in ,

மாறவில்லை பாசம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஏம்மா,  காலைல இருந்து எதுவுமே பேசாம இருக்க, என் மேல ஏதாவது வருத்தமா என சுரேஷ் தன்னுடைய அம்மா கண்ணம்மாவிடம் கேட்டான்.

எனக்கு என்னடா வருத்தம், அதெல்லாம் ஒன்றும் இல்லைடா, மணி ஆயிடுச்சு டக்குனு வேலைக்கு கிளம்பு. மதிய சாப்பாடு தயார் செய்து உன்னுடைய பையில் எடுத்து வைத்து விட்டேன். 

வந்து உட்காரு, இட்லி எடுத்து வைக்கிறேன் சாப்பிட்டு கிளம்பு  என சொன்னாள் அம்மா.

ஏதோ ஒன்றை மறைக்கிறீர்கள், என்னவென்று சொல்ல மறுக்கிறீர்கள் சரி பரவாயில்லை என சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பினான் சுரேஷ்.

கண்ணம்மாவுக்கு இரண்டு பையன்கள். இரண்டு பேரும் இன்ஜினியரிங் படித்துவிட்டு மென்பொருள் கம்பெனியில் உயர்தர பதவியில் இருக்கின்றார்கள்.

கண்ணம்மாவுக்கு கணவர் இல்லை, குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

கணவருடைய அலுவலகத்திலேயே கண்ணம்மாவுக்கு வேலை போட்டு கொடுத்தார்கள். வேலைக்கு சென்று வந்து குழந்தைகளுக்கு படிப்பை  சொல்லிக் கொடுத்து பட்டதாரி ஆக்கினாள் கண்ணம்மா.

பெரிய மகன் வாசு தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அந்தப் பெண்ணே எனக்கு திருமணம் செய்து வையுங்கள் கேட்டான். என்னுடைய மகனின் கணிப்பு சரியாக தான் இருக்கும் என ஒப்புக் கொண்டாள் கண்ணம்மா. 

பெண்ணின் வீட்டுக்குச் சென்று முறைப்படி  பெண் கேட்க அவர்களும் ஓகே என்று  சொன்னார்கள். 

இரண்டு மாதத்திற்கு முன்பு  பெரிய மகன் வாசுவிற்கு  திருமணம் நடந்து முடிந்தது.  பெண் வீட்டார் குறை இல்லாமல் திருமணத்தை செய்து முடித்து எதிர்பார்க்காத சீர் அனைத்தையுமே மகளுக்காக கொடுத்தார்கள்.

அழைப்பு விருந்து அனைத்தும் முடிந்து இரண்டு பேரும்  சென்னை கிளம்பிச் சென்றார்கள்.

திருமணத்திற்கு முன் பெரிய மகன் வாசு தினமும் நான்கு  ஐந்து  தடவை கைபேசியில்  அம்மாவை அழைத்து சாப்டியா மா, இன்னும் என்ன தூக்கமா என்று எதையாவது சொல்லி கலாய்த்து கொண்டே இருப்பான் தன்னுடைய அம்மாவை.

பெரிய மகன் வாசு கைபேசியில் அழைத்தால் அம்மாவுக்கு ஒரே சந்தோசமாக இருக்கும் என்பது சின்ன மகன் சுரேஷ்க்கு தெரியும். அவன் அம்மாவிற்கு துணையாக வீட்டிலேயே இருப்பதால் அம்மாவின் நடவடிக்கைகள் அனைத்தும் நன்றாகவே தெரியும்.

உங்களுக்கு பெரிய மகனைத்  தான் பிடிக்கும்,  என்னை எல்லாம் பிடிக்காது உங்களுக்கு என்று அம்மாவை கேலி செய்வான் சின்னவன் சுரேஷ்.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைடா, எனக்கு ரெண்டு பேருமே இரண்டு கண்கள் தான் என்று சொல்லுவாள் அம்மா  கண்ணம்மாள்.

திருமணத்திற்கு முன்பு தினமும் நான்கைந்து முறை மூத்தவன் வாசு பேசிக் கொண்டிருந்தவன் இந்த இரண்டு மாதத்தில் இப்போதெல்லாம் தினமும் ஒரு முறை தான் போன் செய்கிறான்.

சிறிது  வருத்தம் இருந்தாலும் அம்மா கண்ணம்மாள் எதையும் காட்டிக் கொள்வதில்லை.  அவசர அவசரமாக இரண்டு வார்த்தை மட்டும் பேசி விட்டு வைத்து விடுகிறான்.

சாப்டியா,  என்று கூட கேட்பதில்லை வாசு, சில நேரங்களில் தம்பியை கூட கேட்பதிலே என மனதுக்குள் வருத்தப்பட்டாள் கண்ணம்மா.

இரண்டு நாட்களாக பெரிய மகன் வாசு கைபேசியில் அழைக்கவில்லை என்பதற்காக மிகவும் மனம் நொந்து கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது.

அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தால் மூத்த மகனும் மருமகளும் நின்று கொண்டிருந்தார்கள்.  கண்ணம்மாவால் கண்களை நம்ப முடியவில்லை. 

மகனைப் பார்த்தவுடன் தாய் கண்ணம்மாவிற்கு அழுகை இன்னும் அதிகமாகியது. 

ஏன்டா சரியாக போன் செய்ய மாட்டேங்கிறாய் என்று கேட்க மகன் பேசுவதற்குள் மருமகள் முந்திக்கொண்டு காலில் ஒரு சின்ன ஆக்சிடென்ட், மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தது. கிட்டத்தட்ட 20 நாட்களாக மருத்துவமனையில் வைத்து பார்த்ததனால் உங்களிடம் சரியாக பேச முடியவில்லை.  என்னுடைய அம்மா தான் துணைக்கு இருந்தார்கள். 

உங்களிடம் சொன்னால் மிகவும் வேதனைப்படுவீர்கள்  என்று தான் சொல்லவில்லை. இப்போது பரவாயில்லை நன்றாக நடக்க தொடங்கி விட்டார் உங்கப் பையன். 

இனி வழக்கம் போல தினமும் பேசுவார் என்று சொல்ல கண்ணம்மா தன்னுடைய மகனையும் மருமகளையும் தப்பாக நினைத்து விட்டோமே என்று மனதுக்குள் வேதனைப்பட்டார். 

சரிங்க அத்தை, நாங்கள் ஊரில் இருந்து வந்திருக்கிறோம்.  உங்க கையால நல்ல சமையல் செய்து போடுங்கள் என்று  மருமகள் சொல்ல மகிழ்ச்சியில் சமையல் செய்ய கிளம்பினாள் கண்ணம்மா. 

    (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 1) – ஸ்ரீவித்யா பசுபதி

    முதலாளி… முதலாளிதான் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை