in ,

செய்தற்கு அரிய செயல் (சிறுகதை) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     தன் மானேஜர் பிரசாத் அப்படிச் சொன்னதும் பிரபல நடிகை சுவஸ்திகா வியப்பானாள். “என்ன?… எனக்கு மேக்கப் போடனும்னு சொல்லியும் கூட அந்த பியூட்டி பார்லர் லேடி வர மறுத்துட்டாளா?… ஆச்சரியமாயிருக்கே!”

           “யெஸ் மேடம்… அவங்க இன்னிக்கு தேதிக்கு வேற ஒரு கல்யாணத்துல மணப்பெண் மேக்கப்புக்கு ஏற்கனவே கமிட் பண்ணிட்டாங்களாம்… அதனால அதை விட்டுட்டு இங்க வரமாட்டாங்களாம்!”

      “ஸ்டுப்பிட்… சுத்த விவரம் புரியாத பெண்ணாயிருக்காளே!… பிரபல நடிகை சுவஸ்திகாவுக்கு மேக்கப் போட்டுட்டு… அதையே விளம்பரமாய்ப் பயன்படுத்தி… தன்னோட பியூட்டி பார்லரை டெவலப் பண்ணலாம்… ஒருவேளை அவளுடைய மேக்கப் திறமை ரொம்ப நல்ல இருந்தா… நானே அவளை என்னோட அடுத்த படங்களுக்கு ரெகமண்ட் பண்ணினாலும் பண்ணுவேன்… அப்புறம்…சினி ஃபீல்டுலே பெரிய மேக்கப் உமன் ஆயிடலாம்… லைஃப் ஸ்டைலே மாறிப் போகும்… இது ஏன் அந்தப் பெண்ணோட புத்திக்கு எட்டலை?”

“தெரியலை மேடம்!… நான் தெளிவாகவே சொன்னேன் “இந்த மாதிரி… பிரபல நடிகை சுவஸ்திகாவுக்கு மேக்கப் போடற மேக்கப் உமன்…சென்னைல இருந்து வந்திருந்தாங்க… ஆனா… இங்க அவுட்டோர் சூட்டிங் வந்த இடத்துல… அவங்களுக்கு… திடீர்ன்னு வைரஸ் ஃபீவர் அட்டாக் ஆயிடுச்சு… அவங்க திரும்ப சென்னைக்கே போயிட்டாங்க… அதான் உங்களை கூப்பிடறோம்”ன்னு!”

“ப்ச்… சென்னைல எனக்கு மேக்கப் போடறதுக்காக சான்ஸ் கேட்டு என் வீட்டு வாசல்ல வந்து பியூட்டீஸியன் கோர்ஸ் படிச்ச பல பேர் தவம் கிடக்கறாங்க… இங்க… இந்த லேடி என்னடான்னா…” சலித்துக் கொண்டாள் நடிகை சுவஸ்திகா.

அப்போது அறைக்குள் வந்த டைரக்டர் பரமேஷ், “என்ன மேடம்… மேக்கப் உமன் கிடைச்சாங்களா?… இல்லை சென்னைல இருந்தே வரவழைக்கலாமா?”

“ம்.ம்…ம்… ஒரு மணி நேரம் டைம் குடுங்க சார்… அந்த பியூட்டி பார்லர் பெண்ணை நேரில் வரவழைச்சு நானே பேசிப் பார்க்கறேன்”

“ஓ.கே.மேடம்… எதுவானாலும் கொஞ்சம் சீக்கிரமே சொல்லிடுங்க…ஹீரோவோட கால்ஷீட் நாளையோட முடியுது… அவர் நாளை மறுநாள் ஃபாரீன் கிளம்பறாராம்!” சொல்லி விட்டு டைரக்டர் பரமேஷ் நகர,

“மேனேஜர்… நான் பர்ஸனலா மீட் பண்ணனும்னு சொல்லி… அந்தப் பெண்ணை கூட்டிட்டு வாங்க!”

அவசரமாக புறப்பட்டு சென்ற மேனேஜர் பிரசாத், அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பியூட்டி பார்லர் பெண்ணோடு வந்து நின்றான்.

மேலிருந்து கீழ் வரை அந்தப் பெண்ணை நுட்பமாய் நோட்டமிட்ட நடிகை சுவஸ்திகா இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகையைத் தவழ விட்டவாறே, “எனக்கு மேக்கப் போடக் கூப்பிட்டதற்கு வர முடியாதுன்னுட்டியாமே”

“அமாங்க மேடம்… இன்னிக்கு மதியத்துக்கு மேல எங்க ஊர் தர்மகர்த்தாவோட பொண்ணுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ண நான் போகணும்!…” அப்பெண்ணின் பேச்சில் ஒரு பணிவும்… பவ்யமும் இருந்தது.

“எவ்வளவு கிடைக்கும் அந்த மேக்கப்புக்கு?”

“அறுநூறு ரூபாய்”

“ஹா…ஹா….ஹா…”என்று வாய் விட்டுச் சிரித்தவள் தன் மேனேஜர் பிரசாத் பக்கம் திரும்பி, “மேனேஜர்… நீங்க…இவங்ககிட்ட நாம குடுக்கப் போற தொகையை சொல்லவே இல்லையா?”

“சொன்னேன் மேடம்”

“எவ்வளவு சொன்னீங்க?”

“இருபத்தஞ்சாயிரம் மேடம்”

“இஸிட்?… ஓ.கே. இப்ப நான் சொல்றேன்… ஃபிஃப்டி த்வுஸண்ட்… அம்பதாயிரம் தர்றேன்… போம்மா… போய் உன்னோட மேக்கப் கிட்டை எடுத்துக் கிட்டு உடனே வா!… ம்.ம்…பிரசாத் இவங்களை என் காரிலேயே கூட்டிட்டு போயிட்டு… திரும்ப கூட்டிட்டு வாங்க!”

“மேடம்… நான்… வர்றேன்னு சொல்லவேயில்லையே”

“வாட்?… அம்பதாயிரம்ன்னு சொல்லியும் வர மறுக்கறே!… இன்னும் அதிகம் வேணுமா?”

“மேடம்… நீங்க ஒரு கோடி ரூபாய் குடுத்தாலும்…நான் வர மாட்டேன்… ஏன்னா… ஒரு தடவை புக்கிங் பண்ணி வாக்கு குடுத்திட்டேன்னா… எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த வாக்கு தவற மாட்டேன்!… அதுவும் மணப்பெண் அலங்காரத்துக்கு ஒத்துக்கிட்டேன்னா… உயிரே போனாலும் அதைச் செய்து முடிச்சிட்டுத் தான் சாவேன்!”

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளை சுவஸ்திகா ஊடுருவிப் பார்க்க, “மேடம்… வாக்குத் தவறுவது மனுஷனுக்கு அழகல்ல… அதிலும் பொம்பளைங்க வாக்குத் தவறுவது… கிட்டத்தட்ட துரோகம் இழைக்கற மாதிரி… அதனால… என்னைய மன்னிச்சுக்கங்க!…” சொல்லி விட்டு திரும்பிய அந்த பியூட்டி பார்லர் பெண், இரண்டடி சென்றதும் நின்று, திரும்பி, “மேடம்… அறுநூறு ரூபாய் சின்னத் தொகைதான்… ஆனா..அந்த மணப்பெண்ணோட அப்ப… தர்மகர்த்தா… பொன்னுரங்கம் நான் இந்த பியூட்டிசியன் கோர்ஸ் படிக்க பணஉதவி செஞ்சவர்… அதாவது  இந்த அழகுக்கலை ஃபீல்டுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர்… அப்படி என்னை அறிமுகப்படுத்தியவருக்கே நான் துரோகம் பண்ணலாமா?”

அவள் செல்வதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த சுவஸ்திகாவின் மனதில் நேற்றைய நிகழ்வுகள் படமாய் ஓடின.

“த பாருங்க மேடம்!… டைரக்டர் ராம்தேவ் உங்களை ஃபீல்டுக்கு அறிமுகப்படுத்தியவரா இருக்கலாம்… ஆனா தொடர்ந்து அஞ்சாறு படங்கள் தோல்வியடைஞ்சதினால… இன்று அவர் நொடிஞ்சு போய்க் கிடக்கார்… எதோ பாவம்னு… கை குடுக்கறதுக்காக நீங்களும்… அவருக்கு கால்ஷீட் குடுத்திருக்கீங்க!… அது தப்பில்லை… ஆனா… ஒரு பெரிய பேனர் ஒண்ணு… உங்களைத் தேடி வந்து… அதே தேதிகளை கேட்கும் போது… நீங்க யோசிக்காம அந்த தேதிகளை இவங்களுக்கு மாத்தி தரலாம்… டைரக்டர் ராம்தேவ்கிட்டே “ஸாரி”ன்னு ஒரே வார்த்தை சொல்லிட்டுப் போயிட்டேயிருக்கலாம்”

தொடர்ந்து மேனேஜர் பிரசாத் செய்த மூளைச் சலவையால் நிறம் மாறிப் போன சுவஸ்திகா தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டருக்கு துரோகம் செய்யச் சம்மதிக்கலானாள்.

“ச்சே!… கிராமத்துல பியூட்டி பார்லர் நடத்தற ஒரு சாதாரண பெண்ணுக்கு இருக்கற நாணயமும்… நன்றியுணர்வும் கூட புகழ் பெற்ற நடிகையான எனக்கு இல்லையே!… தனக்கு உதவிய தர்மகர்த்தாவுக்காக எனக்கு மேக்கப் போடுற எப்பேர்ப்பட்ட சான்ஸை தூக்கி எறிஞ்சாளே… அவ எங்கே… என்னை சினி ஃபீல்டுக்கு அறிமுகப்படுத்திய டைரக்டருக்கு துரோகம் செஞ்ச நான் எங்கே?”

“மேனேஜர்… மேனேஜர்!”

ஒடி வந்த பிரசாத்,  “சொல்லுங்க மேடம்!”

“என்னோட கால்ஷீட் டைரக்டர் ராம்தேவ்வுக்கே இருக்கட்டும்… மாற்ற வேண்டாம்… அந்த பெரிய பேனர்க்கு “இப்போதைக்கு நோ”ன்னு சொல்லிடுங்க!”

“மேடம்… நீங்க..”

“ப்ளீஸ்… டூ வாட் ஐ ஸே!”

அவளின் அதட்டலில் அரண்டு போனவன், அமைதியாய் நகர்ந்தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நினைவுகளைத் தேடி (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 16) – தி.வள்ளி, திருநெல்வேலி