in ,

குறை (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ஞாயிறு மதியம் ஒரு மணி. டைனிங் டேபிளில் ராகவன் மதியஉணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ராகவனின் மனைவி சுமித்ரா பரிமாறிக் கொண்டிருந்தாள். பிகாம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் அவர்களது மகள் பூஜாவும் நைன்த் படிக்கும், அவர்களது மகன் நகுலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“.ம்….மா….. கத்திரிக்காய் குழம்பு ரொம்ப சூப்பரா…. இருக்கும்மா…… டேஸ்டியா இருக்கும்மா” என்றாள் பூஜா.

“இது என்ன பிரமாதம்? இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எங்க பாட்டி அருமையா செய்வாங்க நான் சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயசுல. அவங்கள மாதிரி கைப்பக்குவம் வேறு யாருக்கும் வராது” என்ற ராகவன், “அப்புறம்,….. சொல்ல மறந்துட்டேனே சுமி, நேத்து நீ லஞ்ச்’க்கு கொடுத்த தேங்காய் சாதத்துல, முந்திரி பருப்பு சரியா வறுபடல, சாம்பார்ல உப்பு கொஞ்சம் கம்மி”

“அப்படியா அடுத்த தடவை சரியா செய்யறேன்” என்றாள் சுமித்ரா.

“கல்யாணத்துக்கு…. முன்னாடி…. எங்கம்மா எனக்கு குடுக்கற லஞ்சுக்கு ஆபிஸ்ல ஒரே போட்டியா இருக்கும். எங்கம்மா இடிச்சு பண்ற தோசைப் பொடிக்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அடிமை. ம்…….அது ஒரு காலம்….. எல்லாம் கல்யாணத்தோடு போச்சு……” பெருமூச்சு விட்டார் ராகவன்.

எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததும் டேபிளை துடைத்து விட்டு…… சாப்பிட அமர்ந்தாள் சுமித்ரா.

பூஜா அருகில் வந்தாள். பரிமாறிய படியே கேட்டாள்.  “ஏம்மா உனக்கு கோபமே வராதா? இல்ல ரோஷங்கறதே உனக்கு கிடையாதா?”

 “ஏண்டி அப்படி கேக்குற?

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து, அப்பா தினமும் ஒரு குறை சொல்றாரு சாப்படற போதெல்லாம். உனக்கு ஏன் கோவம் வரல?”

“எனக்கு உங்க பாட்டி அம்மா மாதிரி எல்லாம் சமைக்க வராது, இவ்வளவு தான் வரும்னு ஏன் நீ சொல்ல மாட்டேங்குற?” என்று கோபமாக கேட்டாள் பூஜா.

“எனக்கும் ஆரம்ப காலத்தில் கல்யாணம் ஆன புதுசுல கொஞ்சம் கோவம் வந்தது. அவங்ககிட்ட பக்குவத்த எல்லாம் கேட்டுட்டு செய்யுன்னு சொன்னார் உங்க அப்பா. நானும் அவங்ககிட்ட கேட்டு அதே மாதிரி தான் செய்யறேன், ஆனாலும் உங்க அப்பாக்கு திருப்தியா இல்ல. உங்க அப்பாவோட குணத்த மாத்த முடியாதுன்னு பேசாம விட்டுட்டேன். நாளாக நாளாக இந்த மாதிரி பேச்சு எனக்கு பழகி போச்சு” என்றாள் சுமித்ரா சோகமான குரலில்.

மாலை மணி 6.30

ராகவன் டிவியில் கிளாசிக்கல் மியூசிக் பார்த்து கொண்டிருந்தார்.  பூஜா, நகுலனை சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தாள் ரூமில்.

“அங்கே என்ன சத்தம்” என்று ஹாலில் இருந்து கத்தினார் ராகவன்.

பூஜாவும் நகுலனும் வந்தார்கள்

“ஒன்னும் இல்லப்பா…… பயாலஜி பிராக்டிகல் நோட்டில என்னை வரைஞ்சு தரச் சொல்றான் பா …… அவனுக்கு வரைய வராதாம். நான் சொல்றேன்…… ஒரு பேப்பர்ல வரைஞ்சு காமிக்கிறேன்….. டா…….அதை பார்த்தே வரைய சொல்றேன்……..அத கேட்க மாட்டேங்கிறான்….ப்பா….” என்றாள் பூஜா.

“அவனுக்கு வரலைன்னா விடு…. நீதானே அவனுக்கு எப்பவும் வரைஞ்சு குடுப்ப…… இன்னிக்கு என்ன……?” என்றார் சற்று கோபத்துடன் ராகவன்..

“இவன் என் கூட பிறந்தவன் தானே?…..அது எப்படி எனக்கு வர்றது இவனுக்கு வராம போகும்? ட்ரை பண்ணினா கண்டிப்பா வரும்” என்றாள் பூஜா.

“நானும் வரைவேன்……. என்ன…. கொஞ்சம்…… கோணமானலா போகும். டீச்சர் மார்க் கம்மியா போட்டுருவாங்க……..வரைஞ்சு குடு…..வரைஞ்சு குடு” என்றுநோட்புக்கினால் பூஜாவின் தலையை தட்டினான் நகுல்.

“அப்புறம்….. இவன் ஏன் என்னை விட ஹைட்டா இருக்கான்? நான் ஏன் குட்டையா இருக்கேன்…. இவன் ஏன் என்ன மாதிரி இருக்க மாட்டேங்கறான்?” கோபமாக கத்திக் கொண்டே அவன் முதுகில் குத்தினாள் பூஜா.

“அது எப்படிமா வரும்? நீ என்னை மாதிரி கொஞ்சம் கோவக்காரி….. அவன்…உங்க அம்மா மாதிரி சாந்தம் அது எப்படி சரியாகும்?” என்றார் ராகவன் சிறிது பெருமையாக

“ஏம்பா…..ஒரே குடும்பத்துல ஒரே வயத்துல பிறந்த எங்களுக்கிடையே இத்தனை டிஃபரன்ஸ் இருக்கே? வேற குடும்பத்தில, வேற பழக்கவழக்கத்துல வளர்ந்த அம்மாவுக்கு மட்டும் எப்படி உன்னோட பாட்டி மாதிரியும் அம்மா மாதிரியும் இருக்க முடியும்?”

“நான் ஒன்னும் அவங்களை மாதிரி மாறச் சொல்லல….. அவங்கள மாதிரி சமைக்க கத்துக்கோன்னு சொன்னேன்…. இதுல என்ன தப்பு இருக்கு?” என்றார் ராகவன்.

“அப்போ நீயும், தாத்தா மாதிரி ட்யூஷன் எடுக்க கத்துக்கோ” என்றான் நகுல்.

“சரி, சரி, …..உள்ள போங்க…. எல்லாரும்…..” கோவமாக சொல்லிவிட்டு டிவியின் பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டார் ராகவன்.

அன்றிலிருந்து சாப்பாட்டின் போது ராகவனின் வாயிலிருந்து குறை கூறும் வார்த்தை ஒன்று கூட வரவில்லை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நான் யார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை