in

என் கனவுகள்… உன் காலடியில் (கட்டுரை) – இரஜகை நிலவன்

 

வெற்றியின் இரகசியம் அடிக்கடி வந்து தென்றலோடு என்னைத் தொட்டு மோதிக் உன் காலடியில் என்கனாக்கள் கிடக்கின்றன. பொறுக்கி எடுத்துக்கொள்…… என்று …………ஆம் வெற்றியின் முதல்படி ‘வா..வா..” என்று கரம் பிடித்து வந்த அவளில் விழிகளில் நமக்காக காத்துக் கிடக்கிறது.

நம்மில் எத்தனை பேர் இதைக் காதுகொடுத்துக் கேட்டிருப்போம். வசந்த வானின் வெற்றிப் படிகளில் கரம் விரிப்பில் அணைத்துக் கொள்ள எத்தனைப் பேர் தவம் கிடக்கிறார்கள். என்பது நம் மனதையே தொட்டுக் கேட்டுக் கொள்ளலாம்.

நம்மில் பலரும் ( நானும் கூடத்தான்) ஒரே நாளில் தலைவனாகி விட கனவுக் கோட்டைகள் கட்டி கற்பனை சிறகு விரித்து குதிரைகளில் கானல் நீர் பவனி வருகிறோம். நிஜத்தைத் தொட்டுப் பிடிக்க நம்முன் எத்தனைபேர் தீக்குள் விரலை விட்டு ‘’அது சுடும்” என தேடிப் பார்க்கிறோம்.

ஆம், நம் கனவுகள் நிஜங்களைத் தேடிப் போவதில்லை. வெறும் வண்ணத்திரை கனவுகளாகவும் கானல் நீர் வேட்கைகளாகவும் வானவில் நிறவிரிப்பின் வண்ணக் கனவுகளே நம் நினைவில் பைக்குள் நிரந்தரமாக தங்கி விடுகிறதே தவிர நம்மால் அதைத் தாண்டி உண்மைக்குள் நிஜத்திற்குள் நுழைய மனம் சண்டிக்குதிரையாகி படுத்துக்கொள்வது நிதர்சனமான உண்மையும் கூட.

வாழப் பழகிக்கொண்ட நமக்கு இப்படி வாழ வேண்டும் என்ற வேட்கை எழுப்பாமல் கொள்கைகள, வழிவகைகள், குறிக்கோள்கள் கொள்ளாமல் எப்படி வேண்டுமாறும் இசைந்து இணைந்து போய் வாழ்ந்து விடலாம் என்ற ஒரு ஏமாளித்தனமும் அசட்டுத்தனமும் ஒன் சோம்பல் கூட்டத்திற்குள்ளே முடங்கி வெளிவர மனம் மறுத்து விடுவதால் உடனே உள்ளத்திற்கு ‘ஆம்’ சொல்லி (Mind Set) நத்தைக் கூட்டுக்குள்ளே புகுந்து கொண்டு வாழ்கிறோம்.

எதிர் நீச்சல் போடுவதற்கு எத்தனை பேர் பழகிக் கொள்கிறோம்? எதற்கு வம்பு வீணாகம் மூச்சிறைக்கும். நதியோடு போவோம் என நாமும் (கொரானாவோடு சேர்ந்து வாழப் பழகிக் கொள்வோம்.) நதியின் ஓட்டத்திற்கு இணைந்து கடலில் (மரணம்) கலந்து போய் விடுகிறோம்.

எல்லோரும் புத்தனும், காந்தியும் ஆக வேண்டாம். நம் சுற்றுப்புற சூழலில் சுத்தமாக இருக்க இங்கே யாரும் அன்னை தெரசா ஆக வேண்டியதில்லை. நம் வாழ்வில் வெற்றி கொள்ள நம் வாழ்வை சிறந்ததாக ஆக்கிக்கொள்ள அம்பானி, அதானி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பது கண்டிப்பாக தேவையா?

வாழ்க்கையில் வெற்றியடைய நான் என்ன செய்ய வேண்டுமென்பதை நான் எனக்குள் முதலில் புரிந்து கொள்ள வேண்டாமா? நான் இந்தத் துறையில் வல்லுனன் ஆக வேண்டுமெனில் அதற்கு என்ன தேவைகள் என்று நேர்வழியில் தேர்ந்தெடுத்து அதை அடைவதற்கு ஒரு துரோணாச்சாரியாரை தேர்ந்தெடுத்து நம் நோக்கத்தின் வில்லின் அம்பினை மாட்டி நம் வெற்றிக் கனியை.. வாழ்வின் உயர்வை நாம் தட்டிப்பறிக்க வழி தேட வேண்டாமோ?

ஆம்… இன்னும் வெற்றியின் இரகசியங்கள் நம் காலடியில் விழுந்து கிடக்கின்றன. …… மாறி நாம் தான் தென்றலோடு இணைந்து நம் செவியில் சொல்லி விட்டுச் செல்லும் இரகசியங்களை கண்காணிபோல கவனித்து நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். செய்வேனா/ செய்வோமா?

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புதிய செவ்வாய்! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    ஆணாதிக்கமா பெண்ணடிமையா? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி