in ,

தோற்றம் (சிறுகதை) – விடியல் மா. சக்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      இரவு ஒன்பது மணியைக் கடந்திருந்தது,

  “வா வா சீக்கிரம் வா, ட்ரெயின் போயிடப்போகுது ” என்று கூறி தனது ஒருவயதுக் குழந்தை அகிலனைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடைமேடையில் நடந்தான் செழியன்.

      அவன் பின்னாலேயே அவனது அம்மா பார்வதியும், மனைவி அன்பரசியும் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர்.

      நடைமேடையில் நின்று கொண்டிருந்த புகைவண்டியின் முதல் பெட்டியில், முழுவதும் வடநாட்டவர்களின் கூட்டமாக இருந்தது. அவர்களைப் பார்த்த அன்பரசி அறுவறுப்புடன் கூறினாள்.

      “என்னங்க இந்தப்பெட்டி வேண்டாம். அவங்களும், அவங்க உடையும் பார்த்தாலே அறுவறுப்பா இருக்கு. நாம வேற பெட்டில ஏறிக்கலாம்”

“சரிம்மா வா சீக்கிரம்” என்று அடுத்தப்பெட்டியை நோக்கி நகர்ந்தனர். அப்போது புகைவண்டி புறப்படுவதற்குண்டான ஒலி ஒலித்தது. உடனே அவர்கள் அவசரமாக அடுத்து இருந்த ரயில் பெட்டியில் ஏறிக் கொண்டனர்.

      அந்தப்பெட்டியில் நாகரீகமாகத் தெரிந்தவர்களைக் கண்டதும் செழியனும், அன்பரசியும் நிம்மதியடைந்தனர்.

      அந்தப்பெட்டியில் அளவான கூட்டம் மட்டுமே இருந்தது. சிலர் உட்கார்ந்து கொண்டு செல்லவேண்டிய இருக்கையில் படுத்திருந்ததைக் கண்ட செழியன் அவர்களிடம், “சார் கொஞ்சம் எந்திரிங்க நாங்க உட்காரனும்” என்று கேட்டதற்குப் படுத்திருந்தவன் தூங்குவதுபோல அப்படியே கிடந்தான்.

      கையில் இருந்த குழந்தை பசியால் அழத்தொடங்கினான். அப்போது பார்வதி அன்பரசியைப் பார்த்து, “ஏம்மா, கொழந்தைக்கு பசிக்கும் போலிருக்கு, பால் குடுக்கலாமலோ” என்றாள்

அதைக்கேட்ட அன்பரசி சுற்றியிருந்தவர்களைப் பார்த்தாள். அந்த நாகரீக மனிதர்கள் யாருமே எழுந்து இடம்தர முன்வரவில்லை.

      குழந்தை அழுவதைப் பொறுக்காத அன்பரசி பெட்டியின் நடைபாதையிலேயே அமர்ந்து சேலையைப் போர்த்திக் கொண்டு பால் கொடுக்கத் தொடங்கினாள்.

      அப்போது தூங்குவது போல படுத்திருந்த மனிதர், எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது, கீழே அமர்ந்திருந்த அன்பரசியை உற்றுப் பார்த்தபடியே வந்தார். வந்தவர் அன்பரசியின் மேல் வேண்டுமென்றே இடித்துவிட்டு, “ஏம்மா இப்படி நடையில ஒட்கார்ந்திருக்கியே” என்று கிண்டலாகப் பேசிய அவனோடு சண்டைக்குச் சென்றச் செழியனை அமைதிபடுத்தினாள் அவனது அம்மா பார்வதி.

      அன்பரசி கூச்சமாக உணர்ந்ததைக் கண்ட செழியன் அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி முன்னாள் இருந்த வடநாட்டவர் இருந்த பெட்டியிலேயே ஏறிக்கொண்டனர்.

       அந்தப் பெட்டியில், வடநாட்டவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு அமர்ந்திருந்தவர்கள் அழுக்கான உடைகளுடன் இருந்ததைக் கண்டு கணவன், மனைவி இருவரும் முகச்சுளிப்போடு, அறுவறுப்புடன் ஓரமாக நின்று கொண்டனர். அவனது அம்மா நடைபாதையில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

        அழுக்கேறிய வேட்டியும், முண்டாசு பனியுடனும் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் அன்பரசி கைக்குழந்தையுடன் நின்றிருப்பதைப் பார்த்தனர்.

      அவர்கள் உடனே எழுந்து கொண்டனர், “பாபி இதர் பைட்டியே” என்று அவர்கள் மொழியில் கூறினார்கள். அதைக்கேட்டுப் புரிந்து கொண்ட அன்பரசியும், செழியனும் தலைகுனிந்தபடியே அவர்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

      அருகில் அமர்ந்திருந்த வடநாட்டுப் பெண்கள் குழந்தை அகிலனைப் பார்த்துப் பாசத்தோடுச் சிரிக்கக் குழந்தை அவர்களைப் பார்த்துக் கள்ளங்கபடமின்றி சிரித்தது. யார் அறுவறுப்பானவர்கள் என்று முகம் சுளித்தனரோ அவர்கள் தோற்றத்தில் மட்டுமே அப்படி இருந்தனர், ஆனால் உள்ளம் மாந்தநேயத்தோடு இருந்ததைப் புரிந்து கொண்டனர்.

       நாகரீகமான மனிதர்கள் வேடமிட்டுத் திரியும் சில மனிதவிலங்குகள் மத்தியில் அப்பழுக்கற்ற மாந்தநேயத்தோடு இருக்கும் மனிதர்களை இனம் காண நாமும் மாந்தநேயத்தோடு பார்த்தல் அவசியம் என்று செழியனும், அன்பரசியும் புரிந்து கொண்டனர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 14) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கவித்துவமாய் ஒரு கிரைம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை