in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 12) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே …

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

‘ஆமாம் வீட்டுக்குள் மாதுளை வைச்சா..அது எப்படி காய் காய்க்கும் ..தோட்டத்துல வச்சாலே சரியா காய்க்க மாட்டேங்குது …சரி..சரி பாட்டு ரைமிங்கா வரணும்னு கவிஞர் எழுதியிருப்பாரு..’

தான் வைத்த ஆரஞ்சு கலர் ரோஜா செடி மொட்டு விட்டு பூத்திருந்தது… மாயாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. உடனே அத்தையிடம் போய் சொல்ல வேண்டும். அத்தை அதை பறிச்சு பிள்ளையாருக்கு வைக்கனும்னு சொல்லுவாங்க ..”ஆனா பிள்ளையாரே! இந்தப் பூ இன்னைக்கு செடிக்குத் தான்.. நாளைக்கு தான் உனக்கு கிடைக்கும்”ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுவேன் ..

” புகுந்த இடம், பிறந்த இடம்

வேறு இல்லை …

ஞாயிறுக்கும், திங்களுக்கும்

பேதமில்லை…”

பாட்டை தொடர்ந்தபடியே குதித்துக் கொண்டே உள்ளே ஓடியவளுக்கு ஹாலில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது… ஹாலில் நட்ட நடுவே பரமேஸ்வரன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் …மாமாவை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளைப் பார்த்ததும் அவர் முகம் கடுகடுவென மாறியது ..

“இது என்ன வயசு பொண்ணு லட்சணமா இல்லாம, பாடிக்கிட்டு ,குதிச்சுகிட்டு, ஆடிக்கிட்டு,இது என்ன வீடா இல்ல நாடகக் கொட்டகையா? கொஞ்சம் கூட அடக்கமில்லாம.. உங்கம்மா உன்னை இப்படித்தான் வளர்த்திருக்காளா…?

சாரதாவுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. பொம்பள புள்ளைய அடக்கி , அடக்க ஒடுக்கமா வளர்க்கனும்னு அறிவில்ல அந்த ஓடுகாலி நாய்க்கு …” கடுமையான கோபத்தில் இருந்தவருக்கு வார்த்தை தெறித்து விழுந்தது.

அதிர்ந்து போனாள் மாயா. இது போல ஒரு பேச்சை அவள் மாமாவிடமிருந்து இதுவரை கேட்டதில்லை. எப்போதும் பெரிதாக அன்பாய் பேசாவிட்டாலும்.. அதட்டி கடுமையான வார்த்தைகளை பேசியதில்லை. அதுவும் அவள் அம்மாவை காயப்படுத்தும் வார்த்தையை கூறியதும் அவள் கோபம் அவளை படபடக்க வைத்தது…

“என்ன மாமா பேசுறீங்க? எங்க அம்மா யாரு. உங்க சொந்த தங்கச்சி! அது கூட உங்களுக்கு பெரிசா தெரியலையா? நீங்க எப்படி எங்க அம்மாவ பத்தி அப்படி ஒரு வார்த்தை பேசுவீங்க? இன்னைக்கும் எங்கம்மா ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்க எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாது ..எங்கேயும் வெளியே கூட போக மாட்டாங்க… கோயில் ,குளம், சாமின்னு வாழ்ந்துகிட்டு இருக்காங்க… அவங்கள போயி இந்த மாதிரி அசிங்கமான வார்த்தையால பேசுறீங்களே! இத நான் கொஞ்சம் கூட உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல “

“அப்படித் தாண்டி பேசுவேன்.. உனக்கு என்ன தெரியும்? உங்க அம்மாவ பத்தி! ஓடுகாலி நாயி… போய் உங்க அத்தை கிட்ட கேளு ..உங்கப்பன் புத்தி தான உனக்கும் இருக்கும்..அந்தப் பய ரத்தம் தானே உன் உடம்புல ஓடுது .அதான் என் பிள்ளைய வளைச்சுப் போட பாக்கற..பணக்கார வீட்டுக்கு மருமகளா வந்துட்டா உன் வாழ்க்கை சொகுசா இருக்கும்ல ..அதான் இந்த வீட்டையே சுத்தி சுத்தி வர ..எனக்கு உன் திட்டமெல்லாம் தெரியாதுன்னு நெனச்சியா …உங்கம்மாவே உனக்கு சொல்லிக் குடுத்திருப்பா..”

வார்த்தைகள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற… பதறித் துடித்தாள் மாயா ..

“போதும் மாமா.. இதே பேச்ச வேற யாராவது பேசியிருந்தா சும்மா விட்டிருக்க மாட்டேன்.. நான் சிரிச்சுகிட்டு கலகலப்பா இருக்கிறதனால அடங்கிப் போவேன்னு நினைக்காதீங்க.. வேறு யாராவது இதை பேசியிருந்தா நான் அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன். ஆனால் நான் அத்தை மேல பெரிய மரியாதை வெச்சுருக்கேன். அந்த மரியாதையினால தான் உங்களுக்கு பதில் பேசாம இருக்கேன். “

“இல்லைன்னா என்னடி செஞ்சிடுவே? சின்னக் கழுதை எதுத்தா பேசுற ..?”

அதற்குள் மாடியிலிருந்து ருக்மணி தேவி.. கால் வலியில் நடக்க முடியாமல் படுத்திருந்தவள், இவர்கள் சண்டை காதில் விழ ஓடிவந்தாள் …” மாயா இங்க வா ..மாடிக்கு வா.. அவர்கிட்ட ஒன்னும் பேசாத ..நான் அத்தை சொல்றேன்ல மேல வா” என்றாள்.

“அத்தை இவ்வளவு நடந்த பிறகும் இனிமேல் ஒளிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல.. நான் இப்ப சொல்றேன், நான் ஓடி ஓடி இந்த வீட்டுக்கு வந்தது உங்க அன்புக்காக தான் அத்தை . நீங்க அம்மாவை நல்ல கவனிச்சுகிறது..தன் வாழ்க்கையில தனக்கு கிடைச்ச ஒரே பிடிப்பு உங்களுடைய அன்பும் அக்கறையும் மட்டும்தான்னு அம்மா நிறைய தடவை சொல்லி இருக்காங்க .அதேபோல நான் வளர்ற வரைக்கும் நீங்க எனக்கு பெரிய சப்போட்டா இருந்தீங்க.”

” கேலியாகத்தான் அத்தானை நினைச்சுப் பேசி இருக்கேனேயொழிய எனக்கு அத்தானை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையெல்லாம் கிடையாது ..”

“மாமா நீங்க சொல்லவே வேண்டாம். உங்களுடைய அந்தஸ்து என்ன.. எங்களுடைய அந்தஸ்து என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இரண்டாவது நீங்க பணத்துக்கும் அந்தஸ்துக்கும் மட்டுமே மதிப்பு கொடுக்கிறவங்க… எங்களையெல்லாம் மனுஷங்களா மதிக்கிறதே பெரிய காரியம். அதனால நான் அந்த மாதிரி பெரிய ஆசை எல்லாம் வீணா வளர்த்துக்கிட்டு உங்க வீட்டுக்குள்ள உங்க மருமகளா வரணும்னு ஆசைப் படல …”

“பிறப்பிலேயே இருக்கிற சொந்தமான மருமகள் என்கிற முறையிலேயே பாசமில்ல உங்க கிட்ட …இதுல உங்க மகனுக்கு மனைவியாக வந்து என்ன பாசத்தையும் அன்பையும் நான் உங்ககிட்ட நான் எதிர்பார்க்க முடியும்?. அதுக்கு நீங்க ஒரு காலமும் சம்மதிக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் .. “

“அதனால என் மனசுல நான் எந்த ஆசையும் கிடையாது . அத்தானும் அந்த மாதிரி நினைச்சு என்கிட்ட பழகல. இயல்பா நாங்க ஒன்னா விளையாண்ட… ஒண்ணா வளர்ந்த ..அன்பும் பாசமும் தான் இருக்கு எங்களுக்கு நடுவே . அதத் தான் நானும் பெருசா மதிக்கிறேன்…”

“எவ்வளவு கேவலமா எங்கள பேசுறீங்க? பணம் இல்லைன்னா சுயமரியாதையும், இல்லாமல் போயிடாது மாமா. நாங்களும் உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறோம் …”

மேலும் பரமேஸ்வரன் குரலை உசத்தி பேச ஆரம்பிக்க… கையெடுத்துக் கும்பிட்டாள் மாயா ..

“தயவுசெய்து வேண்டாம்… நீங்க பெரியவங்க… இதுக்கு மேல நான் பேசினா அது உங்களுக்கு மரியாதையா இருக்காது… நான் போறேன் வீட்டுக்கு .அத்தை எப்பவாவது வந்து உங்கள பாத்துட்டு போறேன்.. ஆனா இனி அடிக்கடி வர மாட்டேன்..” என்று அவள் அழுது கொண்டே வெளியே ஓடினாள். அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியாய் கொட்ட ..வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் …

ருக்மணி வேகமாக மாடிக்கு தன் ரூமுக்கு போனாள். போனை எடுத்து சாரதாவிடம் ..

“சாரதா நாம எதுக்கு பயந்தமோ அது இப்ப நடந்து போச்சு! இன்னைக்கு உங்க அண்ணன் ரொம்ப கோவமா மாயா கிட்ட கன்னாபின்னான்னு பேசிட்டாரு ..அவ பாவம். .அவ உன்ன சப்போர்ட் பண்ணி நல்லா நாலு வார்த்தை கேட்டா ..இனி தினமும் வர மாட்டேன்னு சொல்லிட்டு அழுதுகிட்டே கிளம்பிட்டா ..அவளை சமாதானப்படுத்து. நல்லா கவனிச்சுக்கோ …நாளைக்கு நான் பேசுறேன் “

“அண்ணி! அண்ணன் கன்னாபின்னான்னு பேசறது என்ன புதுசா? அவர் வாயிலிருந்து வார்த்தை வாங்கக்கூடாதுன்னு தான் நான் அவர் கண் முன்னாடியே வர்றதில்ல. அவரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த 25 வருஷத்தில் நானும், அவரும் நேருக்கு நேர் சந்திச்சுகிட்ட சந்தர்ப்பம் ரொம்ப கம்மி.. எனக்கு அவர் கோபமும், வார்த்தைகளும், பழகி போச்சு “

“ஆனா மாயா பாவம் …அவளுக்கு அவரைப் பற்றி தெரியாது.

ஆனாலும் எல்லாம் தெரிய வேண்டிய நேரம் வந்துடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க அண்ணி நான் அவளைப் பாத்துக்கிறேன் அவளுக்கு பக்குவமா விஷயங்களை எடுத்து சொல்றேன்..”

“சாரதா அண்ணியிடம் பேசிவிட்டு, போனை வைக்க.. அழுதுகொண்டே உள்ளே ஓடி வந்த மாயா ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். பூப்போன்ற அவள் மனசில் விஷத்தை கொட்டிய அண்ணனை நினைக்கையில், சாரதாவின் மனம் துடித்தது. தன்னைத் தான் வாழ விடவில்லை.. தன் மகளையும் இப்படி அழ வைக்கிறாரே ” என்று மனம் குமைந்தது …பழைய கசப்பான நினைவுகள் மனதி ல் அலைமோதியது.

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கெடுபிடி சட்டம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நடுத் தெருவில் (சிறுகதை – பிற்பகுதி) – நாமக்கல் வேலு