in ,

தபால்காரர் (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்-சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

து ஒரு காலம் ..தினமும் யாராவது ஒருவரை எதிர்பார்த்து கண்கள் காத்திருக்கும் என்றால் அது தபால்காரராகத் தான் இருக்கும் …

அவர் வைத்திருக்கும் பையில் தான் எத்தனை எத்தனை விதமான தபால்கள் இருக்கும் …அவை எத்தனை விதமான உணர்வுகளை தாங்கி இருக்கும் …அவரை எதிர்பார்த்து எத்தனை பேருடைய கண்கள் காத்திருக்கும்…

அம்மா, அப்பாவிடமிருந்து கடிதம் வராதா என்று ஏங்கும் கட்டிக் கொடுக்கப்பட்ட பெண் ..

தபால்காரரை கண்டதும் “மகளிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?” என்று ஆவலோடு தினமும் வினவும் தாய்.

தாய் வீட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து கணவனுக்கு வரும் அன்பு கடிதங்கள் ..

“என்னம்மா முகத்திலேயே சந்தோஷம் துள்ளுதே வீட்டுக்காரர் லெட்டர் போட்டு இருக்காரா?” என்று அன்போடு கேலி பண்ணியபடி கொடுக்கும் தபால் காரரை மறக்க முடியுமா?

இன்டர்வியூக்கு சென்று விட்டு கம்பெனியிலிருந்து பதில் வராதா? என்று காத்திருக்கும் இளைஞர்கள்

இதுபோக சகோதரிகளிடமிருந்து சகோதரனுக்கு, அண்ணனிடமிருந்து தம்பிக்கு ,மகனிடமிருந்து தாய்க்கு …முக்கியமாக பிள்ளைகளின் பரீட்சை முடிவை தாங்கி வரும் தபால்….என பலவிதமான தபால்களை தபால்காரர்கள் பை தாங்கி இருக்கும்.

அந்த காலம் தபால்காரர்களுக்கும், மக்களுக்கும் இருந்தது சாதாரண தொடர்பல்ல..அன்பை சுமந்து கொண்டு வரும் தூதராகத்தான் தெரிவார் அவர்.

தபால்காரரை ஒரு ஊழியராக அந்த காலத்தில் யாருமே பார்த்ததில்லை.அவர் குடும்பத்தில் ஒருவர்தான் ..”என்னம்மா பாப்பா லெட்டர் போட்டிருக்குதா ..”என்று தாயிடம் விசாரிப்பார்…” என்ன பாட்டி பேரன் கிட்டயிருந்து போன் வந்ததா? ” என்று கேட்டவரே அவர் மகன் அனுப்பிய மணியாடரை கொடுப்பதாகட்டும் ..அந்த பந்தமே தனி தான்

என் அம்மாவே தபால்காரரை உள்ளே அழைத்து மோர் கொடுத்து, பலமுறை அன்போடு உபசரித்திருக்கிறார்.நல்ல நாள் கிழமைகளில்.. அவரை உள்ளே அழைத்து வெற்றிலை, பாக்கு பலகாரங்கள் என்று மரியாதை செய்வது உண்டு.

இவை எல்லாமே அவர் மேல் உள்ள அன்பின் பால் செய்யப்படுவது கடைமுறைக்காக அல்ல காரணம் அவர் சுமந்து வரும் கடிதங்களில் இருக்கும் அன்பு அவர் மேல் பிரதிபலிக்கும்.

எனக்குத் தெரிந்து பல தபால்காரர்கள் தபாலை வீசிவிட்டுப் போனதாக சரித்திரம் கிடையாது. தபால் போட பெட்டி வைத்ததெல்லாம் சமீப காலமாக தான் ..

அதன் முன் தபால்காரர்கள் முக்கியமான தபால்களை நேரில் பார்த்து கொடுத்து விட்டுத் தான் போவார்கள் .ஒரு ஆத்மார்த்தமான அன்பு கடிதத்தில் மட்டும் இல்லாமல் கடிதம் சுமந்து வரும் தபால்காரரிடமும் பார்க்கலாம்.

நாம் மிஸ் பண்ணும் பழைய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இப்போதெல்லாம் கொரியர் வந்த பிறகு தபால் வருவது வெகுவாக குறைந்துவிட்டது. அதுவும் அப்பார்ட்மெண்ட் அல்லது வீட்டின் வாசலில் இருக்கும் தபால் பெட்டியில் எப்போதாவது வரும் கடிதம் போடப்படுவதோடு முடிந்து விடுகிறது.

ஆனால் முந்திய தலைமுறையினர் தபால்காரையும் அவர் கொண்டு வந்த தபால்கள் கொடுத்த மகிழ்ச்சியையும் ஒரு காலமும் மறந்திருக்க முடியாது

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மீட்சி (சிறுகதை) – மலர் மைந்தன்

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 1) – கற்பக அருணா