in ,

தரை டிக்கட் (சிறுகதை) – நாகராஜா சுப்ரமணியன், சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

வி சொன்ன தகவலை அதிரா நம்பவில்லை.

“வழக்கமா ஞாயிறு மதியம், அல்லது காலை காட்சிக்கு தானே படம் போவீங்க?” அவள் நம்பாமல் கேட்டாள்.

ரவி ஆங்கில படம், என்றதும் அவள் முகம் சுருங்கியது. “அப்பாவும் மகனும் பார்க்கிற படமா அது?”

“உலகமே பார்த்து வியந்த படம்மா அது. அப்போ எனக்கு எக்ஸாம் டயம். இங்கே சினி ராஜில் பார்க்க முடியல. இப்போ முருகன் தியேட்டர்ல போட்டு இருக்காணாம். சதீஷ் சொன்னான்”

“நானும் வரட்டுமாடா?”

“வேண்டாம் ப்ளிஸ் மா?”

“ஏன் இடைல ஏதாவது பிட்டு போட்டுடுவாங்களோ? சதீஷ்கிட்டே அதை கேட்டியா?”

பெண்கள் கண்டிப்பானவர்கள். உண்மை பேசும் மகன்களை மட்டுமே நம்புவார்கள்.

“தரை டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும். சேர் கிடைத்தால் யோகம்.”

“அட்வான்ஸ் புக்கிங் கிடையாதா?”

“தியேட்டரே புல் ஏசி பண்ணின மாதிரி இருக்கும்”

அரை மனதாய் சம்மதம் தர பஜாஜ் கப் மகனார் ஓட்ட உறசாக பயணம்.

“அப்பா இந்த தியேட்டர் உங்க காலத்தில் உண்டா?”

“வேற பெயரில் இருந்தது”

“படம் பார்த்து இருக்கீங்களா?”

“ம் “

“தனியாவா?”

மகன் கேள்வி திட்டுக்கிட வைத்தது. இந்தக்கால பிள்ளைகள், அப்பாவிடம் என்ன என்ன கேட்கிறார்கள். ரவி அவர் அப்பா உள்கட்டில் இருந்தால், ரவி வாசலில் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு. ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கூட அம்மா தயவால் தான் கையெழுத்து கிடைக்கும். இதை மாதிரி தியேட்டர் தனியா வந்தீங்களான்னு கேட்க முடியாது.

“என்ன அப்பா பதிலே காணும். தனியாவா இல்லை உங்க நண்பன் சீனியுடனா? என்ன படம்? ஏன் இவ்ளோ தூரம்?”

“காதல் ஓவியம், பாரதி ராஜா இயக்கி, கண்ணனு ஒரு புது முகமும், ராதாவும் நடிச்சது. இளை இசைல பாட்டு எல்லாம் தேன்”

“ஏன் டவுன்ல பார்க்கலை?”

“அப்போ எல்லாம் பிள்ளைகள், திருவருட் செல்வர், திருவிளையாடல் மாதிரி படம் பார்க்க தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அம்மா அல்லது சித்தி யோட அனுமதி. காதல் பெயர் கொண்ட படம் எல்லாம் சான்ஸே இல்ல”

“பின்னே எப்படி வந்தீங்க?”

“மறுநாள்ல இருந்து ‘திருமால் பெருமை’. முந்தின தின மாலை காட்சி ‘காதல் ஓவியம்’. என்னை பாரதி ராஜா, இளையராஜா ரசிகனாக மாற்றியது”

“பொய் அப்பவே உண்டா?” சிரிக்காமல் கேட்டான்.

“நீயும் எனக்காக அம்மாகிட்டே ஒரு பொய் சொல்லணும் “

“நானா? பொய்யா? ஓ காட். என்ன பொய்?”

“தியேட்டர் இடைவேளைல கை முறுக்கு, கடலை மிட்டாய், இஞ்சி மிட்டாய் சூப்பரா இருக்கும். கடலை மிட்டாய் முறுக்கு சாப்பிட்டு இஞ்சி மிட்டாய் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. இப்போ உள்ள சிப்ஸ் பாக்கட்ல பாதி காத்து தான் இருக்கும் “

“உங்களுக்கு அது. எனக்கு இது “

சீர்காழி கோவிந்தராஜன் பாட்டு சத்தமாக போட்டதும் கூட்டம் கூடியது. ரவி எதிர்பார்க்கவில்லை. அவனுடன் வேலை பார்க்கும் ஷைலு மகளுடன் வந்து இருந்தாள். அஸ்வின் ஸ்கூல் பற்றி விஜாரித்தாள்.

“மதிய சாப்பாட்டின் போது கூட தியேட்டர் வரதை சொல்லலை?”

“நாளைக்கு வேற படம் போடலாம். இன்றைய நாள் மட்டும் நமக்கு சொந்தம். சீட் வரிசை எண் “

“அஸ்வின் அப்படி எதுவும் கிடையாது. தட்டிக்கு இந்த பக்கம் ஆண்கள். அந்த பக்கம் பெண்கள் “

படம் நல்ல பாடல்களுடன் இருந்தது. ரவி கூட ரசித்து பார்த்தான். இடைவேளையில் கடலை மிட்டாய், முறுக்கு, இஞ்சி மிட்டாய் நிறைய வாங்கிய போது அவன் நெளிந்தான்.

“எதுக்கு அப்பா இத்தனை. இனிமே நீ முறுக்கே சாப்பிட மாட்டியா?”

“இல்லை அஸ்வின். இது புதுசு. இன்றைய வியாபாரத்துக்கு போட்டது. கூச்சம் இல்லாமல், ஒரு ஏழை வியாபாரிய, தொழில் செய்யறவரை ஆதரிக்கிற முயற்சி “

“அங்கிள். எனக்கும் முறுக்கு கடலை மிட்டாய் வேணும். படம் நடக்கும் போதே வரும்.”

“இதை வைச்சுக்கோ தங்கம்.”

அவள் தயக்கம் இன்றி அம்மாவிற்கும் கேட்டு வாங்கினாள். அஸ்வினுக்கு ஆசை வந்தது.

“உங்களுக்காக ரெண்டு கொடுங்க அப்பா. எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம் “

“அஸ்வின். டாக்டர் கு.சிவராமன் தெரியுமா? உணவு பற்றி நிறைய எழுதறவர். சாக்லட், பிஸ்கட்டை விட அதிக சத்து “கோவில்பட்டி “கடலை மிட்டாய்ல இருக்கு. அவர் மகன் பிறந்தநாள் நாள் விழாவுக்கு ஒரு பெட்டி வரவாழைச்சு கொடுத்ததாகவும், முதலில் கோபப்பட்ட பையன் நண்பர்கள் பாராட்டில் அப்பாவிடம் சகஜம் ஆனதாகவும் எழுதி இருந்தார். நமக்கு எல்லாம் யாராவது பெயர் வாங்கினவங்க சொன்னால் தான் புரியும் “

ஷைலு அந்த பக்கம் இருந்து நன்றி சொன்னாள்.

“அப்பா தி மூவி பார்க்க அப்பாவுடனா?” அவள் கேள்வியை அஸ்வின் மாதிரி ரவியும் ரசித்தான். கடலை மிட்டாய் மேல் தூவப்பட்ட கலர் பூசிய தேங்காய் துருவல் மாதிரி இனித்தது இருவருக்கும்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லோகன் (குறுநாவல் – பாகம் 1) – சின்னுசாமி சந்திரசேகரன்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 2) – முகில் தினகரன்