in ,

லவ் அண்ட் லவ் ஒன்லி (சிறுகதை) – அர்ஜுனன். R

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அரசு கலைக் கல்லூரி.  மாலை நேர வகுப்புகள் முடிந்த நேரம். நண்பர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ராமை சுற்றி ஆண் நண்பர்கள்  நேற்றைய லவ்வர்ஸ் டே யில் நடந்த சம்பவங்களை சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தனர்.

ராமைப் பார்த்து ஒரு நண்பன், “டேய் மச்சி.. நேத்து நான் ரம்யாகிட்ட ப்ரோபோஸ் பண்ணேன்..டா..” என்றான்.

அதைக் கேட்ட மற்றொரு நண்பன், “ஓ.. என்னடா ஆச்சு..? பார்ட்டி படிஞ்சதா..?”

“உடனே முடிவு சொல்ல முடியாது.. ஒரு வாரம் டயம் வேணும்னு சொல்லிட்டு போய்ட்டா..”

அப்போது ராம் குறுக்கிட்டு, “டேய்.. உஷாரா இரு.. அவ அப்பன்காரன்கிட்ட சொல்லி உன்னை அடிக்கிறதுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிடப் போறா..” என்று சொல்லி சப்தமாக சிரித்தான்.

“அது சரி.. உன் கதை என்னாச்சு..?” என்றான் மற்றவன்.

“என் கதையா..?”

“டேய்.. ஒன்னும் தெரியாதது மாதிரி கேட்காதே.. சீதாகிட்ட ப்ரோபோஸ் பண்ணினியா..?”

“இல்லடா..”

“ஏன்..டா? நாங்க தான் திருப்பி திருப்பி சொல்லி விட்டோமே..? அவ நம்ம எல்லார்கிட்டயும் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், அதை தாண்டி உன்கிட்ட மட்டும் குளோஸா பழகுறா..”

“இருந்தாலும் அவ கிட்ட இருந்து வேற எந்த ஸிக்னலும் வரலயே..?”

“டேய் மச்சி.. பொண்ணுங்க அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டாங்க.. நாம தான் பேச்ச ஆரம்பிக்கணும்..”

“இல்லடா.. இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்..”

“அட போடா.. நாம ஃபைனல் இயர் படிக்கோம்.. ஞாபகம் வைச்சிக்கோ.. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு இந்த பொண்ணுகளை எல்லாம் பார்த்து பேசிறதுக்கு கூட வாய்ப்பு இருக்காது..” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே

இன்னொரு நண்பன், “டேய்.. அவளே வராடா.. பேச்சை நிறுத்து..” என்றான்.

“ஏதோ முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கீங்க போல..?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் சீதா.

“அப்படி ஒன்னும் முக்கியமான விஷயம் இல்ல.. சீதா..” என்று ராம் சொல்ல..

அவனை நேரடியாகப் பார்த்து, “நீ ஃப்ரீயா இருக்கியா.. ராம்..? என் கூட ஹிக்கின்பாதம்ஸ் வரை வர்றியா..?” என்றாள்.

“ம்ம்.. வர்றேன்..”

ராமின் நண்பர்கள் சீதாவுக்கு தெரியாமல் ராமிடம் வெற்றி ஸிக்னலாக கட்டை விரலை உயர்த்திக் காட்டினர்.

***

ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடையில் கூட்டம் எதுவுமில்லை, ஆனாலும் சீதா தேடிய புத்தகம் நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் கிடைத்ததால் ராம் காத்திருந்தே சோர்ந்து போனான்.

அவனது சிந்தனை அலைகள் எங்கெங்கோ சென்றன. நண்பர்கள் சொன்னபடி சீதாவிடம் கேட்டுப் பார்த்து விடுவோமா என்று நினைக்கும்போதே.. அவனருகில் வந்த சீதா.. “ஸாரி அண்ட் தேங்க்ஸ்” என்றதும்..

“எதுக்கு?..” என்றான் ராம்.

“ம்ம்.. ஸாரி.. உன்னை ரொம்ப நேரம் காக்க வைச்சதுக்கு.. தேங்க்ஸ்.. நீ இவ்வளவு நேரம் எனக்காக காத்திருந்ததுக்கு.. வா.. ஒரு காஃபி சாப்பிட்டு போலாம்..” என்றாள்.

காஃபி ஷாப் பில், அருகே யாருமில்லை என்ற தைரியத்தில்.. “நீ என்னை லவ் பண்றியா.. சீதா..?” என ராம் கேள்வி கேட்க..

ஒரு கணம் யோசித்த சீதா.. “ஆமாம்..” என்றவள், அவன் முகத்தில் தெரிந்த பரவசத்தை பார்த்து.

“ஆனால்.. இதே கேள்வியை நீ என்னை காதலிக்கிறாயா என்று கேட்டிருந்தால் இல்லை என்று சொல்லி இருப்பேன்..” என முடித்தாள்.

ராம் திருதிரு வென முழித்தபடி சற்று எரிச்சலாக, “ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்..?” என்றான்.

“இத பாரு ராம்.. நான் உன்கிட்ட வச்சிருக்கிறது வெறும் அன்பு மட்டும் தான்.. காதல் இல்லை.. என்னோட அன்பை கொச்சைப் படுத்திடாதே.. அன்புவசப்பட்டவர்கள் வெறும் அன்பை மட்டுமே பகிர்வர்.. ஆனா காதல் வசப்பட்டா.. உடல், உயிர், ஆன்மா எல்லாவற்றையும் கொடுக்க ரெடியாக இருக்க வேண்டும்.. இந்தப் புத்தகம் கூட உனக்கு பிரஸன்ட் பண்ணத் தான் வாங்கினேன்..” என்று சொன்னபடியே.. தான் வாங்கியிருந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்துக் காண்பித்தாள்.

அது கலீல் ஜிப்ரான் எழுதிய ‘தீர்க்கதரிசி’ என்ற புத்தகம். அவள் காண்பித்த பக்கத்தில் அன்பு என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு இருந்தது:

“அன்பு தன்னைத் தவிர, வேறு ஒன்றையும் தருவதில்லை. அதைப் போலவே அது தன்னைத் தவிர்த்து வேறுஒன்றையும் உங்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுவதுமில்லை”

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீக்குச்சிகள் (சிறுகதை) – சிவ யாத்ரா

    வார்த்தைகளைக் கொட்டிய பிறகு (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி