in ,

வயது சிறிது, புத்தி பெரிது (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கல்யாண பந்தியில் குட்டிக் குழந்தைகள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க  பரட்டைத் தலையோடு சட்டை பட்டனை கூட சரியாக போடாமல்  6 வயது பையன் அமர்ந்திருந்தான். அவன் ஆசையோடு இலையில் வைத்திருந்த இனிப்பை எடுத்து சாப்பிடும் போது பந்தி  பரிமாறிக் கொண்டிருந்த ஒருவன் அந்த குழந்தையின் சட்டையை பிடித்து இழுத்து போடா வெளியே, நீ எல்லாம் பந்தியில் அமர்ந்து சாப்பிடக்கூடிய தகுதி உனக்கு இருக்கா என்ன கேட்டுக் கொண்டே அடித்து விரட்டினார்.

அப்போது  மணமகளின் தம்பி  பிரவீன் 10 வயது இருக்கும் , எதற்காக அவனை வெளியே தள்ளினீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் இவர்கள் எல்லாம் நாம் சாப்பிட்டு விட்டு போட்ட எச்சி  இலையில் இருந்து மீதம் இருந்ததை சாப்பிடக் கூடியவர்கள் என்றார்.

ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே வந்து நம் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பந்தியில் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனால் தான் அவனை வெளியே தள்ளினேன் என்றார்.

வயதில் பெரியவராக இருக்கிறீர்கள், சாப்பிடும் போது இப்படி செய்யலாமா,? அந்தக் குழந்தை எவ்வளவு சாப்பிடும். ஏன் இப்படி வேறுபடுத்தி பார்க்கிறீர்கள் என்று கேட்டான் பிரவீன்.

பிரவீனுக்கு கோபம் வந்து  அழுது கொண்டே வெளியே போய்க் கொண்டிருந்த  பையனை பார்த்து டேய் பையா என்று பிரவீன் கூப்பிட  நம்மை அடித்து விடுவார்கள் என்ற பயத்தில் ஓட முயற்சித்தான் .

மண்டபத்துக்கு வெளியே குழந்தை மணியை காணவில்லை என  பெற்றோர் தேடிக் கொண்டிருந்தார்கள்.

மணி வெளியே ஓடி வந்ததை பார்த்த பெற்றோர் அவனை தூக்கி வைத்து கொண்டு  எங்கடா போன,  உன்னை காணாமல் சிறிது நேரத்தில் தவித்துப் போய்விட்டேன் என்று சொன்னார்கள்.

அதற்குள் வெளியே ஓடி வந்த பிரவீன் அவர்கள்  அம்மாவிடம் இருந்த குழந்தையை இங்கே வாடா என அழைத்தான்.

அந்தக் குழந்தை பிரவீன் அருகே வந்தது. உன் பெயர் என்ன? என பிரவீன் கேட்க  மணி என சொன்னான்.

மணியா,  என்று பிரவீன் கேட்க அப்படித்தான் எல்லாரும் என்னை கூப்பிடுவாங்க என்றான் மணி.

அவர்கள் தான் உன்னுடைய அம்மா, அப்பாவா என்று பிரவீன் கேட்க எனக்கு அம்மா அப்பா இல்ல, எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இவர்கள் தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான் மணி.

வெளியே  எச்சி இலைக்காக காத்துக் கொண்டிருந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்று  பந்தியில் அமர வைத்து சாப்பாடு பரிமாறினான் பிரவீன்.

மணியின் அருகில் அமர்ந்து பிரவீன் சாப்பிட்டான்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த மண்டபத்தில் உள்ள அனைவரும் பிரவீனை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

தன்னுடைய அப்பாவிடம் இவர்கள் அனைவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும். இன்று அக்காவின் திருமண நாள் தானே, அனைவருக்கும் துணிமணிகள் எடுத்துக் கொடுக்கலாம் என்று பிரவீன் சொன்னான்.

நீ உன்னுடைய மாமாவை துணைக்கு அழைத்துக் கொண்டு போ,  வேறு ஏதாவது வேண்டுமானாலும் அவர்களுக்கு வாங்கி கொடு என்று சொன்னார் பிரவீன் அப்பா.

மிகுந்த சந்தோஷத்தோடு துணி வாங்கிக் கொடுப்பதற்காக மாமாவை அழைத்துக் கொண்டு பிரவீன் சென்றான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 25) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

    பவியிடமிருந்து ஒரு பாராட்டு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு