in ,

எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 1) – கற்பக அருணா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

எரிச்சலை ஏற்படுத்தும் நெருக்கமான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு மற்ற வண்டிகளின் நகர்வுக்காக காத்துக் கிடந்தான் நவீன்.

அலுவலகத்திற்கு நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பது இவனுடைய இத்தகைய காத்திருப்பு. அவன் எண்ணியவாறே வண்டிகளின் நகர்வுகளுக்கிடையில் இவனது வண்டியும் நகர ஆரம்பித்துவிட்டது. அலுவலக வருகை பதிவு புத்தகத்தை எடுப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே உள்ளே நுழைந்தான்.

தன் பதிவை உறுதி செய்துவிட்டு தனக்கான இருக்கையில் பெருமூச்சுடன் அமர்கிறான். ஐந்து நிமிட இடைவெளி வேண்டும், என எண்ணியவனுக்கு உடனே அவன் பார்க்கும் ஆசை வேலை அவனை அழைத்து விட்டது.

நவீனம் தன் குடும்பத்தை பிரிந்து சென்று நகரத்தில் தனியாக வசித்து நல்ல மாத சம்பள வேலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். தன் குடும்ப வறுமை காரணமாக வளர்ந்ததால் என்னவோ தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சிறிதளவு அவமானமோ, அவமதிப்போ தன்னால் அடுத்தவர் வாழ்வில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் அவன்.

நவீன் கம்பெனியில் இருக்கும் மேனேஜர் அவனை அணுகி “ரிப்போர்ட்” ஒன்றை கொடுத்து அதனை ஒரே வாரத்தில் முடித்துவிடுமாறு சொல்கிறார்.

“அதை எப்படி சார் வெறும் ஒரே வாரத்தில் முடிக்க முடியும்?” என்று கேட்கிறான் நவீன்.

அதற்கு மேனேஜர் மிஸ்டர் நவீன் “ஐ நோ யூ ஆர் எ வெரி டேலெண்டெட் பர்சன், அதுமட்டுமல்ல நீங்க ஒரு விதமான பொறுமைசாலியும் கூட. அதனாலதான் நான் இந்த ரிப்போர்ட்ட உங்க கையில ஒப்படைக்கிறேன்” என்று கூறுகிறான்

“ஓகே சார், ஆனா நான் மட்டும் எப்படி இதை தனியா பண்ண முடியும்?” என்று திரும்பவும் கேட்கிறான்

“எனக்கு தெரியும் அதனால தான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் ஃப்ரீயாவ கூப்பிடு இருக்கேன்” என்று கூறி முடிப்பதற்குள் “நான் உள்ளே வரலாமா?” என ஒரு குரல் அழைக்க, மேனேஜரும் நவீனும் திரும்பிப் பார்க்கின்றனர்

“எஸ் பிரியா” என்ற மேனேஜர், நவீன் பிரியாவை பார்த்து சிறிய புன்னகை புரிகிறான். காரணம் அந்த நிறுவனத்திலேயே அவனுடைய குணத்திற்கு ஏற்றவளாக இவ்வளவு நாளில் நவீன் உடைய கண்ணிற்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தென்பட்டவள் இவள் ஒருத்தி.

மேனேஜர் ரிப்போர்ட் பற்றி பிரியாவுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் வேளையில் நவீன் தன் மனதில் பிரியாவுடன் பேசுவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறான்.

“நவீன்” என்று பிரியா அழைக்க, தன் நிஜ உலகில் ஐக்கியமானான்.

“நவீன் மேனேஜர் ரிப்போர்ட் பத்தி என்கிட்ட தெளிவா எக்ஸ்பிலைன் பண்ணிட்டாரு சோ நம்ம நம்முடைய ஒர்க்க ஸ்டார்ட் பண்ணிடுவோமா” என கேட்கையில்

மேனேஜர் கண்ணன் “ஓகே நவீன் அண்ட் ப்ரியா ஆல் தி பெஸ்ட்” என கூறி அவளனுடைய கேபினிலிருந்து அவர்கள் இருவரையும் அனுப்பி வைக்கின்றார்.

பிரியாவும் நவீனும் அவர்கள் இருக்கையில் சென்று அமர்வதற்கு முன்பு தன்னுடைய மெயில் ஐடியை மடிக்கணினி டைப் செய்து “ஹாய் பிரியா” என தனக்கு தானே மெசேஜ் செய்து கொள்கிறாள்.

“ஏதாவது டவுட்னா மெசேஜ் பண்ணுங்க நவீன்” என சொல்லிவிட்டு செல்கிறார் பிரியா

தனக்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டை புரட்டுகிறான் அவன். நன்றாக படிக்கிறான், எவ்வாறு இதனை ஒரு வாரத்தில் முடிக்க போகிறேனோ? என்ற கேள்வியுடன்

சிறிது மனித்துளிக்குள் “ஹாய் நவீன்” என்ற மெயில் பிரியாவிடம் இருந்து வந்திருந்தது

“சொல்லுங்க பிரியா, யூ ஹவ் எனி டவுட்” என ரிப்ளை செய்கிறான்.

“ம்… நான் உங்கள் இடத்திற்கு வருகிறேன்” என்று பதில் திரும்ப கிடைத்தது. பிரியாவிடம் இருந்து அந்த பதிலை கண்டதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் அவன் அவளை கவனத்திற்கு இருக்கிறான்.

பிரியாவுடன் எவரேனும் ப்ராஜெக்ட் செய்தால் எப்பொழுதும் அவள் அவளுடைய இடத்தில் இருந்து பதில் உரைப்பதை தவிர தானாக முன்வந்து அதாவது மற்றவர்கள் இருக்கைக்கு செல்லும் அளவு யாரிடமும் பழகுவது அவள் விரும்புவதில்லை.

இதனை, நன்றாக அறிந்திருந்தான் நவீன். அவள் அவனிடத்திற்கு வருகின்ற அந்த சில மணித்துளிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தபால்காரர் (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி

    விருது (சிறுகதை) – மலர் மைந்தன்