in ,

புரியாத புதிர் (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இதை எழுதலாம் ஆனால் யாரைப் பற்றி எழுதறோமோ அவங்க படிச்சா பிரச்சனைதான். முன்னால எழுதின ஒரு கதையை படிச்ச ஒரு உறவினர் (பேரை சொல்லி திரும்ப மாட்டிக்க விரும்பலை,  விசுவநாதன் மாமா விரோதம் நமக்கு எதுக்கு),

என்ன இவன் கன்னா பின்னானு எழுதறான் 2 பேர் நன்னா எழுதறேனு சொல்லிட்டா பெரிய கொம்பனா இவன். தனக்குத்தானே பெரிய எழுத்தாளன்னு நினைப்பு வேற, ஏதாவது உறவுல ஃபங்ஷன்னா வெள்ளை கலர்ல தொள தொளனு ஜிப்பா போட்டுண்டு நிஜ எழுத்தாளன் மாதிரி நினைச்சிண்டு சுத்தி சுத்தி வரான், (அவன் பொண்டாட்டி வேற கூடவே அவனை புரமோட் பண்றதுக்கு)

சரி போகட்டும் யார் என்ன நினைச்சா நமக்கென்ன இந்த கதைக்கு வருவோம்.

நாங்க புனேல இருந்தப்ப நாங்க இருந்தது ஒரு ஃபிளாட்ல முதல் மாடி.எங்களுக்கு சரி கீழே இருந்தது ஒரு பட்ஜீ (பட்ஜீன்னா நம்ம ஊர் கோயில் குருக்கள்னு வச்சிக்கோங்களேன்) நாங்க இந்த புனே ஹடப்சர் ஏரியால குடி வந்தப்ப எங்க கீழ் போர்ஷன் காலியாதான் இருந்தது.அந்த கணேஷ் சதுர்த்திய ஒட்டி ஒருநாள் இந்த வினோத்பட் குடும்பம் குடி வந்தது அந்த ஃபிளாட்டுக்கு.

பெரிய குடும்பம் இல்லை அந்த பட்ஜி, ஒடிசலா அவர் மனைவி சுஸ்மா, 4 வயசு பெண் குழந்தை காயத்ரி, அவ்வளவுதான்.

அமக்களமா கணபதி ஹோமம்லாம் பண்ணிதான் குடி வந்தா.

எங்க மொட்டை மாடிலயே சாமியானா போட்டு சமையல் சாப்பாடு.

சுஸ்மாவோட அம்மா சப்பிப்போன மாங்கா முகம், ஒட்டடைக் குச்சி மாதிரி உடம்போட சுய அறிமுகம் பண்ணிண்டு வந்து எங்களையும் சாப்பிட கூப்பிட்டா.என் மனைவிக்கு இந்த மாதிரி சகஜமா பேசற பெண்கள் கிடைச்சா போறும்,உடனே ஒட்டிண்டுடுவா.

முதல்ல கீழ் போர்ஷனுக்கு போய் ஹோம குண்டத்துக்கு பக்கத்துல இருந்த பிள்ளையாரை            சேவிச்சு பிரசாதம் வாங்கிண்டு மேல சாப்பிட வந்தோம். அந்த காயத்ரி பாப்பா உடனே எங்க கிட்ட ஒட்டிண்டிடுத்து.சுஸ்மா கூட சகஜமா பேசினா, பட்ஜீதான் அன்னிக்கு ஒரே பிசி.

அந்த அலமேலு மாமி சுத்தி சுத்தி வந்தா. வினோத்பட்டோட  அம்மா விசாலம் மாமி பாவம் காது மந்தம் போல, எட்டு ஊருக்கு கேக்கறாப்பல பலமா கத்தி கத்தி பேசிண்டிருந்தா. சாப்பிட வந்த குழந்தைகள் ( ஏன் நான் கூட) அந்த இரைச்சலை கேட்டு பயந்து ஒதுங்கினதுகள்.

அலமேலு மாமி என் மனைவி கிட்ட வந்து நீங்க பயப்படாம உக்காந்து சாப்பிடுங்கோ என் சம்பந்தி கொஞ்சம் யானைவெடி, அவ பையன் அதான் என் மாப்பிள்ளை கையாலாகதவர்.நீங்கதான் என் பொண்ணை பாத்துக்கணும்னா.

இப்பதான் முதமுத பாக்கறோம் இப்படியா சொந்த மாப்பிள்ளையை பத்தி சொல்லுவா.

நான் என் மனைவி கிட்ட “அந்த மாமி ஏன் மாப்பிள்ளையை கையாலாகாதவன்ரா, அதான் ஒரு        பொண் குழந்தை இருக்காளே”

“அடப் பாவி மனுஷா மெதுவா பேசுங்கோ எப்பப் பாரு விகல்பமாவே யோசனை”

அன்னிக்கு சாயந்தரம் வரை அவங்க வீட்ல அமக்களம்,வரவா போறவானு. ஆச்சு நைட் ஒரு                         11 இல்லை 11.30 இருக்கும்,கீழ் வீட்ல இருந்து ஒரே கூச்சல். தூக்கம் கெட்டுப் போய் கீழே போனா,             அந்த பட்ஜீக்கும், அவர் மனைவிக்கும் வாய்ச் சண்டை முத்தி, நான் போறப்ப அவர் அவ முடியை பிடிச்சு உலுக்கற ஸ்டேஜ். சுஸ்மாவோட அம்மா அலமேலு சுவத்தோட ஒட்டிண்டு சண்டையை ரசிக்கற மாதிரி நிக்கறா. குழந்தை காயத்ரி ஒரு பயத்தோட செயலற்று உக்காந்திருக்கு.

என்னை பாத்த பட்ஜீ தன் மனைவியின் முடியை விட்டுட்டு கோபத்தோட சட்டையை மாட்டிண்டு     வெளில கிளம்பிட்டார்.இப்ப என் மனைவியும் கீழே வந்துட்டா.சுஸ்மா கண்ணீரோட என் மனைவியை கட்டிப் பிடிச்சு மேலும் அழறா.அவ அம்மா தன் மாப்பிள்ளையை பத்தி எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு பேசறா.

“பொண்டாட்டியை அடிச்சிட்டு போறான் பாருங்கோ வப்பாட்டியை தேடிண்டு, என் குழந்தையை அழவச்ச இவன் நாசமாதான் போவான்”.

நான் ஆச்சரியமா பாத்தேன் ஒரு மாமியார் தன் சொந்த மாப்பிள்ளையை தன் பொண் எதிரே இப்படியெல்லாம் பேசுவாளானு.

மறு நாள் அலமேலு மாமி தன் வீட்டுக்கு புறப்பட்டா. போறதுக்கு முன்னால எங்க போர்ஷனுக்கு வந்து பட்ஜீ ரொம்ப மோசமானவன், தெரியாம பொண்ணை கொடுத்தாச்சு என் பொண்ணையும் பேத்தியையும் பத்திரமா உங்க குழந்தையாட்டம் பாத்துக்கோங்கனுட்டு போனா.

ஆனா மறுநாள் சாயந்தரம் கீழே போறப்ப பாக்கறேன், பட்ஜீ  தன் பொண்டாட்டிக்கு தலைல பூ வச்சி விடறதையும், அவ சிரிச்சிண்டே , “நினைச்சா முடியை பிடிச்சு உலுக்கறது இல்லைன்னா இப்படி                பூ வச்சு தாஜா பண்றது சரியான கில்லாடி சாஸ்திரிடா நீ” ன்னு புருஷன் கிட்ட கொஞ்சிக்கறா,       குழந்தை காயத்ரி புரியாம சிரிக்கறது.

அடுத்த ரெண்டு மாசத்துல பூராவும் புரிஞ்சது, அந்த அலமேலு மாமி எப்பல்லாம் வராளோ அப்பல்லாம்,இவங்க வீட்ல சண்டை இல்லைன்னா கணவன் மனைவிக்குள்ளே ஏக அன்னியோன்யம்.

ஏன் இந்த தாயார்கள் தன் பெண் வீட்டுக்கு அடிக்கடி வந்து குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்?     இந்த மாமி ஏன் இப்படி  தன் சொந்த பொண் வாழ்க்கையை கெடுக்கறா இதுதான் இன்னும்  புரியாத புதிர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காஸ்ட்லி கிப்ட் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    தாயம்மா (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி