in ,

‌தாய்மையின் பரிதவிப்பு (சிறுகதை) – சியாமளா வெங்கட்ராமன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

“சார் சார்” என்று கூப்பிட்டபடி அந்தப் பெரிய வீட்டின் முன் வாசல் கதவு திறந்து இருக்க, அதன் முன் நின்றிருந்த குமார் அந்த தேக்கினால் ஆகிய அழகிய கதவை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அந்தக் கதவில் கஜலட்சுமி உருவம் அழகாக செதுக்கப்பட்டிருந்ததை பார்த்து,  “தாயே நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும் நான் நினைத்து வந்த காரியம் நிறைவேற வேண்டும்” என்று மனம் உருகி வேண்டினான்.

சிறிது நேரம் கழித்து வயதான ஒரு பெண்மணி “யார் வேண்டும்?” என்று கேட்டபடி வாசலுக்கு வந்தார்கள்.

குமார் தன் கையில் இருந்த பேப்பரை காட்டியபடி “இதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அது  இந்த வீடு தானா?” என்று கேட்க

“ஆமாம் நீங்கள் யார்?” என கேட்க

“என் பெயர் குமார். நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை, நீங்கள் கொடுத்த விளம்பரத்தை பார்த்து இந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ள வந்துள்ளேன். அது சரி, இவ்வளவு விவரம் கேட்கும் நீங்கள் யார்? அந்த பெண்ணிற்கு என்ன உறவு?” என்றான்.

அதை கேட்ட அந்த பெண்மணி “நான் அந்தப் பெண்ணின் கணவரின் முதல் சம்சாரம்” என்றாள்.

இதைக் கேட்ட குமார் “என்ன?” என்று ஆச்சரியத்துடன் கூறி ஒரு அடி பின்னால் நடந்தான்.

“ஆமாம் நான்தான் விளம்பரம் கொடுத்துள்ளேன்” என்றாள்.

“எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லை விவரமாக கூறுங்கள்” என்றான் குமார்.

“எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லை. அதனால் சட்டப்படி செய்ய வேண்டிய அனைத்தும் செய்து என் கணவனருக்கு என் தூரத்து சொந்தத்தில் பெற்றோர் இல்லாமல்இ ருந்த 20 வயதுடைய பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தேன். இதற்கு முதலில் என் கணவர் சம்மதிக்கவில்லை, ஆனால் இரண்டு வருடங்களாகியும் அவளுக்கும் குழந்தை இல்லை, இது எங்களுக்கு மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. நாங்கள் வேண்டாத தெய்வங்கள் இல்லை. கடவுள் எங்களுடைய குரலுக்கு செவி சாய்த்தார் அவளும் கருவுற்றாள். நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம்.

விதி யாரை விட்டது? சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்திற்கு துரை சென்றார். அவர் சென்ற பஸ் விபத்துக்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே அவர் மரணம் அடைந்தார். அவர் உடலை கூட எடுத்து வர முடியாத படி சிதைந்து விட்டது. இதில் நான் மிகவும் மனம் உடைந்து போனேன். என் கணவர் தனிமையில் இருக்கும் போது நாம் இந்த சிறு பெண்ணுக்கு துரோகம் இழைத்து விட்டோமா என்று எண்ணி வருந்துவார். ஆனால் நான் என் பெண்ணைப் போல அவளை நடத்தினேன்.

என் கணவன் இறந்ததும் அந்த சிறு பெண். அவள் வாழ வேண்டிய வயதில் விதவையாக இருப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன் அதன் பலன் தான் இந்த விளம்பரம்” என ஒரு மூச்சுடன் சொல்லி முடித்தார்.

அனைத்தையும் கேட்ட குமார், “நான் அந்த பெண்ணை பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“தாராளமாக பார்க்கலாம், ஆனால் அதற்கு முன் நான் சொல்லும் கண்டிஷன் உங்களுக்கு சம்மதமா என எனக்கு தெரிந்த பின் தான் அவளை பார்க்க அனுமதிப்பேன். முதலில் உங்களைப் பற்றி கூறுங்கள். உங்கள் பெற்றோர் யார்? உங்கள் சொந்த ஊர் எது? உங்கள் படிப்பு என்ன?” என்று சரமாரியாக கேட்டாள்.

“என் பெயர் குமார். எனக்கு பெற்றோர் இல்லை, இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். எனக்கு வேறு சொந்தம் கிடையாது, சொத்தும் கிடையாது. என் ஊர் தஞ்சாவூர், உங்கள் இனத்தை சேர்ந்தவன். இதோ என்னுடைய ஆதார் கார்டு உள்ளது, இதை பார்த்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி முடித்தான்.

அந்த அம்மா ஆதார் கார்டு வாங்கி பார்த்துவிட்டு, “இவளை என் மகள் போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவளை எந்த காலத்திலும் விதவை என்று கூறக் கூடாது. அவளுக்கு பிறக்கும் குழந்தை என்னுடைய கணவருக்கு வாரிசாக இருக்கும். ஆனால் அந்த குழந்தை உன் குழந்தை என்று சொல்லி வளர்க்க வேண்டும். எந்த காலத்திலும் அந்த குழந்தைக்கு உண்மை தெரியக் கூடாது. எங்களுடைய எல்லா சொத்துக்களுக்கும் இந்தப் பெண்ணும் அவளுக்குப் பிறகு அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் தான் சொந்தம், ஆனால் உனக்கு என்று மாதாமாதம் ஒரு தொகையை பேங்கில் போட்டு விடுவேன். அதை நீ உன் செலவிற்கு தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குழந்தைக்கும் என் பெண்ணிற்கும் கடைசிவரை நீ பாதுகாவலனாக இருக்க வேண்டும். அவனுக்கு தகப்பன் இல்லை என்ற எண்ணம் வரக் கூடாது. நீதான் அவன் தகப்பன் என்று சொல்லி வளர்க்க வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் என்றால் என் பெண்ணை காட்டுகிறேன். அதற்கு முன் இந்த தகவல்கள் அடங்கிய டாக்குமெண்டை பாரு, இதில் உனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேள். இதற்கு சம்மதம் என்றால் என் பெண்ணை உனக்கு காட்டுகிறேன், உனக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்” என்று கூறி உள்ளே பார்த்து, “ராஜாத்தி வாம்மா” கூப்பிட்டாள்.

வெளியே வந்த பெண்ணை பார்த்ததும் குமார் அசந்து விட்டான். தான் காண்பது கனவா நினைவா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

அந்தப் பெரியவள் அந்தப் பெண்ணை பார்த்து, “ராஜாத்தி, இவன் பெயர் குமார். இவன் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான், அதற்காக வந்திருக்கிறான். உனக்கு அவனை பிடித்து இருக்கிறதா என்று பார், உனக்கு பிடித்திருந்தால் அவனை உனக்கு திருமணம் செய்விக்கிறேன்” என்று கூறினாள்..

“நீங்கள் எது செய்தாலும் எனக்கு நல்லது தான் செய்வீர்கள், எனவே உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் “என்று கூறினாள் ராசாத்தி.

உடனே அந்த பெரியம்மாள் இருவரையும் கோவில் போன்று இருக்கும் சாமி அறைக்கு அழைத்துச் சென்று லட்சுமி படத்தில் போட்டிருந்த தன் கணவன் தனக்கு கட்டிய தாலியை எடுத்து குமார் கையில் கொடுத்து ராஜாத்தியின் கழுத்தில் கட்ட சொன்னாள் தன் கையால் குங்குமத்தை எடுத்து ராஜாத்தி நெற்றியில் இட்டு இருவரையும் தாய் ஸ்தானத்திலிருந்து ஆசிர்வாதம் செய்தாள்.

“இப்பொழுது தான் என் மனம் சாந்தி அடைந்துள்ளது. நான் ராசாத்திக்கு துரோகம் செய்து விட்டேனோ என்று தினம் தினம் கடவுளிடம் மனம் உருகி அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். ஒரு தாயின் பரிதவிப்பு கடவுளின் காதில் கேட்டு நல்ல தீர்வு கிடைத்துள்ளது, அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறி நமஸ்காரம் செய்தாள்.

அதே போன்று குமாரையும் ராஜாத்தியையும் கடவுளுக்கு நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள சொன்னாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நதியோர நாணல்கள் ❤ (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன் மும்பை

    மாறாதவைகள் (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன், மும்பை