in ,

என்றும் பூகம்பமே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

தினமும் காலைல எழுந்ததும் குளிச்சிட்டு தான் கீழ வரணும், குளிக்காமல் எந்த வேலையும் செய்யக்கூடாது.

சரிங்க அத்தை, நான் போய் குளிச்சிட்டு வந்தர்றேன் என்றாள் உமா.

அம்மா, அண்ணி ரொம்ப நல்லவர்களாக தான் இருக்கிறார்கள், நீங்க சொன்ன உடனே போய் குளிச்சிட்டு வரேன்னு சொன்னாங்களே, கவனிச்சிங்களா என்றாள் நாத்தனார் விஜி.

கல்யாணம் ஆகி இப்பதான் ஒரு வாரமாக வீட்டில் இருக்கிறாள், போக போக தான் தெரியும்,  இவள் நல்லவளா? கெட்டவளா?  என்றார் உமாவின் மாமியார் பத்மா.

அம்மா, அண்ணன் வராங்க என்று விஜி சொல்ல அந்த இடம் அமைதியானது.

காப்பியை கலந்து எடுத்து வந்து மகன் சேகருக்கு வைத்தாள் தாய் பத்மா.

அம்மா சாயங்காலம் உமாவை அழைச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்,  ஞாயிற்றுக்கிழமைக்கு சாயங்காலம் வந்துறேன் என்றான் சேகர்.

ஏன்டா கல்யாணம் ஆகி 20 நாள் தானே ஆகிறது, இப்பொழுது தானே ஒரு வாரம் இருந்துட்டு வந்தீங்க, என்றாள் பத்மா.

இல்லம்மா,  உமா ராத்திரி  எல்லாம் அவங்க அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருந்தா என்றான் சேகர்.

பத்து நாளைக்கு அப்படித்தான்டா இருக்கும்,  அப்புறம் போக போக சரியாயிடும். போன்ல போட்டு பேச வேண்டியதுதானே,  வீடியோ கால்ல பாத்துக்க வேண்டியது தானே, இங்க என்ன குறையா இருக்கு அவளுக்கு, அதெல்லாம் போக வேண்டாம்,  அடுத்த வாரம் பாத்துக்கலாம் என்றாள் தாய் பத்மா.

பேசிக்கொண்டிருக்கும் போது மருமகள் உமா குளித்து முடித்துவிட்டு இரவு உடையான நைட்டியை போட்டுக் கொண்டு மீண்டும் கீழே வந்தாள்.

இரவு உடையை பார்த்ததும் மாமியார் பத்மாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது.

உடனே உமாவை அழைத்து, இந்த இரவு உடையை இரவில் மட்டும் தான் அணிய வேண்டும், அதுவும் உன்னுடைய அறையில் இருக்கும் போது அணிந்து கொள், அறையை விட்டு வெளியே வந்தால் சுடிதார் போட்டுக் கொள்ளலாம், புடவையும் கட்டிக் கொள்ளலாம், சுடிதார் போட்டால் கண்டிப்பாக துப்பட்டாவை போட்டு கொள்ள வேண்டும். துப்பட்டா இல்லாமல் இருக்கக் கூடாது என்றால் மாமியார் பத்மா.

அம்மா வீட்டுக்குள்ள தானே இருக்காங்க, ஏம்மா அத போடக்கூடாது இதை போடக்கூடாது சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டான் சங்கர்.

கடை பசங்க எல்லாம் வீட்டுக்கு வர போக இருக்காங்க, உங்க அப்பா இருக்கிறாங்க உன் தம்பி இருக்கான், இப்படி இருக்கும் போது நைட்டியை போட்டுட்டு வந்தால் நல்லாவா இருக்கும் என்றாள் பத்மா.

புடவை எல்லாம் அவ்வளவா நான் கட்ட மாட்டேன், எனக்கு புடவையும் கட்ட தெரியாது என்று  உமா சொல்ல, உடனே விஜி அப்ப வீட்ல ஜீன்ஸ் பேண்ட் தான் போட்டுட்டு இருக்கீங்களா என்று நக்கலாக கேட்டாள்.

இங்க பாருங்க அண்ணி, நான் உங்களிடம் சொல்லவில்லை,  என் கணவரிடமும்,  என் மாமியாரிடமும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாள் உமா.

அவ உன்னுடைய நாத்தனார் மா, இப்படி எல்லாம் எடுத்திருஞ்சு பேசக்கூடாது, என்று மாமியார் பத்மா சொல்ல, உடனே மகன் சேகர் அவ பேசுவது மட்டும் நியாயமா என்று கேட்க, என்னடா ? திருமணமாகி 30 நாள் கூட ஆகல அதுக்குள்ள பொண்டாட்டிக்கு பரிந்து பேசுற எனக் கேட்டாள் விஜி.

என் பொண்டாட்டிக்காக பரிஞ்சு பேசலை, நியாயத்தை தான் சொன்னேன் என்றான் சேகர்.

பேசிக் கொண்டிருக்கையில் சேகருக்கு கைபேசியில் அழைப்பு வரவும், உங்க அம்மா தான் பேசுறாங்க இந்தா பேசு என்றான் சேகர்.

நீங்க பேசுங்க உங்க போனுக்கு தானே அழைப்பு வந்திருக்கு, என்று உமா சொல்ல எதிர்முனையில் இருந்து மாமியார் பேச, சேகர் அவசியம் சாயங்காலம் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு கைபேசியை வைத்து விட்டான்.

தாய் பத்மாவோ ஏண்டா நான் அடுத்த வாரம் ஊருக்கு போ என்று சொல்கிறேன், அதையும் மீறி என் பேச்சைக் கேட்காமல் சாயங்காலம் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டாள்.

மகன் சேகரோ எதுவும் பேசாமல் காப்பியை கூட அருந்தாமல் கடைக்கு சென்று விட்டான்.

மருமகள் உமா மாமியாரையும், நாத்தனாரையும் ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு சென்று விட்டாள்.

தாய் பத்மாவோ, ஐயோ ரெண்டு குழந்தைகளும் சாப்பிடவில்லையே என்று மனது வேதனை பெற்றுக் கொண்டிருக்க மகன் சேகரோ உணவை ஆர்டர் போட்டு எடுத்துக் கொண்டு வந்து மாடிக்கு செல்வதை பார்த்து மனது வேதனை தான் பட்டது பத்மாவிற்கு.

என்னை மறந்தாலும் பரவாயில்லை தங்கை  வீட்டில் இருக்கிறாள்  என்பதை மறந்து விட்டான் என்பதை நினைத்து கண்ணீர் வடித்தாள் பத்மா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவனா நீ? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 26) – தி.வள்ளி, திருநெல்வேலி