in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 19) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17   பகுதி 18

அரசு ஏர்போர்ட்டில் வந்திறங்கிய போது திலக் வெளியே காத்திருந்தான்.

“வாப்பா அரசு, எப்படி இருக்கிறாய்?” என்று அழைத்தான்.

“திலக் ஏன் வேலையெல்லாம் போட்டுவிட்டு சும்மா இங்கேயெல்லாம் வந்தாய்! ஏதோ வியாபாரத்தை தொடங்கி வைக்க உதவினாய். அதன் மூலம் முதன் முறையாக சிங்கப்பூர் போகிறேன் என்பதால் உன்னிடம் போன் பண்ணிச் சொன்னேன்.”

“மற்றபடி ஏர் போட்ர்டுக் கெல்லாம் உன்னை வீணாக அலையச் சொன்னது? மற்றபடி வியாபாரம் எப்படி இருக்கிறது? வெளிநாட்டு ஆர்டர் ஏதாவது உண்டா?” அரசு திலக்கை கட்டி அணைத்தபடி கேட்டான்.

“எங்கே வெளிநாட்டு ஆர்டருக்கு ஓடுறது…. நீ போட்டு அனுப்புகிற வெளிநாட்டு எல்.சி. களுக்கே என்னாலே சப்ளை பண்ண முடிய வில்லை. உண்மையிலே உன் வளர்ச்சி என்னைத் திகைக்க வைக்கிறது அரசு. ஏதோ ஒரு தீர்மானமில்லாமல் வியாபாரம் பண்ண வந்திருக்கின்ற பணக்கார பையன் கொஞ்சநாள் ஆடிப் பார்த்து விட்டு திரும்ப ஊருக்குப் போய்விடுவான் என்று நினைத்தேன். பரவாயில்லை கொடிமரம் நாட்டிவிட்டாய். கொடிபறக்க விடாமல் ஓயமாட்டாய். கீப் இட் அப் மை டியர்.”

“அப்புறம் இங்கே உன்னை வந்து பார்க்க வந்ததில் ஒரு சுய நலமும் ஒரு உன் நலமும் கலந்திருக்கிறது.”

“இந்த வேளையில் கேட்க  வேண்டுமா என்றுதான் நினைத்துக் கொண்டிருந் தேன்.” என்றான் கடிகாரத்தைப் பார்த்தவாறு.

“அட சும்மா சொல்லுப்பா இன்னும் நேரனிருக்கிறது.”

“பரவாயில்லை நீ போய் எனக்குச் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணுவா யல்லவா?”

“கண்டிப்பாக…. இப்படி நீ கேட்கும் போதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சொல் என்ன சுய நலம்… என்ன என் நலம்?”

”ஒன்றுமில்லை. சிங்கப்பூரிலே ஒரு கிளையண்டை தொடர்பு கொண்டு கொஞ்சம் எக்ஸ் போர்ட் பண்ணினேன். போனிலேயே இ..மெயிலிலோ கிடைக்கமாட்டேன் என்கிறான். முடிந்தால் அவனைப் பார்த்துப் பேசி கொஞ்சம் வரவேண்டிய பணத்தை வசூல் செய்யணும். அப்புறம் உன் நலம் பற்றிச் சொன்னேனில்லே… நேற்று ஒரு விசன்ஸ் புத்தகம் பார்தேன். ஆடு, மாடு தீவனம் தயாரிக்க புதிய உணவு வகை கலக்க மிகவும் குறைந்த விலையில் கண்டு பிடித்திருக்கிறர்களாம். அதை சிங்கப்பூரிலே இந்த அட்ரஸில் தான் (பையிலிருந்த காகிதத்தை எடுத்து) முதன் முதலாக அறிமுகம் படுத்துகிரார்களாம்.”

“இதையும் பார்த்தாய்  என்றால் உன் தயாரிப்பு செலவு, மற்றும் மூலதனம் போடுவதோடு தொழிலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.”

“ஆமாம். ஷிப்பிங் கம்பெனி ஆரம்பிக்க சொன்னாயே என்னாயிற்று? கையிலிருந்த முகவரி காகிதத்தை அரசுவிடம் கொடுத்து விட்டு கேட்டான் திலக்

“நான் சிங்கப்பூர் போறதே இப்போது மெயினாக ஷிப்பிங் கம்பெனி விஷயமாகத் தான் போகிறேன். அங்கே ஒரு ஃபிரைட் ஃபார்வேர்ட் கம்பெனியோடு ஒரு அக்ரிமெண்ட் போட்டு என்னுடைய மறு பக்க ( கவுண்டர் பார்ட்) வெளி நாட்டு கம்பெனியாக மாற்றிக் கொண்டு அங்கிருந்து ஜப்பான் போய் ஓஸாகாவிலும் அதே கம்பெனியின் இன்னொரு கிளையிலும் கொஞ்சம் பேசிவிட்டு, சில வியாபாரங்களை முடித்து விட்டு வரலாம் என்றிருக்கிறேன்.”

வெரிகுட், அரசு. வளர்ந்துகிட்டே போகணும். எங்களையெல்லாம் மறந்து விடாதேப்பா.”

“திலக்.. என்னால் பெற்ற அம்மாவைக் கூட நான் மறந்து விட முடியும். என்ன செய்யப் போகிறேன் என்று கண்ணைக் கட்டி ஆற்றில் விட்டாற்போல இருந்த போது எனக்கு முழுக்க முழுக்க அடைக்கலம் தந்து, எனக்குத் தோள் தந்து… உன்னை மறக்கச் சொல்கிறாயா?” அரசுவின் கண்களில் நீர் முத்துகள் சரிந்து விட, “அட இத்ற்கெல்லாம் வீணாக கண் கலங்கிக் கொண்டு போப்பா. எல்லா வற்றையும் சிறப்பாக செய்து விட்டு வெற்றியோடு வா.” என்றான் திலக்.

“நீ இருக்கும்போது எனக்கு எல்லாமே வெற்றிதான் திலக். கண்டிப்பாக இந்தப் பயணத்தில் உனக்கு வர வேண்டிய பணத்தை வசூலித்துக் கொண்டு உனக்கு நேரடியாக சிங்கப்பூர், ஓஸாகா ஆர்டர்கள் கொண்டு வருவேன். நீயும் என்னோடு வளர வேண்டமா?”

“எல்லாம் அந்த இறைவன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் போய் வாப்பா.” என்று திரும்பவும் அரசுவைக் கட்டிப்பிடித்து அணைத்து வழியனுப்பி விட்டு வெளியே வந்த போது பூனத்திடமிருந்து போன் வந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மணியோசை (சிறுகதை) – ச. சத்தியபானு

    செருப்பு (சிறுகதை) – Dr. ஆ.தமயந்தி MD (Physiology), கரூர்