“தடைகள் தவிர்க்க முடியாதவை” என்றாகின்ற போது, அவற்றைத் தாண்டிச் செல்லும் உபாயத்தை எவனொருவன் ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே வெற்றியாளன். போகின்ற பாதையில் நெரிசல் அதிகம் என்பதற்காக போகாமல் திரும்பி விடுகின்றோமா? சமாளித்துச் செல்லத் துணிகிறோம், அல்லது மாற்றுப் பாதையைக் கண்டறிய முனைகின்றோம், அல்லவா?. அதே போல்தான், ஒரு முயற்சியில் ஈடுபடும் போது எதிர் வரும் தடைகளையும், இடையூறுகளையும் தன்னம்பிக்கையோடு தாண்டிச் செல்ல வேண்டும். “ஹர்டில்ஸ்” ஓட்டப்பந்தயத்தில் தடைகளைத் தாண்டிச் சென்றவன் கோப்பையை கைப்பற்றுவது போல, இந்தத் தடைகளைத் தாண்டினால்தான் நமக்கும் வெற்றிக் கோப்பை வந்து சேரும்.
தடை அதை உடை. தட்டிப்பார்… முட்டிப்பார்… மோதிப்பார்… முயன்று பார்… திறக்கவில்லை எனில் உடைத்து விடு தடைகளை. கட்டி இழுத்து வந்து விடு வெற்றியை என்பதுதான் நம் வாழ்வில் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
தடைகளை உடைத்து வெளியே வரும் பொழுது நம்மை காயப்படுத்தியவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சுதந்திரமாக சிறகை விரித்து பறக்க வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியுடன் முன்னேறப் பார்க்க வேண்டும். தடைகளை எதிர்த்து வெளிவரும் சமயம் காதுகளை கெட்டியாக மூடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம் காதில் விழும் வார்த்தைகளால் பலவீனப்பட்டு துவண்டு போய் முன்னேறாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.
உலக வரலாற்றை உற்றுப் பார்த்தால், சாதனையாளர்கள் யாருக்குமே வெற்றிக்கான சூழ்நிலை அமைந்திருந்ததே இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு தடையால், ஏதோ ஒரு இடையூறால், இன்னலுற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இயேசு, முகமது நபி போன்ற மகான்கள் ஆரம்ப காலத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டுதானிருந்தனர். ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரைச் சாணம் அள்ளிக் கொண்டிருந்தார். மளிகைக்கடையில் வேலை பார்த்தவர் பெர்னார்ட்ஷா.
இவர்கள் மட்டுமல்ல, ஆப்ரஹாம் லிங்கனும், தாமஸ் ஆல்வா எடிசனும் “தோல்வித் திலக”ங்களாய் இருந்துதான் “சாதனைத் திலக”ங்களாய் ஆனார்கள். பத்து வயதிலேயே இரு கண்களையும் இழந்த லூயி பிரெய்லி, “பார்வையிழப்பு” என்கிற தடையைத் தாண்டித்தான், குருடர்கள் படிப்பதற்கான “பிரெய்லி முறை”யைக் கண்டுபிடித்தார். “செவிட்டுத் தன்மை” என்கிற குறையைத் தாண்டித்தான் இசை மேதை பீத்தோவன் அற்புதமான சிம்பொனியை உருவாக்கினார். இங்கே உதாரணம் காட்டப்பட்ட தடைகள் எல்லாம் தற்காலிகத் தடைகள் கூட அல்ல, நிரந்தர ஊனங்கள். ஆனாலும், அவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் சாதனைகளை நிகழ்த்தவில்லையா?.
“வழிப் பயணத்தில் முட்கள் இல்லாமலிருக்கலாம், வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் இல்லாமலிருக்குமா?” நாம் இன்று சந்திக்கும் மிகப் பெரிய சிக்கல், அல்லது இடர்பாடு, பிற்காலத்தில் நாம் வெற்றி பெறுவதற்கும், மகிழ்வோடு வாழ்வதற்கும், என்னென்ன செய்ய வேண்டும், என்பதை நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நமக்கு அனுப்பப்பட்டவை, என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் தடைகள் நம்மைச் சுற்றிலும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. அவை எல்லாவற்றையுமே நாம் பூதாகரமாக எண்ணிக் கொண்டிருந்தால், நம்மால் ஒரு அங்குலம் கூட வெற்றியை நோக்கி நகர முடியாது. சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றலையும், வழிமுறையையும் அடுத்தவர்களிடம் சென்று கேட்பதை விட, அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாமே எட்டி விட்டால், அந்த ஆற்றலையும், வழிமுறையையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். தீர்க்கவே முடியாத சிக்கல் என்று ஒன்று இந்த உலகத்திலேயே இல்லை. எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்த்து வெற்றி காண முடியும். சிக்கலின் தீவிரம் அந்த சிக்கலில் இல்லை. அதை நாம் சிக்கலாக எடுத்துக் கொள்வதில்தான் உள்ளது.
உங்கள் இலக்குகளை அடைவதற்கு மிகவும் பொதுவான தடைகள் யாவை, அவற்றைப் பற்றி என்ன செய்வது?
1. உங்கள் இலக்கை முன்னுரிமைப்படுத்தாமல் இருப்பது.
பெரும்பாலான மக்களால் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விஷயங்களுக்கு மேல் வெற்றியின் தீவிர நிலைகளை அனுபவிக்க முடியாது. அதே நேரம், 99% மனிதர்கள் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும். அதாவது, அவர்கள் அதை தங்கள் முதல்
உங்கள் முக்கிய இலக்கைத் தவிர வேறு எதுவும் அவ்வப்போது நழுவக்கூடிய வகையில் உங்கள் இலக்கைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும் .
2. ஒரு பழக்கத்தை உருவாக்கத் தவறுதல்.
உங்கள் இலக்கை அடைய ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைக் கணக்கிடுங்கள். கிடைக்கக்கூடிய சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து (உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும்போது மற்றும் உங்கள் சிறந்த மனநிலையில் இருக்கும்போது) ஒவ்வொரு நாளும் வேலையில் ஈடுபடுங்கள்.
சில நாட்கள் நீங்கள் சிறப்பாக வேலை செய்வீர்கள், சில நாட்கள் நீங்கள் சோர்வடைவீர்கள், ஆனால் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் நீண்ட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் மணிநேரம் செலவழிப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
இந்தப் பழக்கத்தை உருவாக்குவதற்கு நேரம் எடுக்கும், ஆனால் நீங்கள் அதைச் செய்துவிட்டால், அதைப் பின்பற்றுவதற்கு அவ்வளவு மன உறுதி தேவையில்லை.
உங்கள் வாழ்க்கையில் உங்கள் குறிக்கோளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைப் பாதுகாக்கவும். கவனச்சிதறல்களை நிராகரிக்கவும். நீங்கள் எப்போது கிடைக்கிறீர்கள், எப்போது இல்லை என்பதை அறிந்து அதை மிகத் தெளிவாகக் கூறுங்கள்.
3. உங்கள் மீது நம்பிக்கை இல்லாமை
உங்கள் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி யதார்த்தமாக இருக்கும்போது, உங்கள் திறன்களில் பகுத்தறிவற்ற நம்பிக்கை இருக்க வேண்டும் .
சில நேரங்களில், உங்கள் சூழல் அல்லது உங்கள் போட்டி உங்கள் இலக்கை அடைய முடியாமல் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும், அந்த சந்தர்ப்பங்களில், உங்கள் திறன்களில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பது இன்னும் முக்கியமானது.
ஆனால், உங்கள் குறைபாடுகள் மற்றும் நீங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் எப்போதும் பின்தங்கியிருப்பீர்கள்.
4. விட்டுக்கொடுத்தல்
உங்கள் இலக்குகள் போட்டியை உள்ளடக்கியதாக இருந்தால், நீங்கள் பிறவியிலேயே மேதை இல்லை என்றால், நீங்கள் விரும்புவதைப் பெற நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் வெற்றி பெறுவதை விட அடிக்கடி தோல்வியடைவீர்கள்.
நீங்கள் மிகவும் பொறுமையாகவும், உறுதியுடனும் இருக்க வேண்டும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில், பந்தயத்தில் போதுமான நேரம் தங்கியிருப்பதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
பூட்டிய அறைக்குள் ஏற்றிய விளக்கு எப்படி ஆடாமல் அசையாமல் எரியுமோ, அதே போல் நம் மனமும் இன்ப துன்பங்களால், விருப்பு வெறுப்புக்களால், ஆடாது, அசையாது நிற்க வேண்டும். அவ்வாறு, ஒரு பக்குவ நிலையை நம் மனம் அடைவதற்காக பயிற்சியை மேற்கொண்டால் தடைகள் நமக்குத் தளங்களாகவும், இடையூறுகள் நமக்கு இன்ப ஊற்றுக்களாகவும் மாறிவிடும். ஆம்! நாம் தோல்வி அடைய எவ்வளவு சக்தி தேவையோ, அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்து விடலாம். எப்படியென்றால், நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை உணர்வுகள், எதிர் மறை பழக்க வழக்கங்கள், இவற்றை மொத்தமாய் எரித்து விட்டால் போதும், பாதி சக்தியைக் கொண்டே வெற்றியை எளிதில் எட்டிவிடலாம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings