in ,

இதுதான் வாழ்க்கை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

என்னம்மா உங்க மகன் போன் பேசினானா? இப்போது சந்தோசம் தானே என மகள் ஜோதி தன்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ரெண்டு நாள் ஆபீஸ்ல ரொம்ப வேலை அதிகமா இருந்ததாம்.  அதனால தான் போன் போடலைன்னு சொன்னான்.

அவருக்கு ஆபீஸில் அதிகமாக வேலை இருக்கிறது போன் பேசவில்லை என்று வருத்தப்படாதீர்கள் என்று மருமகளும் உங்களிடம் சொன்னாள். அத விட்டுட்டு இரண்டு நாளா மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கீங்க என்றாள் ஜோதி.

என் மகன் குரலைக் கேட்கவில்லை என்றால் என் மனது மிகவும் வேதனைப்படுகிறது, அது ஏனோ தெரியவில்லை என்றார் அம்மா. 

மகனும் மருமகளும் அமெரிக்கா போய் ஒன்றரை வருடம் ஆகிறது. உங்கள பக்கத்துல இருந்து நான் தான் பாத்துக்குறேன். என்னைப் பற்றி என்னைக்காவது நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்களா?

நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள், நான் தான் தினமும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன், அப்புறம் எதுக்கு நான் கவலைப்படனும். 

அதுவும் சரிதான் என்றால் மகள் ஜோதி. 

பாட்டி எனக்கு பிறந்தநாள் வருகிறது இந்த வருஷம் எனக்கு எவ்வளவு பணம் கொடுக்க போறீங்க எனக் கேட்டுக் கொண்டே பாட்டி வீட்டிற்குள் நுழைந்தான் பேரன் ரகு. 

உனக்கு இல்லாத காசாடா, இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது அல்லவா? நீதான் ட்ரெஸ் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டாய், சரி பிறந்தநாள் அன்னைக்கு ஆசிர்வாதம் வாங்க வருவே தானே. அப்போது உனக்கு பிறந்தநாள் பரிசாக என்னுடைய அன்பளிப்பை தருகின்றேன் என்றார் பாட்டி. 

என்னத்த கொடுக்கப் போறீங்க, வழக்கம்போல ஒரு ஆயிரம் ரூபா குடுப்பிங்க, உங்க மகன் பிள்ளைக்கு மட்டும் அதிகமாக செய்கின்றீர்கள் என்றான் ரகு. 

அவ பொம்பள புள்ளடா? அவளுக்கு கல்யாணம் செய்யும்போது நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது, அதனால அவளுக்கு என்னுடைய கடமையை நான் செய்கின்றேன் என்றார் பாட்டி. 

நானும் உங்க பேரபுள்ள தானே, என ரகு கேட்க,  

நீ தான் கை நிறைய சம்பளம் வாங்குகின்றாயே, உனக்கு என்னடா குறைச்சல் என பாட்டி கேட்க இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. 

இவர்கள் பிரச்சினையை கேட்டுக் கொண்டிருந்த மகளும், மருமகனும் எதுக்குடா அவங்ககிட்ட போயி பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறாய்? அவங்க அவங்க பொண்ணையே கவனிக்க மாட்டாங்க உன்னையா கவனிக்க போறாங்க என மருமகன் கேட்க..

ஆமா, என்னுடைய மகளுக்கு நான் எதுவும் செய்ததில்லை. திருமணத்திற்கு பிறகு அவளை படிக்க வைத்து ஆசிரியர் பணியை வாங்கி கொடுத்தேன். மீண்டும் மீண்டும் எதையாவது சொல்லி பணம் அடிக்கடி வாங்கிக் கொண்டு தானே சென்றீர்கள். 

என்னம்மா? எனக்கு செய்ததை எல்லாம் சொல்லிக் காண்பிக்கிறீர்களா? என மகள் கேட்க, 

உங்க வீட்டுக்கார் பேசுவது நியாயமா? உன்னையும் படிக்க வச்சு, உன் மகனையும் படிக்க வைத்தேன். மூன்று பேரும் சம்பாதித்து சிறப்பாக தானே இருக்கின்றீர்கள். 

உங்க அண்ணன் மட்டும்தான் சம்பாதிக்கின்றான். உடல்நிலை காரணமாக மருமகளும் வேலைக்கு போகவில்லை, பொம்பள புள்ள வேற இருக்கு இதெல்லாம் நீங்க யோசிக்கவே மாட்டீங்களா? உங்க அப்பா இல்லாமல் என்னுடைய உழைப்பால் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் செய்து விட்டேன். மேலும் மேலும் எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். 

இ.ருக்கிற வீட்டை எனக்கா தரப் போகிறீர்கள்? உங்க பையனுக்கு தானே கொடுக்க போகிறீர்கள் என் மகள் கேட்க 

ஆமா இந்த பூர்வீக வீடு மகனுக்கு மட்டுமே சொந்தம்.  உனக்கு சொந்தமாக வீடு வாங்கி கொடுத்து விட்டேன், இந்த வீட்டின் பங்கு சல்லிக்காசு கூட உனக்கு கிடைக்காது மா என்றார் அம்மா. 

சரி சரி வா, நம்ம வீட்டுக்கு கிளம்பு போகலாம், என்னமோ பேச போக, கடைசில வம்புல வந்து முடிஞ்சிடுச்சு என மருமகன் சொல்ல ஒன்றும் பேசாதவாறு மகளும் பேரனும் மருமகனை பின் தொடர்ந்து அருகில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள்

இவர்கள் பேசிய பேச்சு எல்லாம் நினைத்தவாறு மனம் நொந்து போய் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார் ஜோதியின் அம்மா. 

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நல்ல மனம் வாழ்க (ஒரு பக்க கதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    உள்ளத்தில் நல்ல உள்ளம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்