in ,

அற்றை நாள் பொங்கல் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

குக்கிராமம்  பேருந்து  வசதி  யில்லை

          குளிர்போர்வை  பசும்வயல்கள்  தென்னந் தோப்பு

பக்கத்தில்  ஓடுகின்ற  தெளிந்த  ஓடை

          பாசமுடன்  பழகுகின்ற  உறவு  சுற்றம்

திக்கெட்டும்  இயற்கையதன்  அழகு  கொஞ்ச

          திண்தோளில்  வயலுழைத்த  உழைப்பின் வெற்றி

சொக்கவைக்கும்  மூட்டைகளாய்த்  திண்ணை  மீதில்

          சொல்லும்தை  பிறந்ததென்று  மகிழ்ச்சி  யோடே !

 

காற்றுமாசு  அடைந்திடாத  வகையில்  போகிக்

          கனலினிலே  பழம்பொருள்கள்  எரிய  வைத்தார்

சோற்றுண்டை  போல்மண்ணை  உருட்டு  ருட்டிச்

          சொந்தவீட்டின்  வாசலிலே  அடுப்பு  வைத்து

நாற்றுநட்டு  நல்விளைச்சல்  உழைத்த  ளித்த

          நல்லோரைச்  சுற்றத்தை  அழைத்து  வந்து

போற்றிடவே  கதிருக்குப்  பொங்க  லிட்டுப்

          பொங்கலோபால்  பொங்கலென்று  மகிழ்ந்தார்  கூவி 1

 

உழவர்க்கு  உறுதுணையாய்  உழைத்த  மாட்டை

          உயர்தெய்வம்  எனவணங்கி  வண்ணம் பூசிப்

பழகியநல்  நண்பனைப்போல்  உடன  ழைத்துப்

          பார்க்கநடை  பயிற்றுவித்தார்  ஊரைச்  சுற்றி !

மழலையர்கள்  குதூகலிக்க  ஓடை  ஓரம்

          மாதென்னைத்  தோப்புகளில்  சுற்றத்  தோடு

பழங்கதைகள்  பேசிக்கட்டுச்  சோறுண்டு

          பயணித்தார்  காணும்பொங்கல்  நாளன்று !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாவக்கா இனிக்கும் (ஒரு பக்க கதை) – வைஷ்ணவி

    அனுப்பப்படாத கடிதம் (சிறுகதை) – முனியப்பன் பாஸ்கர்