in ,

சூப்பர் ஸ்டார் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

            சூப்பர் ஸ்டார் ‘ஆகாஷ்காந்த்’தின் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுக் கார் அந்தக் கல்யாண மண்டபத்தின் கேட்டினுள் நுழைந்து அதன் விஸ்தாரமான போர்ட்டிகோவை நோக்கி வழுக்கிக் கொண்டு சென்றது.

            ‘டிரைவர்… காரை அப்படியே ஸ்லோ பண்ணி… கொஞ்சம் தள்ளி… ஓரங்கட்டி நிறுத்துப்பா”  சூப்பர் ஸ்டார் ‘ஆகாஷ்காந்த்” மெல்லிய குரலில் ஆணையிட, அவர் சொன்னபடியே காரை போர்ட்டிகோவிற்கு சற்றுத் தள்ளி நிறுத்திக் கொண்டார் டிரைவர்.

            அப்போது போர்ட்டிகோவில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த காரிலிருந்து இளம் நடிகன் சிவனேஷ் இறங்கிக் கொண்டிருந்தான்.  சமீபத்தில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் “சாக்லேட் ஹீரோ”வாக மின்னிக் கொண்டிருப்பவன்.

கல்யாண வீட்டார்  ஓடோடி வந்து அவனை வரவேற்க அங்கிருந்த சில இளம்பெண்களும்… பல சுடிதார் சுந்தரிகளும் சாக்லேட் ஹீரோவான சிவனேஷை வைத்த விழி வாங்காமல் பார்த்து பெரு மூச்சு விட்டனர்.  சிலர் பாய்ந்து வந்து அவனோடு செல்ப்பி எடுத்துக் கொண்டனர்.

            அவர்களையெல்லாம் பார்த்து ‘ஹாய்…ஹலோ..” என்று கையசைத்தபடி மண்டபத்தினுள் நடந்த அவனைப் பின் தொடர்ந்து சென்ற கூட்டம் ஓரிரு நிமிடங்களில் மீண்டும் வாசலுக்கு வந்து அடுத்து வரப்போகும் வி.ஐ.பி.யை வரவேற்க காத்திருக்கையில்.

            ‘டிரைவர்… காரை இப்ப விடு” என்றார் சூப்பர் ஸ்டார் ‘ஆகாஷ்காந்த்”.

            நிதானமாக காரை போர்ட்டிகோவை நோக்கி நகர்த்திய டிரைவருக்கு குழப்பமாகவும் சற்றுக் கோபமாகவும் இருந்தது.

            ‘எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இவர்?.. தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட நாப்பதாயிரம் ரசிகர் மன்றங்களும் …கோடிக்கணக்கான ரசிகர்களும் இருக்கற மாபெரும் நடிகர்… கடந்த நாற்பது வருஷமா ஃபீல்டுல முதலிடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டுள்ள மெகா ஸ்டார்… சி.எம்.மிலிருந்து, பி.எம்.வரைக்கும் எல்லோரையும் போனில் அழைத்துப் பேசக் கூடிய அளவிற்கு செல்வாக்குடையவர்… இவர் போயி நேத்திக்கு வந்த அந்த சுண்டைக்காய் நடிகனுக்கு பயந்து காரை ஓரங்கட்டி நிறுத்திட்டு… அவன் உள்ளார போனதும் போறாரே… என்னாச்சு இவருக்கு?”.  அந்த டிரைவரும் ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகனாய் இருந்ததால் அவனால் அந்தக் காட்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

            நீண்ட நேரமாய் மனதை அரித்துக் கொண்டிருந்த தன்னுடைய ஆதங்கத்தை கல்யாண மண்டபத்திலிருந்து திரும்பும் போது அந்த டிரைவர் கேட்டே விட, “ஹா… ஹா… ஹா” என்று வழக்கமான தனது டிரேட் மார்க சிரிப்பை உதிர்த்த சூப்பர் ஸ்டார் ஆகாஷ்காந்த்

‘டிரைவர்… அந்த சிவனேஷ் வந்திறங்கிய அதே நேரத்தில் நானும் போய் அங்க இறங்கினா என்ன நடக்கும்?… கல்யாண வீட்டுக்காரங்க அவரை ‘அம்போ”ன்னு விட்டுட்டு என்கிட்ட ஓடி வந்து என்னை வரவேற்க ஆரம்பிப்பாங்க… அது மட்டுமில்ல… மொத்தக் கூட்டமுமே அவரை ஒதுக்கிட்டு என்னைப் பார்கக ஓடி வந்திடும்… பாவம்…வளரும் இளம் நடிகர்… மனசு நொந்துடுவார்… அந்தக் காயம் ரொம்ப மோசமானது தெரியுமா?… அவ்வளவு சீக்கிரத்துல ஆறாது… இதையெல்லாம் எப்படி நான் இவ்வளவு கரெக்டா சொல்றேன்னு பார்க்கறீங்களா?… நான் வளரும் இளம் நடிகனா இருந்த காலத்துல பல தடவ அந்தக் காயத்தை வாங்கியிருக்கேன்… வேதனைல ரொம்ப நாளா துடிச்சிருக்கேன்… அதனாலதான் நான் பட்ட அந்த வேதனையை இன்னொருத்தர் படக்கூடாதுன்னு ஓரங்கட்டி நின்னுட்டு அவர் போனதும் போனேன்… கண்ணா… இந்த ஃபீல்டு ரொம்ப மோசமா ஃபீல்டு… யாரும் யாரையும் வளர்த்து விட விரும்ப மாட்டாங்க… ஆனா நான் அப்படியில்லை…”

            திரும்பி அந்த சூப்பர் ஸ்டாரை நெகிழ்வுடன் பார்த்தார் டிரைவர். ‘அய்யா நீங்க சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… சூப்பர் மனிதரும் கூட” அவர் மனம் கூவியது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

மத்யமாவதி (பகுதி 9 – சஹானா) – சாய்ரேணு சங்கர்

நீயும் ஒரு தாயே! (கவிதை) – வைஷ்ணவி