in

தாய்மை (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

 பெண்ணின் விழியில் பூசிய மை கரையும் கண்மை

 இருவரின் நிறைவான உடல்மொழி

பேசியது கரையாத உண்மை

 பூ உதிராமல் உதிரம்

 சேகரித்த அந்த தன்மை

 பெண் அடைந்தால் தாய்மை

 புதிய உயிருக்கு மட்டும்

வயிறு இடம் தர

துடிப்பது என்ன கொடுமை

 மற்றவை தள்ளுது இடைவிடாமை

 உணவை எடுத்துக் கொள்ள

வேண்டும் நேரம் தவறாமை

 இல்லையேல் புதிய உயிர்

செய்யும் மிகுந்த வன்மை

 

 பூக்கள் சூடாமை

வேர்த்து வாடாமை

 மாந்தம் நாடாமை சாந்தம் குழையாமை

 தீயதை நினைக்காமை விரும்பியதை சுவைக்காமை

 நினைத்தபோது சேராமை

 மகனே வேண்டும் என வேண்டாமை

 பயங்கள் ஒன்று கூடாமை

 பெற்றெடுப்பது மட்டுமா தாய்மை

 

 பெண்ணின் அழகு என்பவர்

இந்த பெரும் சுமை

 இவை யாவும் பழைமை

 என் கருத்தில் இருக்கட்டும்

புதுமை…..

 

 சுமப்பது பெண்ணின் இயற்கை தகைமை

 ஆனால் சமைப்பதும் சுமப்பதும் மட்டும் பெண்மை என நினைக்காதிருப்பதே ஆண்மை…

 

 தாய்மை இருபாலருக்கும் பொருந்தும் என்ற எண்ணம் இன்றியமையாமை

 அன்பு கருணை பொறுப்பு கொண்டோரின் உள்ளமும் தாய்மை….

 

 பெண்ணை சுருக்கி சுருக்குப்பையாக நினைப்பது கொடுமை

 

 தீண்டிய பெண்மை விட்டு விலகாது இருப்பது ஆணின் கடமை…..

 

 ஏனெனில் குப்பைத் தொட்டி குழந்தை தோன்றாமை

 வரதட்சணை வேண்டாமை

பெண் அடிமையை நீட்டாமை

 இவை தாய்மைக்கு செய்யும் பெருமை….

 

 இக்கருத்தில் வேண்டும் திண்மை

 ஆண் பெண்ணுக்கு சமம் என்பதே நம் கருத்துடைமை…..

 

 ஆணும் பெண்ணும் கொள்வோம் சிறந்த தோழமை

 சிந்தித்தால் புரியும் இக்கருத்தின் அருமை….

 

 புரிய கொஞ்ச காலம் எடுக்கும் பொறுமை

 இக்கருத்து அறியாமை இயலாமை இல்லாதவர்க்கு புரியும் மிக எளிமை……

 

 இதை சொல்வது என் உரிமை

 அனைவரும் கேட்டு நடந்தால் நன்மை……

 

 பொதுமை தாய்மை என்றால் எதிர்காலம் சிறக்கும் இது உண்மை….

 

 என்னை இவ்வாறு எழுத தூண்டுவது என் பெண்மை பேனா மை…….

 

 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெரியவனும் பெரியாளும் (சிறுகதை) – செல்வம். T

    விடாத கருப்பு (சிறுகதை) – தி.வள்ளி திருநெல்வேலி.