in ,

பயணங்கள் முடிவதில்லை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இரண்டு பாக்கெட் பத்து ரூபா ரெண்டு பாக்கெட் பத்து ரூபா என மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறி 17 வயது ராஜா சிப்ஸ் பாக்கெட்டை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தான். மணி வேறு ஆகிவிட்டது பத்து ரூபாய்க்கு இரண்டு என்று சொல்லியும் விற்கவில்லையே என்று மனதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.

 டேய், பஸ்சை விட்டு கீழே இறங்குடா, உனக்கு எத்தனை தடவை தினமும் சொல்வது என ராஜாவைத் திட்டிக் கொண்டிருந்தார் டிரைவர்.

அண்ணே, கோவிச்சுக்காதீங்க அண்ணே என சொல்லியவாறு பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான். அப்போது கண்டக்டர்  என்னப்பா ஏதாவது சேல்ஸ் ஆச்சா என ராஜாவிடம் கேட்டான்.

இல்லண்ணே, பத்து ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு பாக்கெட், பத்து ரூபாய்க்கு இரண்டு என விற்றேன். விற்பனை கொஞ்சம் குறைவாக தான் இருந்தது என்றான் ராஜா.

ஏண்டா நஷ்டத்திற்கு விக்கிற என கண்டக்டர் கேட்க நாளையிலிருந்து பிளஸ் டூ தேர்வு ஆரம்பம் ஆகிறது. அதனால் சீக்கிரம் விற்று விட்டு போகலாம் என  விற்றேன் எனக் கூறினான் ராஜா.

நீ நாளையிலிருந்து தேர்வு முடியும் வரை படிக்கிற வேலையை மட்டும் பாரு என கண்டக்டர் சொல்ல  வீட்ல அம்மாவும் தங்கச்சி இருக்கிறார்களே, சாப்பாட்டுக்கு என்ன பண்றது, ஏற்கனவே நான் விற்றுக் கொண்டு போற பணத்திலே  அரை வயிற்றுக் கஞ்சி தான் குடிக்க முடிகிறது என்றான் ராஜா.

நான் ஒரு தொண்டு  நிறுவனத்தில் உன்னை பற்றி சொல்லி இருந்தேன். மீண்டும் அவர்களிடம் சொல்லி உன் வீட்டிற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்கிறேன். கண்டிப்பாக செய்வார்கள் என்றார் கண்டக்டர்.

நாளைக்கு நல்லபடியா தேர்வை  எழுது எனச் சொல்லிக் கொண்டே தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ரூபாய் 500 எடுத்து கொடுத்தார் கண்டக்டர். அண்ணே எனக்கு இந்த காசெல்லாம் வேணாம். நான் உழைக்கிற காசு எனக்கு போதும் என்று சொல்ல

தேர்வை முதலில் நல்லபடியாக எழுது.  நீ மறுபடியும் சம்பாதிக்கும் போது உன்னுடைய பணத்தை சிறுக சிறுகக் கொடுத்து உன்னை கடனை முடித்துக்கொள் என்று கூற

மறுப்பேதும் சொல்ல முடியாமல் ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணே என ராஜா வாங்கிக் கொண்டான்.

அடுத்த நாள் மாலை டிரைவர் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ராஜா வீட்டுக்கு சென்றான். ராஜாவின் அம்மாவை பார்த்ததும் நாம் விரும்பிய கல்யாணி போல தெரிகிறதே, பார்ப்பதற்கு சினிமா நடிகை போல் இருந்தவர் கன்னத்தில் குழி விழுந்து கண்ணெல்லாம் சொருகி போய் அமர்ந்திருந்தார்.

நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதற்கு செருப்பை  எடுத்து வீசியவள் தானே இந்த கல்யாணி  என நினைவுகள் பின்னோக்கி சென்றது.

கல்யாணி செல்வந்தர் வீட்டுப் பெண். படிப்பிலும் சரி,  அழகிலும் சரி அந்தப் பள்ளியில் அவளை மிஞ்ச முடியாது. அதேபோல் யாரையும் மதிக்கவும் மாட்டாள்.  மண்டை கணமும் அதிகமாக இருந்தது.

மற்றவர்களை விட சக்தியிடம் கொஞ்சம் பிரியமாக இருந்தாள் கல்யாணி. ராஜா தன்னிடம் பிரியமாக இருப்பதை தவறாக நினைத்துக் கொண்டு ஐ லவ் யூ என்று சொன்னதற்கு செருப்பை எடுத்து மேலே வீசினாள். அதன் பிறகு இரண்டு பேருக்கும் பேச்சுவார்த்தை நின்று போய்விட்டது. அதன் பிறகு கல்யாணியை திரும்பி கூட பார்ப்பதில்லை சக்தி.

காலங்கள் செல்ல செல்ல அனைத்தையும் மறந்து இருவரும் அவரவர் வழியை பார்த்துக் கொண்டு சென்று விட்டார்கள். அதன் பிறகு இன்று தான் கல்யாணியை பார்க்கின்றான் சக்தி.

வாங்க அண்ணே, எப்ப வந்தீங்க?  எனக் கேட்டுக் கொண்டேன் உள்ளே நுழைந்தான் ராஜா.  அம்மா நான் நேத்து சொன்னேன்ல கண்டக்டர் அண்ணன் பணம் கொடுத்தார்கள் என்று,  அவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என அம்மாவிடம் சொன்னான் ராஜா.

அப்படியாப்பா ரொம்ப சந்தோசம். எனக்கு கண்ணு கொஞ்சம் சரியாக தெரியாது. என் பையனுக்கு பணம் எல்லாம் கொடுக்காதீர்கள், ஒரு வேலையை செய்ய சொல்லி பணம் கொடுங்கள். அப்பதான் அவனுக்கு பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்.  என் கணவரை வேலைக்கு அனுப்பாமல் பெற்றோர் பணம் கொடுத்து பணம் கொடுத்து வளர்த்தார்கள். பணம் எளிதாக கிடைக்கிறது என்று குடிப்பது,  பல பெண்களின் சாகசம் என்று என்னையும் என் குழந்தையையும் கவனிக்காமல் ஒரு வழியாக இந்த உலகத்தை விட்டு போய் சேர்ந்து விட்டார். அதனால் தான் என் குழந்தைக்கு ஒரு சிறு வேலையை கொடுத்து பணத்தை கொடுங்கள், நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றாள் கல்யாணி.

தேர்வு முடியும் வரை வெளியே சென்று சம்பாதிக்க வேண்டாம். நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய கடனை வேலைக்கு சேர்ந்த பிறகு எங்களுக்கு கொடுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள் இருவரும்.

செருப்பால அடி வாங்கிய சக்தி என கல்யாணிக்கு தெரியாமல் இருக்கும் வரை நல்லது. உதவி தானே செய்கிறோம் உபத்திரம் செய்யவில்லையே என நினைத்தவாறு வீடு போய் சேர்ந்தான் டிரைவர் சக்தி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 10) – முகில் தினகரன், கோவை

    அன்புவின் அழுகை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு