in ,

ஞானோதயம் (சிறுகதை) – பிருந்தா ரமணி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“அம்மா! எனக்கு நேரமாச்சும்மா! சீக்கிரம் நான் இன்டர்வியூவுக்குப் போகணும்மா இவ்வளவு லேட்டாக்குறீங்களே?” என்று புலம்பிய மதனை

“ஆமாமா! ஐ.ஏ.எஸ் கலெக்டர் வேலைக்கு போறாரு; இவ்வளவு கூத்தடிக்கிறாரு!” என்று கேலி செய்தாள் அவன் தங்கை நித்யா, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை (கணிதம்) படிக்கும் மாணவி.

“அம்மா! இவ என்னைச் சீண்டி விடறதிலேயே குறியா இருக்கா! நான் வேலை கிடைச்சாப் போக மாட்டேன்னா சொல்றேன்!”

“சரி வா! வந்து டிபனைச் சாப்பிடு! இன்னிக்குப் போறதுலேயாவது உனக்கு வேலை கிடைச்சா நல்லா இருக்கும்!”

அவன் ஐந்து வயதாக இருக்கும் போதே அவனுடைய அப்பா இறந்து விட்டார். அன்றிலிருந்து அவன் அம்மா தான் தனக்குத் தெரிந்த தையல் வேலை, முறுக்கு சுற்றிக் கொடுப்பது என்று செய்து கொடுத்துக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தாள். இவன் அரசு வேலை கிடைத்தால் தான் போவேன் என்று பிடிவாதமாக இருந்தது அம்மாவுக்குக் கவலையாக இருந்தது.

“அம்மா! நான் போயிட்டு வர்றேம்மா!” என்று கிளம்பிச் செல்லும் போது வழியில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனும், எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமியும் சேர்ந்து பழைய பேப்பர், அட்டை இவைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.

இவன் அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு, “ஏம்ப்பா! நீ பள்ளிக்குப் போகாமல் இப்படிக் குப்பை பொறுக்கிட்டு இருக்கியே?” என்று கேட்டான் மதன்.

“இல்லேண்ணா! எங்கப்பா வியாதியினால் படுத்த படுக்கையா ஆயிட்டாரு! எங்கம்மா வீட்டு வேலை செஞ்சு சம்பாதிக்கிறாங்க! அவங்க கொண்டு வரும் பணம் வீட்டுச் செலவுக்குப் பத்தலை; எங்கப்பாவுக்கு வைத்தியமும் பண்ண முடியலை; அதான் நானும், என் தங்கச்சியும் இந்த மாதிரி வேலை பார்க்க வந்துட்டோம்!” என்றவுடன் மதனுக்குப் பொட்டில் அடித்தாற் போலிருந்தது.

உடனே இவனுக்கு ஞானோதயம் வந்தது. இனிமேல் வேலை கிடைக்கும் வரை வீட்டில் சும்மா பொழுதைப் போக்காமல், வீடுகளுக்குப் பேப்பர் போடுவது, பையன்களுக்கு டியூஷன் எடுப்பது என்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எப்போ வரப் போறே? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    கூர் வாள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை