குழந்தை உங்க கர்ப்ப‌ பையில உங்க பொண்ணு வயித்தில வளரும்.. உங்க பொண்ணு பிரசவிக்க முடியாது.. அதனால‌ பத்தாம்‌ மாசம் சிசேரியன் செஞ்சு எடுத்திடலாம்..”

பார்வதி‌ டக்கென்று டாக்டரின் கையைப் பிடித்து தன் முகத்தில் ஒத்திக் கொண்டு, “நீங்க தெயவம்ம்ம்மா..” என்று கண்ணீர் விட்டார்.

பிறகென்ன?.. கல்யாணம் நடந்தது.. டாக்டர் சொன்னபடியே லட்சயா பிறந்தாள். பார்வதி லட்சயாவை குழந்தை என்று கூப்பிட ஆரம்பித்தார்.

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மன்னிக்க வேண்டுகிறேன் (பகுதி 1) – சுஶ்ரீ

    சொல்லாத காதல் செல்லாது! (சிறுகதை) – இரஜகை நிலவன்