in

சாபுதானா கிச்சடி (பானுமதி வெங்கடேஸ்வரன்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

சாபுதானா கிச்சடி

தேவையான பொருள்கள்

  • ஜவ்வரிசி – 4 குழிக்கரண்டி அல்லது ஒரு டம்ளர் 
  • மீடியம் சைஸ் உருளைக் கிழங்கு – 2
  • பச்சை மிளகாய் – 3
  • தக்காளி    – 1
  • உப்பு – 1 1/4 ஸ்பூன் 
  • தோலுரித்த நிலக்கடலை – 1 மேஜைக்கரண்டி 

தாளிக்க

  • எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி 
  • கடுகு அல்லது சீரகம் –  1 டீ ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன் 
  • கடலைப் பருப்பு   – 1 டீ ஸ்பூன் 
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

  • சாபுதானா கிச்சடி செய்வதற்கு ஜவ்வரிசி நன்றாக ஊறியிருக்க வேண்டும், அதே சமயத்தில் நீர் இருக்கவே கூடாது.
  • எனவே இரவு ஏழு மணிக்கு சாபுதானா கிச்சடி செய்ய வேண்டும் என்றால் காலை ஏழு மணிக்கே ஜவ்வரிசியை களைந்து ஊற வைத்து விட வேண்டும்
  • மூன்று மணி நேரம் ஊறிய பிறகு அதை வடி கட்டி, பின்னர் ஒரு மெல்லிய துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வற்றி விடும். 
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை பொடியாக  அரிந்து கொள்ளவும் 
  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்க்கவும்
  • வெங்காயத்தை வதக்கி விட்டு பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உருளைக் கிழங்கு ஆகியவற்றை சேர்க்கவும்
  • உருளைக்கிழங்கு கொஞ்சம் வெந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி அதன் பிறகு ஊறி, வடிகட்டிய ஜவ்வரிசியை சேர்க்கவும்
  • அதில் உப்பு, மஞ்சள் பொடி, இவைகளையும் சேர்த்து வதக்கவும்
  • பின்னர் தோலுரித்த கடலையை அப்படியே முழுதாகவோ அல்லது மிக்சியில் ஒன்றிரெண்டாக பொடி செய்தோ சேர்த்து நன்கு கிளறி  இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்
  • சாபுதானா என்னும் ஜவ்வரிசி கிச்சடி தயார்
  • இதை தேங்காய், கொத்துமல்லி சட்னியோடு சாப்பிட நன்றாக இருக்கும்

குறிப்பு:

ஊறிய ஜவ்வரிசியை நன்றாக வடிகட்டாவிட்டால் கிச்சடி உதிர் உதிராக வராது. வாணலியில் ஈஷிக்கொள்ளும். வடி கட்டிய பின் சற்று நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் கூட, ஈரப்பசை இல்லாததால் உதிர் உதிர் கிச்சடி கிடைக்கும்

#ad

ஆதி வெங்கட் எழுதிய சமையல் புத்தகங்கள்👇

English Cook Books 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

மசால் வடையும் பாயாசமும்😍 (நகைச்சுவை சிறுகதை) எழுதியவர் : லக்ஷ்மீஸ் பவன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

மோட்சத்தைத் தேடி…(சிறுகதை) – சுபாஷினி பாலகிருஷ்ணன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு