கன்னித்தமிழ் வளர்த்த காதலே! நீ உட்புகுந்தால-
கட்டக்குரலும் கவி பாடும்
மொட்டுமலரும் மல்லுக்கட்டும்
பூவும் புயலாகும் புயலும் பூவாகும் இந்த மாற்றம்
அதில் தான் உனக்கு என் இவ்வளவு நாட்டம்?
காதல் சொன்னது
” என்னில் கிறங்கி களிக்கும் கயலே!
இமை வழி மனம் மாறினால்
இதழ் வழி குணம் மாறினால்
மாற்றம் தானா நேராதது?
மாற்றம் ஒன்றே மாறாதது
உன்னவனை என்னிபார் உண்மை விளங்கும்
என்னவனின் கண்ணிரண்டை என்னி பார்த்தேன்
அதில் என்னை நான் பார்த்தேன்
எனதிரு விழியில் எனது உலகை அவன் காண்பான்
அதில் அவன் மட்டும் நிறைந்திருப்பதை காண்பான்
காதல் சொன்னது உண்மையே!
காதல் செய்த நன்மையே!
என் கண் அவன்!
என் கணவன்!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings