in

சிவனடி போற்றி….! 🙏 (கவிதை) -✍ சி. கோவிந்த் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

சிவனடி போற்றி....! 🙏 (கவிதை)

சிதம்பர ஈசனே
சிற்றம்பல வாசனே

அன்பினால் வசப்படுத்தும்
அம்மையப்பனே

அரிதாரமாய் சாம்பல் பூசிய
அம்பலவாணனே

ஆரவார திருநடம் புரியும்
ஆதிரை அழகனே

சுயமாய் உதித்திட்ட
சுயம்பு லிங்கனே

மும்மூர்த்தியாய் அமைந்த
முக்கண் அரசனே

ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய‌
ஆதி மூலனே

ஐயங்கள் போக்கிடும்
கைலாய நாதனே

அகந்தையை அழித்திடும்
கங்கை நாயகனே

வேதத்தின் சாரமாய் திகழும்
வேத வித்தகனே

பால்பாகுபாடு பாராத
சமத்துவம் உணர்த்திட
சிவமும் சக்தியுமாய் ஆன
அர்த்த நாரீஸ்வரனே

பரம்பொருளாய் விளங்கிடும்
பரமேஸ்வரனே

மகிழ்ச்சியை அருளும்

மகேஸ்வரனே

நலங்கள் பயத்திடும்
நந்தி வாகனனே

புவனமெலாம் காத்திடும் புனிதனே
புலித்தோல் நின் புத்தாடை
புனைவோம் நின் பாமாலை!

நின்னருளே ஆனந்தம்!
சிவசிவ எனும் நாமம்!

நல்லருள் தந்திடும் 
நமச் சிவாயமே!

சிந்தையைச் சீராக்கிடும்
சித்தன் சிவமயமே!

விந்தையை நிகழ்த்திடும்
வித்தக நாயகனே!

போற்றி போற்றி சிவனடி போற்றி!!!

போற்றி போற்றி இறைவா போற்றி!!!

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாட்டுக்காரன் கேட்ட பாட்டு (திருவடிசூலம்)🙏 – ✍ மீரா ஜானகிராமன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

    Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்