in ,

அரசு மரியாதை (சிறுகதை) – அர்ஜுனன்.S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நீண்ட நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருந்தான் கணேஷ்.

வேலை, குடும்பம் என சென்னையில் செட்டில் ஆகி விட்டான். வருடத்திற்கு ஒருமுறை ஊர் திருவிழாவுக்கு வரும்போது பெற்றோரையும் பார்த்துச் செல்வதோடு சரி. அல்லது, ரொம்ப நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம், கருமாதி ஃபங்ஷன் இருந்தால்தான் வருவான். இப்போது அப்படி ஒரு கல்யாண நிகழ்ச்சியில் ஆஜர்.

நண்பன் வசந்த் இவனைப் பார்த்து, “ஹே கணேஷ்.. ஊருக்கு எப்ப வந்த?” என்றான்.

“நேத்து நைட்டு தான்டா. அப்புறம்… ஊருல என்ன விசேஷம்..? நம்ம ஃப்ரண்ட்ஸ் வீட்டு நியூஸ் எதுவும் இருக்கா..?” என கேட்க..

“நம்ம துரையை ஞாபகம் இருக்கா..?”

“ஏன் இல்லாம..?  பள்ளிக்கூட காலத்திலேயே சிகரட், தண்ணினு திரிஞ்சவன் தானே..?”

“ஆமாடா.. அவனைத் தான் சொல்றேன்..”

“ஸ்கூல்லயே டி.ஸி. குடுத்திட்டாங்க.. அப்புறம் சும்மாவே சுத்திட்டு திரிஞ்சான்.. “

“ஆமாடா.. அப்புறம் கஞ்சா பழக்கம் வேற….”

“ம்ம்.. வசந்த்… ஆனா நான் இப்பக்குள்ள அவனைப் பார்க்கல..”

“ஆமாடா.. பிக்பாக்கெட் மாதிரி சின்ன சின்ன குற்றங்கள் செய்றதும், ஜெயிலுக்கு போய் வர்றதுமா இருந்தான்.. அவங்க பெற்றோர் சொல்லிப் பார்த்தும் திருந்தல..”

“அவனுக்கு இப்போ என்னாச்சு?..” என்று கணேஷ் கேட்கவும், சாலையில் ஒரு போலீஸ் பைலட் ஜீப் முன் செல்ல, மாவட்ட ஆட்சித் தலைவர் கார் தொடந்து பின் செல்லவும் சரியாக இருந்தது.

“இது என்ன கலெக்டர் கார் போகுது?.. இன்னைக்கு இங்கே ஏதாவது அரசு விழா இருக்கா..?” எனக் கேட்டான் கணேஷ்.

“அதப் பத்திதான்  நான் பேச ஆரம்பிச்சேன்..”

“நீ நம்ம துரையைப் பத்தில சொல்லிக்கிட்டு இருந்த..?”

“அதான்டா.. நேத்து துரை இறந்து போய்ட்டான்.. இன்னைக்கு தகனம் பண்ணப் போறாங்க.. அரசு மரியாதை செய்ய கலெக்டர் போறார்..”

“ஹே..ஹே..” என சப்தமாக சிரித்த கணேஷ், “என்னை வச்சு காமடி, கீமடி பண்ணலயே..?” என்றான்.

“இல்லடா..  முந்தா நாள் நைட்டு துரை பிக்பாக்கெட் அடிச்சிட்டு போலீஸ்ட்ட இருந்து தப்பிச்சு ஓடும் போது ரோடு ஆக்ஸிடன்ட்ல அடிபட்டுட்டானாம். ஆஸ்பிடல் கொண்டு போனதில ப்ரையின் டெட்னு டாக்டர் சொல்லிட்டாரு.. குடிச்சதால லிவர் தான் கெட்டுப் போச்சு.. மற்ற உறுப்புகளை தானம் செய்யலாம்னு சொன்னதால.. அன்னோட பெற்றோருக்கு தகவல் சொல்லி, அவங்களும் அதுக்கு சம்மதிச்சிட்டாங்க. நேத்து அந்த ப்ராசஸ் முடிஞ்சு லேட்டாத் தான் பாடியை குடுத்தாங்க.. இன்னைக்கு தகனம் பண்ணப் போறாங்க. இப்போ அரசு ஆணைப்படி, கலெக்டர் அரசு மரியாதை செய்யப் போறாரு.. வா.. நாமளும் போய்ட்டு வந்திடுவோம்” என்றான் ரமேஷ்.

“சரிடா.. துரை இருக்கும்போது சமூகத்துக்கு தொந்தரவா இருந்தாலும், இறந்த பிறகு நாலு பேருக்கு உபயோகமா இருக்கப் போறான். உண்மையில் எந்த தான் பிரைய்ன் டெட்னு டாக்டருக்கு சொன்னாலும், இதயம் துடிச்சிண்டு இருக்கும்போதே அதை தானமா குடுக்க பெரியமனசு இருக்கணும். இந்த நல்ல காரியத்தை செய்த அவங்க பெற்றோரைப் பாராட்டிவாவது நாம கலந்து கொள்ள வேண்டும்..” என்று சொல்லி, வசந்த் கூடவே கிளம்பினான் கணேஷ்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 20) – முகில் தினகரன்

    உனை நினைந்து (சிறுகதை) – ராஜேஸ்வரி